Saturday, November 29, 2008

Who are the NRI's


வளமையான வாழ்விற்காக

இளமைகளை தொலைத்த


துர்பாக்கியசாலிகள் !




வறுமை என்ற சுனாமியால்


அரபிக்கடலோரம்கரை ஒதுங்கிய


அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !




சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது


வறுமை எனும்சூறாவளியில் சிக்கிய


திசை மாறிய பறவைகள் !




நிஜத்தை தொலைத்துவிட்டு


நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும்


அபாக்கிய சாலிகள் !




தொலைதூரத்தில் இருந்து கொண்டே


தொலைபேசியிலே குடும்பம்


நடத்தும் தொடர் கதைகள் !




கடிதத்தை பிரித்தவுடன்


கண்ணீர் துளிகளால்


கானல் நீராகிப் போகும்


மனைவி எழுதிய எழுத்துக்கள்!




ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும்


இல்லறம் நடத்தும்


கம்ப்யூட்டர் வாதிகள் !




நலம் நலமறிய ஆவல் என்றால்


பணம் பணமறிய ஆவல் என கேட்கும்


ஏ . டி . எம் . மெஷின்கள் !




பகட்டான வாழ்க்கை வாழ


பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த


பரிதாபத்துக்குரியவர்கள் !




ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே


மனைவியின் மூச்சுக்காற்றை


முற்றும் துறந்தவர்கள் !




வளரும் பருவத்திலே வாரிசுகளை


வாரியணைத்து கொஞ்சமுடியாத


கல் நெஞ்சக்காரர்கள் !




தனிமையிலே உறங்கும் முன்


தன்னையறியாமலே


தாரை தாரையாக


வழிந்தோடும்கண்ணீர் துளிகள் !




அபஷி என்ற அரபி வார்த்தைக்கு


அனுபவத்தின் மூலம்


அர்த்தமானவர்கள் !




உழைப்பு என்ற உள்ளார்ந்த


அர்த்தத்தை உணர்வுபூர்வமாக


உணர்ந்தவர்கள்!




முடியும் வரைஉழைத்து விட்டு


முடிந்தவுடன் ஊர்


செல்லும் நோயாளிகள் !




கொளுத்தும் வெயிலிலும்


குத்தும் குளிரிலும்


பறக்கும் தூசிகளுக்கும் இடையில்


பழகிப்போன ஜந்துகள்!




பெற்ற


தாய்க்கும் வளர்த்த


தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும்


பெற்றெடுத்த குழந்தைக்கும்


உற்ற குடும்பத்திற்கும்


இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !




Source: Bilal, Eta Melco Engineer, Doha - Qatar

No comments: