Saturday, February 21, 2009

தேசபக்தி திருத்தொண்டர்!



இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம்" என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.




வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். "கர்மயோகின்" என்ற வார ஏட்டைத் தொடங்கினார். துணிந்த வாலிப உள்ளங்களே காரியமற்ற கனிந்த உள்ளத்தோடு வருக! என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்த்து. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார்.



ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை."ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும் தானே நிறுவி இருக்கிறொம். இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்."அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?""தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக்கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்தபதில்.



அவர் ஒரு வழியாக தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்றுதடைவிதித்தன.1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது.



ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.புரட்சி உலகக் கூடங்களில் படம்போட்ட வீரராக அனுபவக் களஞ்சியமாக 1912 ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர்.. "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்..

அதற்காக அவர் அல்ஹிலால் என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. இந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.


இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது.மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள்விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும். இந்த ஏட்டில் ஆசாத் என்ற பூனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள்.

இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது.ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் அல்பலாக் என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப் டெல்லி, உத்திரபிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார்.

ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். 1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின்தலைமையில் தான் நிறைவேற்றப்பட்டது..பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்க்ளின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார்.அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.. ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது.

கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்."அவரை கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன் தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார்


நன்றி: சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

ஷேக் அப்துல் காதர்

Thursday, February 19, 2009

அரசியல் கூத்து - 1








கலைஞர்: இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண அன்னை சோனியாவும், மன்மோகன் சிங்ஜியும், பிரனாப் முகர்ஜியும் தீவிர விவாதத்தில் இருக்கின்றார்கள் என தமிழக மக்களுக்கும் கழகக் கண்மணிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.





பிரணாப்: மன்மோகன் ஜி, மேடம்கிட்ட என்னை அடுத்த பிரதமரா ஆக்க சிபாரிசு செய்யுங்களேன்!
மன்மோகன்: அட போய்யா! என் நிலமையே தங்கிடுதத்தம் போடுது! நீ வேற... ராகுல் காந்தியை எப்படி பிரதம வேட்பாளரா ஆக்குறதுங்கற ஆழ்ந்த சிந்தனையிலே சோனியாஜி இருக்கிறாங்க பாரு!




ஜெயலலிதா: ஹையோ.. ஹையோ.. அடுத்த பிரதமர் நான் தான்னு இவங்க யாருக்கும் தெரியல பாரு!



நான் கடவுள் - நம்பலாமா?



கடவுள் இருக்காருன்னு


சொல்றவனையும் நம்பலாம்.


கடவுள் இல்லேன்னு


சொல்றவனையும் நம்பலாம்


ஆனா


நான் தான் கடவுள் ன்னு


சொல்றவனை மட்டும்


நம்பவே கூடாது


- நன்றி கமலஹாசன்....

Wednesday, February 18, 2009

கொஞ்சம் சிந்திக்கலாமா? பாகம் - 2




1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்



2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்



3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம்
ஆசிரியர் அல்லர்.



4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது
தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!



5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!



6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று
விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.



7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!



8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.



9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை
சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்
வாழ்நாளே இழப்பு.



10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.



11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.



12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.



13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.



14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம்
நல்லதாய் இருப்பதில்லை



15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என
எண்ணிக்கொள்



16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்



17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்



18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்



19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது
சிறப்பாகும்



20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை
வலம் வந்துவிடும்



21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்



22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக
ஆக்கிக்கொள்வோம்.



23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு
இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.



24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை
நடிக்கிறார்கள்.



25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான்
முன்னேற முடியும்



26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்
ஆர்வத்துடன் பணிபுரிவர்



27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,
இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்



28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய்
என்பதற்கான எச்சரிக்கை.



29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,
நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.



30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின்
தவறான விளக்கம் தான் கடினம்.



31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும்
சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.



32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல்


இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.



33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

தெய்வங்கள் எழுக - வாஸந்தி


'அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது ' என்கிற வாக்கியம் தன்னுள் நோக்கி பரப்ரும்மத்தை உணர்ந்த தருணத்தில் ஒரு மானுடனின் எண்ணத்தில் ஜனித்திருக்கவேண்டும்- ஆனந்தத்திலிருந்து பிறந்தோம்; உறைகிறோம்; ஆனந்தத்திற்கே திரும்புகிறோம் என்கிற உபநிஷத்தின் வாக்கியம் போல.


இதைச் சொன்ன ஞாநிகள் சகஜ யதார்த்த வாழ்விலிருந்து வெகு தொலைவில் இருந்திருக்கவேண்டும். அல்லது தாமே சிருஷ்டித்துக்கொண்டிருந்த உலகில் வாழ்ந்திருக்கவேண்டும்- கண்களைமூடிக்கொண்டு அஸ்தமித்துவிட்டது என்று நினைக்கும் பூனையைப்போல. அல்லது உலகில் நடக்கும் வன்முறையை, மனிதனை மனிதன் வெறுத்து அழிப்பதைக் கண்ட அதிர்ச்சியில் அல்லது வருத்தத்தில், எப்பேற்பட்ட வாழ்க்கையை பாழடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்த்தச் சொல்லப் பட்ட வார்த்தைகளாகவும் இருக்கலாம்.



மனிதன் தோன்றிய நாளிலிருந்து மனித வரலாறு வன்முறை மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது. பெண் ஒருத்தி கூட இருந்ததும், காதல் பிறந்ததும், குடும்பம் ஏற்பட்டதும் வெறும் மகிழ்ச்சி மிக்க பரிணாமம் மட்டுமல்ல , அவை போட்டிக்கும் பொறாமைக்கும் பேராசைக்கும் , க்ரோதத்துக்கும் வித்திட்டன. மனிதனுள் தேவன் இருக்கிறான் என்கிற பொருளில் - நீயே அது, 'தத்வமஸி' ,'The Kingdom of God is within you' என்று மறைகள் சொன்னாலும் 'மாயை' என்கிற பாமரத் திரை மனிதனைப் போர்த்துவதால் இறைவன் சிலையாகி சமைந்து போனான். திடப் பொருளாகிப் போனான்.


மனிதனைவிட்டு இறைமை வெளியேறிவிட்டதால் , தேவ/அசுர/நர என்னும் குணங்களில் மானுடம் வெறும் அசுர குணத்துடன் எஞ்சிப் போனதாகத் தோன்றுகிறது. சில மகா அசுரர்கள் கையில் சிக்கிக்கொண்டு பூமி


நிலைதடுமாறிக்கொண்டிருக்கிறது. எத்த புத்தனும் நீதி சொல்ல வரப்போவதில்லை. 'சம்பவாமி யுகே யுகே' என்று தெய்வம் அவதாரமெடுத்து வரும் கதைகள் புராணங்கள் சொல்வது. நிஜத்தில் நடக்காது.
.இன்று இந்த எண்ணம் என்னை மிகவும் வலுவாகத் தாக்குகிறது. நம்மை அச்சுறுத்தும் அவலத்திற்கு நிவர்த்தியோ ஆறுதலோ கிடைக்காத விளிம்பில் உலகம் நிற்பதாகக் கலக்கம் ஏற்படுகிறது.


இன்றைய தினத்தந்தி நாளேட்டில் ஒரு புகைப்படம் செய்தியுடன் வெளியாகி இருக்கிறது. புகைப் படம் சொல்லும் சேதி என்னை உலுக்கிவிட்டது. இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அப்பாவி தமிழர்கள் தங்கி இருக்கும் பகுதிகள் மீது சிங்கள ராணுவம் வீசிய குண்டின் விளைவைக் காட்டும் படம்.மூங்கிலாறு என்ற இடத்தில் ரோட்டு ஓரம் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கி இருந்த குடும்பம் மீத விழுந்து வெடித்த குண்டின் தாக்குதலில் கருகிக் கிடக்கின்றன உடல்கள்.


பத்து பன்னிரெண்டு இருக்கும் - வெந்துபோன கால்களும் கைகளும் தலைகளும். அது ஏதோ தினமும் நாம் பார்க்கும் ரோட்டோரம் கொட்டிக்கிடக்கும் குப்பை கூளம் என்று நினைத்து ஒதுங்கி தெருவின் மற்ற பகுதியில் இரண்டு பெண்கள் அன்றாட வேலையைக் கவனிக்கச் செல்பவர்கள் போல நடக்கிறார்கள். ஒரு சைக்கிளை நகர்த்திக்கொண்டு ஒரு ஆள் போகிறார். வெந்த உடல்களின் கோரக் காட்சியும் அவர்களது சகஜமான நடையும் என் நாடி நரம்பெல்லாவற்றையும் உலுக்கிவிட்டன. எப்படிப்பட்ட மனநிலையில் அவர்கள் நடந்திருப்பார்கள்?


செத்தவர்கள் யாரோ நமக்குத் தெரியாதவர்கள் என்ற சமாதானத்திலா? நல்ல வேளை இன்று நம் தலை தப்பிற்று என்ற நிம்மதியிலா? ஆண்டவா எப்போது நிற்கும் இந்த வெறியாட்டம் என்று பிரார்த்தனை செய்ய ஓடுகிறார்களா ? காணாமற்போன ஈசனை எங்கு தேடுகிறார்கள்? அவர்கள் யாரிடமும் ஓடமுடியாது. அவர்களுக்கு உதவ யாருமில்லை. மிருகங்கள் தற்காத்துக் கொள்வது போல விடாது பெய்யும் குண்டுமழையிலிருந்து தப்பிக்க ஓடினால் போதும். இன்று பிழைத்தோம் - அது போதும். வேறு உணர்வுகளோ பேராசையோ இல்லை. பிணக்குவியல் கூட அர்த்தமற்றுப் போய்விட்டது. அது ஒரு குப்பை, நமக்குச் சொந்தமில்லை. சொந்தமாக இருந்தாலும் நின்று பார்க்க நேரமில்லை. அடுத்தகுண்டு நம் மேல் விழலாம்.



எதற்காக இந்தப் போர் நடக்கிறது ? யாருக்காக ,எந்த ஆதாயத்துக்காக நடக்கிறது என்கிற கேள்விகளை அவர்கள் மறந்து கன காலம் ஆகிறது. போரும் , குண்டுவீச்சும் வாழ்வின் அங்கமாகிவிட்டன. நித்ய கண்டம் வாழ்க்கை என்பது. எப்போது இது துவங்கியது? யாருக்கும் நினைவிருக்காது. மிதமிஞ்சிய துக்கத்தில், மிதமிஞ்சிய வலியில் மூளை செயலிழந்து போகும். கேள்வி வேண்டாம். என்னவோ நடக்கிறது. யாரோ அசுரர்கள் அவர்களது வாழ்வை ஆட்டுவிக்கிறார்கள். இப்படித்தான் ஓடணும், சாகணும் என்று சபிக்கப் பட்டதுபோல. சபிக்கப் பட்ட பூமி. சபிக்கப்பட்ட மொழி. பலப் பல காலமாக மனித மனத்தில் தோன்றிய வன்மமும், குரூரமும், பழிவாங்கலும், க்ரோதமும் அநீதியும் அராஜகமும் தொடர்ந்தால் ,பூமி தாங்காது. நான் பெற்ற மாந்தர்கள் பாரமாகிப் போனார்கள் என்று வெடிக்கும். என்னால் காப்பாற்ற முடியாது, உங்களது அசுரத்தனம் ஓயும்வரை என்று ஓலமிடும்.


லட்சக்கணக்கான அற்ப ஆயுளில் மடிந்த பெண்களின் குழந்தைகளின், ஆண்களின் ஆவிகள் காற்றில் அலைகின்றன. பரிதவிப்புடன் ஓலமிடுகின்றன. துப்பாக்கி ஏந்தி நிற்பவர்களை அலைக்கழிக்கவில்லையா! துன்புறுத்தவில்லையா? ஒரே நாளில் ஆறு ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டதாகச் செய்தி சொல்கிறது . பூமி துளையுண்டு சல்லடையாகப் போயிருக்கும் . அதனூடாக மானுடம் சரிந்து கொண்டிருக்கிறது.



எல்லாருக்கும், குண்டு வீசுபவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காது செவிடாகிவிட்டது. மனசு மரத்து விட்டது. அவர்களது உலகம் ஒரு வெறியின் உந்துதலில் இயங்குகிறது. அந்த உலகத்துக்கு வெளியே இருந்து பதைத்து , இதயம் படைத்தவர்கள் சொல்லும் எதுவும் செவியில் விழாது.
இங்கேயும் தினம் ஒரு கூத்து நடக்கிறது. அதை வைத்து அரசியல் நடக்கிறது. அரசியல் தலைவர்கள் செய்தியில் வலம் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ராட்டினத்தில் குதிரைமேல் அமர்ந்திருப்பவரின் முகங்கள் சுழன்று வருவதுபோல மாறி மாறி முக்கியத்துவம் பெறுகிறார்கள்.


அங்கே அப்பாவி மக்கள் சாவது மட்டும் நிற்கவில்லை. இவர்களது பேச்சால் உணர்ச்சி வசப்பட்டு சில மெல்லிய இதயம் படைத்தவர்கள், வாழவேண்டிய இளைஞர்கள், தீக்குளிக்கிறார்கள், தமிழ் நாட்டில், மலேசியாவில், ஸ்விட்சர்லாந்தில். முல்லைத்தீவில் அப்பாவித் தமிழர்கள் சாவது ஓயவில்லை.



மகாப் பெரிய சக்தி விரயமாக , அக்கிரமமான விரயமாக இருக்கிறது எனக்கு. இது எதில் முடியப் போகிறது ? அந்தப் புகைப் படத்தில் பாதையில் நடந்து செல்பவர்களின் எதிர்காலம் என்ன என்கிற கேள்விக்கு விடை அவர்களுக்கே தெரியாததால்தான் விரைகிறார்கள், திரும்பிப் பாராமல், பிணக்குவியலைப் பார்க்க நிற்காமல்.



அந்த விடை, போர் தொடுப்பவரிடம் தான் இருக்கமுடியும். அவர்களது வெறி அடங்கினால் தான் விடையைத் தேடும் எண்ணம் வரும். எண்ணத்தில்தான் மொழி பிறக்கும். பேசும் வல்லமை வரும். பேச்சின் மூலமே மற்றவரைப் புரிந்துகொள்ளமுடியும். புரிதலில்தான் விடை கிடைக்கும்.
எல்லாருமாக இப்போது தேடப் புரப்படவேண்டும். காணாமல் போன மொழியை. பூமி பட்ட காயம் போதும். பூமி புத்திரர்கள் சிதறிப்போனது போதும் . தங்கிவிட்டவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே சவமாகிப் போனது போதும்.



மொழி பிறக்கட்டும். அப்போது தான் கல்லுக்குள் இருந்து ஈசன் வெளிப்படுவதுபோல கல் மனத்துள் நேயம் சுரக்கும். அதற்காகவே -- சிலையாகி சமைந்து விட்ட ஆண்டவா, உயிர்த்தெழு. எல்லோருக்குள்ளும்.


பெரியாரும்... இராஜாஜியும்...

பார்ப்பனத் தோழர்களே!

நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது.

இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை.

பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.எனக்கு, “நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்” என்கிற நம்பிக்கை உண்டு.

இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35- ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை.

இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10- ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன்.

பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன்.

வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன்.

இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன். தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது.இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

Tuesday, February 17, 2009

அறிவுப் புரட்சி ஓங்குக !



பேராசிரியர் சே.மு.மு.முகமதலி


( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )

அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார்.



அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள் ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .



இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸ்லிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார் ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?



விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர் கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர் ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம் மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர்.



கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.

உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும் ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஒரு ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம் அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன பல்கலைக்கழகங்களில் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.

கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள் உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .



உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறது. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம் 10 சதவிகிதம் என கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !

நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள் தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள் ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் 2 முஸ்லிம் நீதிபதிகளே இருக்கிறார்கள் .



ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிக்கை ஆசிரியர் துணை ஆசிரியர் உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிக்கை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர் இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.


இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை வங்கிப் போன்ற துறைப் பணிகளிலே 2.2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர் அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.



மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களென சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர் 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.

கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர் பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.



இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும் கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டாமென அவர்களில் பலர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறி களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும் வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.



அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.


மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம் அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.



ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர் மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர் பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர் எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும் அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .

உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும் இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும் அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .
ஓங்கட்டும் அறிவுப் புரட்சி .

ஒளிரட்டும் சமுதாயம்..
கூடட்டும் இறையருள்!
( IMCT யின் சிறப்புமலர் 2009 லிருந்து )
இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ( IMCT )
துபாய்

Monday, February 16, 2009

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அபாண்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்




பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,


இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என்றும் குறிப்பிட்டு அந்த பேட்டி முக்கியமான நாளிதழ்களில் முக்கியதுவத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.



வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.

ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.

அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம்.


ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்..

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.


இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.


- காயல் மகபூப்.


மாநில செயலாளர், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


http://tmpolitics.blogspot.com/

இனிய (வி)வாதங்கள் - விரைவில் நமது வலைப்பூவில்!!!???

அன்பு வாசகர்களே...

வெகு விரைவில் நமது தளத்தில்..கீழ்கண்ட


அருள்.காசிநாதன்,

மானமிகு.பாலகுருசாமி,

ரெங்கநாயகி மேடம்,

சகோதரர். பெஞ்சமின்,

தோழர். இனியஹாஜி

பங்குபெறும்

வாத விவாதங்கள் விரைவில்...

Sunday, February 15, 2009

பேராசிரியர் ம.ஆ.நுஃமான்


- முனைவர் மு.இளங்கோவன்


இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி,கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.


இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் 10.08.1944 இல் பிறந்தவர்.தந்தையார் பெயர் மக்புல் ஆலிம். அவர் ஒரு மௌலவி,அரபு ஆசிரியர்; தாயார் பெயர் சுலைஹா உம்மா ஆகும்.


நுஃமான் தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தவர்.பின்னர் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்.


இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில்பயின்றவர்(1973).


அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1982).புகழ்பெற்ற அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர்குமாரசாமி இராசா அவர்களின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள் நிகழ்த்தியவர்.


அதுபொழுது தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய மொழியியல்துறைப் பேராசிரியர்களிடம் நெருங்கிப் பழகியவர். கவிஞர்கள், எழுத்தாளர்களுடன் நல்ல உறவினைப் பேணியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய (1976-82) நுஃமான் அவர்கள் பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணிபுரியலானார்.


1991 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்றுத் திறம்படப் பணிபுரிந்து பேராசிரியர்நிலைக்கு உயர்ந்தார்(2001).இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக ஓராண்டுப் பணிபுரிந்து (1988)இலக்கண நூல் ஒன்றை உருவாக்கி உதவினார்.


இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்(1999-2000), மலேயா பல்கலைக்கழகத்திலும் (2007-08) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.தம் பணிக்காலத்தில் இலங்கை அரசின் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறு கல்விக் குழுக்கள், நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவில்இடம்பெற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர்.


அயல்நாட்டு ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணி புரிந்தவர்.இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியவர்.இயல்பிலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்ட நுஃமான் அவர்கள் பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதுடன் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளை நூல்களாக்கி வெளியிட்டுள்ளார்.


இலங்கைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழகத்திற்குத் திறனாய்வுகளின் வழி அறிமுகப்படுத்தியுள்ளார்.மொழியியல், இலக்கணம்,திறாய்வு, நாட்டுப்புறவியல், சிறுகதை, திரைப்படம், நாடகம், புதினம், பதிப்புத்துறை எனப் பன்முக வடிவங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திடும் திறமை படைத்தவர் நுஃமான். மார்க்சிய வழியில் திறனாய்வதில் வல்லவர். பாரதியார் படைப்புகளை மொழியியல் கண்கொண்டு ஆராய்ந்து வெளிப்படுத்தியவர்.


இந்த நூல் இவர் நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ், சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு (A Contrastive Study of the Structure of the Noun Phrase in Tamil and Sinhala) என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு தமிழ்சிங்களமொழி குறித்த நல்ல ஆய்வாக அறிஞர் உலகால் குறிப்பிடப்படுகிறது.


தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்தகுறுகியகாலத் திட்டப் பணியாய்வில் "மட்டக்களப்பு முசுலிம் தமிழில் கடன் வாங்கப் பெற்றுள்ள அரபுச்சொற்கள்" என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்1984). "மட்டக்களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை ஆய்வு" என்னும் தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கு வழங்கிய ஆய்வேடு முசுலிம் மக்களின் தமிழ்ச்சொற்கள் குறித்த பயன்பாடுகளைக் காட்டும் ஆய்வாக விளங்குகிறது.


நுஃமான் இளமையில் ஓவியம் வரைவதில் ஈடுபாடு காட்டியவர். அந்த அறிவு அவரைக்கவிஞராக மாற்றியது.16 ஆம் அகவையில் கவிதை எழுதத் தொடங்கியவர். கவிஞர் நீலவாணன் வழியாக இலக்கிய உலகில் அடி எடுத்துவைத்தவர். நீலவாணன்தான்நுஃமானுக்கு மகாகவி,முருகையன்,புரட்சிக் கமால் அண்ணல் போன்றோரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார்.


'நெஞ்சமே நஞ்சுக்கு நேர்' என்ற ஈற்றடி கொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது. 1963 முதல் மகாகவி பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஆன்மீகச் சிந்தனையின் ஆதிக்கம் நுஃமானுக்கு இருந்துள்ளது. 1967 பிறகு இதிலிருந்து விடுபட்டுத் தனிமனித உணர்வுகள்,சமூகப் பிரச்சனைகளை மையமிட்ட படைப்புகளைப் படைத்தார்.1969-70 இல் 'கவிஞன்' என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார்.


வாசகர் சங்கம் என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களை வெளியிட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது கவிதா நிகழ்வு என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். கவியரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கவிதை பாடியவர்.கவியரங்குகளின் போக்கு பற்றி இவர் வரைந்தஒரு கட்டுரை கவியரங்குகள் சமூகத்தில் பெற்றிருந்த ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுவதாகும்.


தமிழகத்தில் வெளிவந்த அனைத்துப் படைப்புகளையும் உற்று நோக்கிப் படித்துள்ளார். திறனாய்வு செய்துள்ளார். ஈழத்துக் கவிதை இதழ்கள் என்றதலைப்பில் இவர் வரைந்துள்ள கட்டுரை ஒன்று ஈழத்தில் வெளிவந்த, கவிதைப் பணியாற்றிய பல இதழ்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது. 1955 இல் வெளிவந்த'தேன்மொழி' என்ற முதல் கவிதை இதழ் பற்றியும், மகாகவியும் வரதர் ஆகியஇருவரும் இதனை நடத்தினர் எனவும் 16 பக்க மாத இதழாக இது வந்தது என்றும் குறிப்பிடும் நுஃமான் சோமசுந்தரப் புலவரின் பெருமை சொல்வதையும் விளக்கியுள்ளார்.


அதுபோல் சமகாலப் படைப்புகளான புதினங்கள்,சிறுகதைகள்பற்றிய திறனாய்வையும் நுஃமான் நிகழ்த்தியுள்ளார். "ஈழத்துத் தமிழ் நாவல்களின் மொழி" என்னும் கட்டுரையில் ஈழத்துத்தமிழ் நாவலில் இடம்பெற்றுள்ள மொழியின் பாங்கினைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நவீனத் தமிழ்க்காவியங்கள் என்ற தலைப்பில் ஈழத்தில் தோன்றிய நவீனத் தமிழ்க்காவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார்.


அதுபோல் ஈழத்தில் தோன்றிய பா நாடகங்கள் பற்றியும் சிறப்பாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.நுஃமான் அவர்கள் பதிப்பாளராக இருந்து பல நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாகஇருந்துள்ளார். அவ்வகையில் மகாகவியின் படைப்புகளை உலகத் தமிழர்கள் அறியும் வண்ணம் பதிப்பித்து வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. மகாகவியின் கவிதைகள்குறித்த மிகச்சிறந்த திறனாய்வுகளை நிகழ்த்தியவர்.


நாட்டார் பாடல்கள் என்ற நூல் பதிப்பிக்க இணைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.நுஃமானின் ஆளுமை பன்முகப்பட்டு இருந்தாலும் மொழியியல்துறையிலும் குறிப்பாக இலங்கையில் உள்ள முசுலிம்மகளின் வழக்கில் உள்ள தமிழ்குறித்த நல்ல ஆய்வுகளை நிகழ்த்தியவர் நுஃமான்.நுஃமான் பதிப்பித்த "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும்.


இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியை அறிவதற்கு இந்த நூல் மிகுதியும் பயன்படும். ஈழத்தின் புதுமைப் படைப்பாளியான மகாகவி தொடங்கி அவர் மகன் சேரன் வரையிலான ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகளைக் காட்டி ஈழத்துக்கவிதை மரபை நாம் புரிந்துகொள்ள உதவியுள்ளார்.


இந்த நூலில் நுஃமானின்வைகறை நிலவுஉலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்...புகைவண்டிக்காகக் காத்திருக்கையில் இலைக்கறிக்காரி தாத்தாமாரும் பேரர்களும்என்ற ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் நுஃமானின் மிகச்சிறந்த கவிதையியற்றும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இவரின் யாப்பியல் பயிற்சிகளையும் காட்டுகின்றது.


தமிழகத்துப் பேராசிரியர் தங்கப்பா அவர்கள்மரபு அறிந்து புதுமை செய்ய நினைத்ததுபோல் நுஃமான் செய்துள்ள படைப்புகள் பாராட்டத் தகுந்தன. நுஃமான் சிறந்த கவிதைகளை வழங்கியதுடன் கவிதை குறித்த தெளிவான புரிதல் கொண்டவர். இதனால் கவிதை பற்றிய தம் எண்ணங்களை "அழியா நிழல்கள்"தொகுப்பில் பதிவுசெய்துள்ளார்.


அழியா நிழல் தொகுப்பு 1964-79 காலகட்டத்தில் நுஃமான் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.கவிஞர்கள் சமூக உணர்வுடன் எழுதுவதுதான் கவிதை என்பவருக்கு விடைசொல்லும் முகமாகச் சில செய்திகளை முன்வைத்துள்ளார்." கவிஞனும் ஒரு சாதாரணமனிதன்தான். அவன் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற வகையில் சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.


அதேவேளை அவன் தனியாகவும் இருக்கின்றான். அவனுக்கென்று தனிப்பட்ட,சொந்த( personal)அனுபவங்களும், பிரச்சனைகளும் உண்டு. அவை கவிதைகளில் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது என்கிறார்(பக்.6).பாலத்தீன நாட்டுக்கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நுஃமான் மொழிபெயர்த்துள்ள பாங்கு அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் நமக்குக் காட்டுகிறது.


பாலத்தீன மக்கள் இசுரேல் படையால் பாதிக்கப்படுவதை அந்நாட்டுக் கவிஞர்கள் சிறப்பாகப் பாடியுள்ளனர்.நுஃமான் காலத்தேவையுணர்ந்து இந்தப் படைப்பினை வழங்கியுள்ளது பாராட்டிற்கு உரியது.அடிப்படைத்தமிழ் இலக்கணம் என்ற நுஃமானின் நூல் தமிழ் மாணவர்களுக்குப் பயன்படத் தக்க நல்ல நூல்.தமிழ் இலக்கணங்களை மொழியியல் சிந்தனைகளின் துணை கொண்டு எழுதியுள்ளார்.


எழுத்தியல், சொல்லியல், தொடரியல், புணரியல் என்னும் நான்கு தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது. தமிழுக்குத் தோன்றிய இலக்கண நூல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் புதிய மரபுகள்,மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படவில்லை என்ற நோக்கில் கற்பிக்கத் தகுந்த வகையில் இந்த நூல் உருவாகியுள்ளது.


இருபதாம் நூற்றாண்டில் மொழியியல்துறை மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது.பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றை மாணவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை என்ற நினைவுடன் புதிய இலக்கணநூலை நுஃமான் எழுதியுள்ளார். இலங்கையிலும் தமிழகத்திலும் ஆளப்படும் சொல் வழக்குகளைஎடுத்துரைத்து இந்நூலில் விளக்கியுள்ளார்.


முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைவழங்கிய,பன்முக ஆளுமைகொண்ட நுஃமான் அவர்கள் தொடர்ந்து மொழியாய்வுகளிலும்,தமிழாய்வுகளிலும் ஈடுபட்டுவருகிறார்.பின் குறிப்பு(தமிழ் ஓசையில் வெளிவந்து அதேநாளில் இணையத்தில் வெளியிடப்படும் என் கட்டுரையை சில முத்திரை எழுத்தாளர்கள், மேற்கோள் காட்டாமல் தழுவித், தமிழக இலக்கிய ஏடுகளில் எழுதி வருவதை நண்பர்கள் எடுத்துரைக்கின்றனர்.


நானும் காண்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இணையத்தில் சான்றுகளுடன் வெளியுலகுக்கு அடையாளப் படுத்தப்படுவார்கள்)நனி நன்றிதமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர், தொடர் 21,15.02.2009)


முனைவர் செ.வை.சண்முகம்

முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)

புதுவை இளவேனில்(நுஃமான் படங்கள்)

மின்தமிழ்க்குழுநூலகம்

(இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள தளம்)

பிரஞ்சு நிறுவன நூலகம்,புதுச்சேரி

Saturday, February 14, 2009

உலகமயமாக்கல் என்ற மாயவார்த்தை!!!

அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !

ஏன் இது நிகழ்ந்தது?

இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.
ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !

அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.

அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்
*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது

*ஊக வணிகத்துக்கு வழியில்லை

*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை

*கடனுக்கு உடைமை உத்தரவாதம்

*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு

*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்

*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்

இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.

நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் ) தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )

உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும். நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?

இனியாவது விழித்துக் கொள்வோமா?

இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது

*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக

*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)

*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)

*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)*

கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)

*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.
*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)

*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் இருக்கிறது (94:06)

( நர்கிஸ் டிசம்பர் 2008 இதழின் தலையங்கத்தில் இருந்து )

நர்கிஸ் மாத இதழ்

நிறுவனர் : மர்ஹூம் எம். முஸ்தபா ஹுசைன்

நிர்வாக ஆசிரியை : எம். அனீஸ் ஃபாத்திமா

கௌரவ ஆசிரியர் :
டாக்டர் ஏ. சையத் இப்ராஹிம் எம்.பி.பி.எஸ். ( ஹிமானா சையத் )

துணை ஆசிரியை : எம். பர்வீன் ஃபாத்திமா

முகவரி :
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சிராப்பள்ளி 620 001
தொலைபேசி : 0431 2301255
அலைபேசி : 94 875 70135
மின்னஞ்சல் : aneesnargis@hotmail.com
Sent: Muduvai Hidayath (muduvaihidayath@gmail.com)

கடவுளைக் காண முடியுமா?

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன்.

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

மாணவன்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

மாணவன்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

மாணவன்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

மாணவன்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லைஇளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

மாணவன்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

மாணவன்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

மாணவன்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

மாணவன்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

மாணவன்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

மாணவன்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

மாணவன்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

மாணவன்: (பதிலில்லை)

— (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

மாணவன்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

மாணவன்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

மாணவன்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

மாணவன்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது.நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

மாணவன்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

மாணவன்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

மாணவன்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

மாணவன்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும் கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

மாணவன்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று.

ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது.நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும். அதற்கு மேல் அளவு இல்லை.

குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

மாணவன்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

மாணவன்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை.

உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்க[1] அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா?இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

மாணவன்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

மாணவன்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது.

நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள்.கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள்.

ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை.மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை.

இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது.

இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா.

உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

மாணவன்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

மாணவன்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை.

அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை.

ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள்அப்படித்தானே?

நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

மாணவன்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

மாணவன்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா?எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை.

ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது.

தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

மாணவன்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

Friday, February 13, 2009

"நான்" செத்த பின் வா!!!

ஒரு நாட்டின் ராஜா முனிவரிடம் வரம் வாங்குவதற்காக காட்டுக்குச் சென்றார்.

தியானத்தில் இருந்த முனிவரிடம் ராஜா தன்னைப்பற்றி இவ்வாறு எடுத்துக் கூறினார்.

* நான் இந்த நாட்டின் ராஜா. * நான் நிறைய பொருள் சேர்த்து வைத்துள்ளேன்.

* நான் சேர்த்து வைத்துள்ள தானியங்களால் தானியக் கிடங்குகள் நிறைந்து வழிகின்றன.*

நான் கவர்ந்து வந்துள்ள மற்ற நாட்டு அழகிகள் அந்தப்புரத்தில் குவிந்து உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

தியானத்தில் இருந்து கண் விழித்த முனிவர் "நான் செத்த பின் வா" கூறிவிட்டு மீண்டும்தியானத்தில் ஆழ்ந்தார் .

கோபமுற்ற ராஜா, நான் இந்த நாட்டின் ராஜா என்னை அவமானப் படுத்துகிறாயா என்று கூறி தனது கத்தியைய் எடுத்தார்.

அப்போது முனிவர் இவ்வாறு கூறினார்.

'நான்' என்ற இறுமாப்பு அல்லது 'நான்' என்ற ஆணவம் செத்தபின் என்னை வந்து பார் வரம் தருகிறேன்.

பொருள்: * 'ஆணவம்' நிமிர்ந்து சென்று அடிவாங்குகிறது. *

'ஞானம்' பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.

* 'நம்மிடம் ஏதுமில்லை' என்று நினைப்பது ஞானம். *

'நம்மைத் தவிர ஏதுமில்லை' எனறு நினைப்பது ஆணவம். *

'அறிவு குறைவானவர்களுக்கே' ஆணவம் வருகிறது.

நிறை குடங்கள் 'ஆணவம்' கொள்வதில்லை ஆதலால்தான் என்றும் பெருமிதத்துடன் காணப்படுகிறார்கள்!

Thursday, February 12, 2009

மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்புசுல்தான் !



ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் திப்புசுல்தானின் 208 வது நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.


இருநூறு ஆண்டுகள் செம்மறி ஆடாய் வாழ்வதைவிட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது என்று சூளுரைத்த சுத்தவீரன் திப்புசுல்தானின் 208 ஆவது நினைவு ஆண்டில் அம்மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இம்மண்ணின் புண்ணிய மைந்தனைப் போற்றி நினைவு கூர்வோம்.


பிறப்பும், வளர்ப்பும் :


கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான். நவாப் ஹைதர் அலிகான் பஹதூர் பஃருன்னிசா தம்பதிகளுக்கு நன்மகனாக தேவனஹள்ளியில் கி.பி.1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் நாள் வெள்ளிக் கிழமை அவதரித்தார். புலிக்குப் பிறந்தது


தீரர் திப்புசுல்தான் தந்தை ஹைதருடன் பழகி 16 வயதிலேயே சிறந்த யுத்தத் தந்திரங்கள்,ராஜதந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்விமானாகவும் படைத்தளபதியாகவும் விளங்கினார்.


வெற்றித்திருமகன்


திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.


திருமணம்


1774 ம் ஆண்டு இறுதியில் ருக்கையாபானுவையும் சில மாதம் கழித்து தந்தை ஹைதர் அலியின் விருப்பத்திற்காக ஆற்காடு ரோஷன் பேகத்தையும் திப்பு திருமணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த பின் 1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.


ஹைதரின் மரணமும் அரியணையும்


1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.


திப்பு சுல்தான் அடிக்கல் நாட்டிய அணை


1791 தகி மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை காலை திப்புசுல்தானே காவிரியின் குறுக்கே அணை ஒன்று கட்ட அடிக்கல் நாட்டினார். அந்த சாசனக்கல் இன்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக 120 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த அணையை கட்டியது 1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.


போர்க்களங்களில் திப்பு மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்


1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.


இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார். இப்போருக்கு பின்னர் திப்பு கதீஜா ஜமானி பேகம் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். நான்கு மனைவியருக்கும் குழந்தைகள் உண்டு.


1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது.
தியாகதீபம் அணைந்தது


1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார்.


ஆம் உயிர் பிரிந்தது.இன்னாலில்லாஹி...திப்பு சுல்தானின் குடும்பம்
குடும்ப வாழ்வில் ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு.


திப்புவின் புதல்வர்கள்


ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர்.


திப்புவின் புதல்விகள்


பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.


ஆட்சி மாண்பும், படைபலமும்


திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்.


ராணுவம்


திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன.


கப்பற்படை


கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள் இருந்தனர்.


திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்.



சதவீத அடிப்படையில் மான்யம்


மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய
முதல் மன்னன் திப்பி சுல்தான்.


ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)


சீர்திருத்தம்


மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார். திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன

தொழில் வளர்ச்சி


அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.


தொழிற் புரட்சி


கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.


திப்புவின் மானியம் பெற்ற திருக்கோயில்கள்


*கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயில் தங்க, வெள்ளி, ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப்பட்டயம், 12 யானைகள் பரிசும் வழங்கினார் நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.*நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார் அதன் பெயர் இன்றும் “பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.


*குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரிவசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார் கி.பி.1790 ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை திப்புசுல்தான் வழங்கினார்.


மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டதும் திப்புவால்தான். பர்பாபுதனன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம் மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும் புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்


*சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
*கி.பி.1793 ல் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்புசுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.


*வாழ்நாள் முழுவதும் போராடியே வாழ்ந்த திப்புசுல்தான், தரியாதெளலத் அரண்மனையும், பூங்காவும், மொராக்கோ அரபிகளைக் கொண்டு பெங்களூரில் பிரம்மாண்டமான பள்ளிவாயிலும், பலவிதத் தோட்டங்களும், கட்டிடங்களும், பாலங்களும் கட்டினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலாசாலை ஒன்றும் நிறுவினார்.


கிட்டத்தட்ட மாவீரன் திப்பு மறைந்து 20 ஆண்டுகளில் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது.


நிறைவு


ஆங்கிலேயரை இந்திய மண்ணிலிருந்து விரட்டிய பின்பே பஞ்சு மெத்தையில் உறங்குவேன் என்று வீரசபதமிட்ட மாவீரன் திப்பு தன் இன்னுயிரை நாட்டுக்கீந்து 148 ஆண்டுகள் கழித்து கி.பி. 1947 ஆகஸ்ட் 15 நடுநிசியில் யூனியன் ஜாக்கொடி கீழே இறங்கியது. அப்பொழுது தான் திப்புவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். ஆம் அல்லாமா இக்பாலின் “கிழக்கு அன்று உறங்கிக் கொண்டிருந்த போது, விழித்திருந்த ஒரே மனிதன் திப்புசுல்தான் மட்டுமே” என்ற வரிகளின் உண்மையை இந்திய சுதந்திரமும் உலகும் என்றும் மறக்க முடியாது. நாமும் அம்மாவீரனை நினைவு கூர்வோமாக!


வாழ்க திப்புவின் புகழ்! வெல்க திப்புவின் தியாகம்!
வெளியீடு :தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை

தொகுப்பாளர் : ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது

Wednesday, February 11, 2009

கொஞ்சம் சிந்திக்கலாமா?



பேசும் முறை



தாயிடம் "அன்பாக" பேசுங்கள்.


தந்தையிடம் "பண்பாக" பேசுங்கள்.


ஆசிரியரிடம் "அடக்கத்தோடு" பேசுங்கள்.


சகோதரரிடம் "அளவோடு" பேசுங்கள்.


சகோதரியிடம் "பாசமாக" பேசுங்கள்.


குழந்தையிடம் "உற்சாகமாக" பேசுங்கள்.


உறவினரிடம் "பரிவோடு" பேசுங்கள்.


நண்பர்களிடம் "உரிமையோடு" பேசுங்கள்.


அதிகாரியிடம் "பணிவோடு" பேசுங்கள்.


தொழிலாளர்களிடம் "மனித நேயத்தோடு" பேசுங்கள்.


அரசியல்வாதியிடம் "கவனமாக" பேசுங்கள்.


கடவுளிடம் " மவுனமாக" பேசுங்கள்.



அழுவதும் சிரிப்பதும்
அழும்போது தனியாக அழு


சிரிக்கும்போது அனைவரோடும் சிரி


கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்


தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்


- கவியரசு கண்ணதாசன்



எந்த மதம் உயர்ந்தது
தங்கள் நிலத்தில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக அருகிலுள்ள ஊர்ச் சந்தைக்கு தங்களது வண்டிகளில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே இருந்த ஒரு ஆலமரத்தினடியில் இளைப்பாறிச் செல்லலாமென்று அந்தப்பக்கம் வந்த விவசாயிகள் பலரும் அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர்.



அங்கிருந்த கூட்டத்தில் சைவம், வைணவம், புத்தம் என்று மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் பேச்சுகளுக்கிடையே அவர்களுக்குள் அவரவர் மதமே உயர்ந்தது என்று விவாதம் வந்தது.சைவ மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் "சிவபெருமான்தான் அனைத்துக்கும் மேலானவர். சைவ மதம்தான் உலகில் உண்மையான சமயம்" என்றார்.வைணவ மதத்தைச் சேர்ந்த இன்னொருவர் "இல்லையில்லை திருமால்தான் பெரியவர். வைணவமே உண்மையான சமயம்" என்றார்.



"புத்தரை மறந்து விட்டு நீங்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. புத்த மதம்தான் அனைத்திலும் சிறந்தது" என்றார் புத்த மதத்தைச் சேர்ந்த மற்றொருவர்.அவ்வளவுதான் அங்கு கூடியிருந்த மூன்று மதத்தினரும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து தங்கள் மதத்தின் பலத்தைக் காட்டும் வேகத்தில் பேசி, கடைசியில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.



இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர், "ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள். எது உண்மையான சமயம் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதானே?" என்றார்."ஆமாம்" என்றார்கள் அனைவரும்."நீங்கள் கொண்டு வந்திருக்கும் பருத்தியை விற்பதற்காகத்தானே சந்தைக்குச் செல்கிறீர்கள். அங்கு யாருடைய பருத்தி அதிக விலைக்குப் போகும்? சைவருடையதா? வைணவருடையதா? புத்த சமயத்தவருடையதா? உங்களில் யாராவது சொல்லுங்கள் என்று கேட்டார் பெரியவர்.



"சந்தையில் யாருடைய பருத்தி தரமுடையதாக இருக்கிறதோ அதுதான் அதிக விலைக்குப் போகும். சந்தையில் யாருடைய நிலத்தில் விளைந்தது என்று பார்த்து யாரும் வாங்குவதில்லை" என்று பதிலளித்தார் ஒருவர்."நல்லது" என்ற பெரியவர், "அதே போலத்தான் கடவுளும். நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.



எப்படிப் பருத்தி வாங்குபவன் எந்த நிலத்தில் விளைந்தது என்று பார்ப்பதில்லையோ அது போல கடவுளும் சமயம் பார்ப்பதில்லை. யார் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனரோ அவரே கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர். அவரைப் பொறுத்தவரை எல்லா சமயமும் ஒன்றுதான். இனி மேலாவது மதத்தின் பெயரால் சண்டை போடாதீர்கள்." என்றார்.இதைக் கேட்ட மும்மதத்தினரும் அமைதியடைந்து அந்தப் பெரியவரை வணங்கி விட்டு ஒற்றுமையாகச் சந்தைக்குக் கிளம்பினர்.



Thanks to : இரா. முத்துப்பாண்டியன் http://poonchoolai.blogspot.com/

Tuesday, February 10, 2009

வி.பி.சிங்கை வீழ்த்தினார்கள்; அவர் பிறப்பித்த சமூகநீதி ஆணையை வீழ்த்த முடியவில்லை


விடுதலை இராசேந்திரன் இரங்கலுரை:


காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், 'ஜன்மோர்ச்சா' என்ற அமைப்பைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிராக அந்த இயக்கம் போராடியது. இந்தியாவின் நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை வலிமை உ.பி., பீகார் மாநிலங்களிடம் இருந்ததால், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ்கட்சியை தோற்கடித்துக் காட்டுவேன் என்று சபதமேற்ற வி.பி.சிங், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்.


ஜனதா, லோக்தளம், காங்கிரசு (எஸ்) போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, 'ஜனதா தளம்' என்ற கட்சியை உருவாக்கினார். (1988, அக்.11). 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய 'தேசிய முன்னணி' என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கிய தும் வி.பி.சிங் தான்.


மத்திய அரசில் மாநிலக் கட்சிகளும் அதிகாரப் பங்கு பெறும். கூட்டாட்சிப் பாதைக்கு வழியமைக்கும் முயற்சியாகவே இது அமைந்தது.காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே முன்னிறுத்தி - முரண்பாடுகள் கொண்ட, இடதுசாரிகள்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்த சாதனையை வி.பி.சிங் ஒருவரால் தான் செய்ய முடிந்தது. வி.பி.சிங் மீதான நம்பகத் தன்மையும் நேர்மையுமே இதற்கு அடிப்படை என்று உறுதியாகக் கூற முடியும்.

முரண்பாடுகளை நிர்வகித்தல் (Managing the Contradictions) என்று வி.பி.சிங், இதற்குப் பெயர் சூட்டினார்.


ஆனாலும்கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்தார். தனது இயல்பான நட்பு சக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங், பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறினார்.1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, வி.பி.சிங் பிரதமரானார். பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவை நல்கினர்.


1977 க்குப் பிறகு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டது. வி.பி.சிங் சபதம் ஏற்றதுபோல், உ.பி.யில் 83 தொகுதிகளிலும், பீகாரில் 54 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடி, 137 இடங்களை இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றியது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்திராவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் வி.பி.சிங் விலகலுக்குப் பிறகு 200 இடங்களைத் தாண்டவே முடியவில்லை. ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தலில்தான் 200க்கும் சற்று கூடுதலாக வெற்றி வெற்றது.


இந்திய அரசியலில் காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைக் கணிசமாக குறைத்தப் பெருமை வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. இதை மறுத்துவிட முடியாது. 'ஜன்மோர்ச்சா' தொடங்கிய காலத்தில்கூட வி.பி.சிங்கிற்கு இடஒதுக்கீடு குறித்த தெளிவான பார்வை இருந்ததாகக் கூற முடியாது.பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம்தான் அப்போது முன் வைக்கப்பட்டது. அவரைச் சூழ்ந்து நின்ற அருண்நேரு போன்ற பார்ப்பன சக்திகளின் கருத்து 'ஜன்மோர்ச்சாவுக்குள்' நுழைக்கப்பட்டது.


தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்கள் வி.பி.சிங்கிடம் இடஒதுக்கீட்டு கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியபோது நியாயங்கள் அவருக்குப் புரியத் தொடங்கின. மண்டல் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களைத்தான் நேரில் போய் சந்தித்து நன்றி கூறினார்.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு செய்யும் முடிவை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து, அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர், அன்று சமூகநலத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் என்ற தலித் தான்! ஒரு தலித் அமைச்சர் ஆணை வழியாகத்தான் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மறந்துவிடக் கூடாது.


அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பிரிவுகள் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது என்பதையும் பிற்படுத்தப்பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது. (கைதட்டல்)வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்று (2.12.1989) 11 மாதங்களில் ஆட்சியை உதறினார் (10.11.1990), 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் நாள்.


ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல. இந்திய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள்.அன்றுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அலறின. எரி மலையாக வெடித்தார்கள்.


ஏதோ பூகம்பமே வந்து விட்டதைப்போல கொதித்தார்கள். வடமாநிலங்களில் மாணவர்களைத் தூண்டி கலவரத்தை நடத்தினர். இதிலே மிகப் பெரும் சோகம் என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களே இதை எதிர்த்து வீதிக்கு வந்து, கலவரத்தில் இறங்கியதுதான்.இது, தங்களுக்கான உரிமை என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் உருவாக்கப்படவில்லை. ஏன்? என்ன காரணம்? அங்கு ஒரு பெரியார் பிறக்கவில்லை; அதுதான் காரணம்.


ஆணை வந்தவுடன் புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில், முக்கிய தலைவர்கள் கூடி வி.பி.சிங் ஆட்சிக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மனோகர் ஜோஷியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி உடனே ஆதரவைத் திரும்பப் பெற்று விடவில்லை. பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தயங்கியது. காரணம், நாடாளுமன்றத்தில் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையைத் தாண்டாத பாரதிய ஜனதா வி.பி.சிங் அணியில் இடம் பெற்றதால்தான் 86 உறுப்பினர்களைப் பெற முடிந்தது.


அந்த 86 பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 பேர் பிற்படுத்தப் பட்டவர். 12 பேர் தாழ்த்தப்பட்டவர். எனவே, இவர்களின் எதிர்ப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற தயக்கம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. எதிர்ப்பை வேறு வழியில் காட்ட காரணம் தேடிக் கொண்டிருந்தது. ஆணையை எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல; காங்கிரஸ்கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே என்ற பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையைத் திரும்பப் பெறக் கூறி நாடாளு மன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.


தனது கட்சியின் கருத்து பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை.பார்ப்பன உயர்சாதி அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ரகசியமாகக் கூடி பேசி, அரசுக்கு எதிராக செயல்படுவதென முடிவெடுத்தனர். முதல் கட்டமாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் மனைவியர்களை திரட்டி, அணியாக்கி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர். எப்போதாவது இந்த பரம்பரையெல்லாம் வீதிக்கு வந்திருப்பார்களா?


பெங்களூரில் பார்ப்பனர் சங்கம் அவசரமாகக் கூடி, "இந்த ஆணை இந்து மதத்தை சாதி அடிப்படையில் பிரித்து விடும். எனவே அமுல்படுத்தக்கூடாது" என்று தீர்மானம் போட்டனர். சாதி அடிப்படையில் பிரிப்பது இந்து மதமா? அல்லது அரசு ஆணையா? ஏதோ இந்து மதத்துக்குள் சாதி நுழைந்ததே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தான் என்பதுபோல் நாடு முழுதும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஒரே குரலில் ஓலமிட்டனர்.


இப்போது 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியிலுள்ள 'அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன' பார்ப்பன மாணவர்கள் எப்படி எதிர்த்தார்களோ, அதுபோல், அப்போது டெல்லிப் பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள்தான் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். விவரமறியாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஏதோ தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட வைத்து, கலவரத்தைத் தூண்டினார்கள்.


பீகாரில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதில் இறந்த 6 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எதிர்ப்புக் கலவரத்தில் பீகார், உ.பி., ம.பி., ஒரிசா, இராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இறந்த 32 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அதே ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நாடாளு மன்றத்தின் முன்பு மாணவர்கள் நடத்திய பேரணி கலவரமாக மாறிய போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், செப்டம்பர் 24 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், முஸ்லிம் மாணவர்கள் தான்.


மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளிப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்திகளை வெளியிட்டன. உண்மையில், பல மாணவர்கள் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டு, அவர்கள் தீக்குளித்ததாக நாடகமாடினார்கள். இன்று எப்படி வி.பி.சிங் அவர்களை 'சமூக இழிவைக்' கொண்டு வந்தவர் என்று பார்ப்பன இறுமாப்போடு 'இந்தியா டுடே' எழுதியதோ அதே ஏடு அன்றைக்கும், கலவரங்களை ஊதி விட்டது. அப்படி இடஒதுக் கீட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அதே 'இந்தியா டுடே' தான் - தீக்குளிப்பு என்ற பெயரில் ராஜீவ் கோஸ்வாமி என்ற பிற்படுத்தப்பட்ட மாணவரை பார்ப்பன மாணவர்கள் தீக்குளிப்பது போல் நாடகமாடுமாறு கூறிவிட்டு, பிறகு, உண்மை யிலே தீக்குளிக்க வைத்தனர் என்ற செய்தியை மருத்துவனையில் உயிருக்குப் போராடிய கோஸ்வாமியின் வாக்குமூலத்தின் வழியாக அம்பலப்படுத்தியது (இந்தியா டுடே அக்.6-20, 1990).


இதே போல் பல பள்ளி மாணவர், மாணவிகளும் தீக்குளிக்க செய்யப்பட்டனர். பலர் கொளுத்தப்பட்டனர். புதுடில்லி ஆர்.கே.புரத்தில் வகுப்பை விட்டு தண்ணீர்குடிக்க வெளி வந்த பிரவீணா என்னும் சீக்கிய மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து கொலை செய்தனர். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் ஆசிரியராக இருந்த பார்ப்பன அருண்ஷோரி, வி.பி.சிங்குக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரான 'குருசேத்திரப் போரையே' நடத்தினார்.


ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்றரை மாத காலத்தில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அருண்ஷோரி எழுதி குவித்த தலையங்கங்கள், கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டும் 168. அதே போல் 'டைம்ஸ் ஆப் இந்தியா' அதே காலகட்டத்தில் வெளியிட்டவை 171. 'இந்து' வெளியிட்டவை 151. 'இந்து' சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு வெளிவந்த காரணத்தால் இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகப் போய்விடும் என்பதால், சற்று அடக்கியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.


"மண்டல் பரிந்துரை நாட்டையே அழித்துவிடும்; அரசு நிர்வாகத்தை மேலும் சீர்குலைக்க வைத்துவிடும்; இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவு சமூகப் பதட்டத்தைத்தான் உருவாக்கப் போகிறது. இதன் முதன் விளைவு இதுவாகவே இருக்கும்" என்று 'எக்ஸ்பிரஸ்' எழுதியது. "40 ஆண்டுகாலமாக - நவீன - சமத்துவ சமுதாயத்தை உருவாக்க படிப்படியாக எட்டிய சாதனைகள் அனைத்தையும் ஒரே அடியில் வி.பி.சிங் வீழ்த்திவிட்டார்" என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' பார்ப்பன நாளேடு எழுதியது.


இவ்வளவையும் நாம் விரிவாக ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால், எத்தகைய சூழலில் வி.பி.சிங், இப்படி ஒரு சமூகநீதி ஆணையைப் பிறப்பித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் ஒரு சார்பான பிரச்சாரம்; மிரட்டல்கள்; பார்ப்பன மாணவர்களின் வன்முறை; வடமாநிலங்களில் உண்மையையறியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களே. பார்ப்பன மாணவர்களோடு சேர்ந்து போராடிய அவலம். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியின் கடுமையான எதிர்ப்புகள்.


இவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையிலும் கொள்கைக் குன்றாய் நிமிர்ந்து நின்ற மாமனிதன் தான் வி.பி.சிங். அதற்கு முன் 10 ஆண்டுகாலமாக காங்கிரஸ்ஆட்சியால் முடக்கப் பட்டுக் கிடந்த அறிக்கையை வெளியே கொண்டு வந்து ஆணை பிறப்பித்து, சுழன்றடிக்கும் பார்ப்பன எதிர்ப்புச் சூறாவளிகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்ட அந்த மாமனிதரின் இந்த வரலாற்று சாதனையை நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எடுத்துக் காட்டினோம்.


இப்படி ஒரு அரசியல்வாதியை, தந்தை பெரியார் போல் நெஞ்சுரம் கொண்ட ஒரு லட்சியவாதியை நாம் எங்கே தேடினாலும் கிடைப்பார்களா?
மண்டல் பரிந்துரையை எதிர்த்து வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தார், ராஜீவ். அதே காங்கிரஸ் வி.பி.சிங் ஆணையை அமுல்படுத்தியே வருகிறார் என்றார் விடுதலை இராசேந்திரன்.


-1990 செப்டம்பர் 9 ஆம் தேதி 27 சதவீத இட ஒதுக்கீடு வந்தவுடன், ஒரு மாத இடைவெளியில் (1990, செப்.14-16), ம.பி. மாநிலம் போபாலில் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு - இராமன் கோயில் கட்டுவதற்கான 'ரதயாத்திரை'யை அத்வானி தலைமையில் நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை அசோக் சிங் காலிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்கள்.


மாணவர் கலவரத்தைத் தூண்டிவிட்டு வி.பி.சிங் தானாகவே பதவி விலகும் நிர்ப்பந்தத்தை உருவாக்க முயன்றவர்கள் அதில் தோல்வி கண்டதால் அடுத்தக் கட்ட மாக ரதயாத்திரையைத் தொடங்க திட்டமிட்டார்கள். யாத்திரையின் உண்மையான நோக்கமே மண்டல் பரிந்துரைக்கான எதிர்ப்புதான். இதை அத்வானியே ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டார்."மண்டல் பிரச்சினை எனக்கு நெருக்கடியைக் கொடுத்தது என்பது உண்மைதான். குறிப்பாக என்னுடைய டெல்லி தொகுதியில் தீக்குளிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பெற்றோர்கள், ஒவ்வொரு நாளும் என்னை சந்தித்து இன்னும் வி.பி.சிங் ஆட்சியை ஏன் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று என்னை கேட்கிறார்கள்.


மண்டல் பிரச்னையைக் காரணம் காட்டி, இந்த ஆட்சிக்கு தரும் ஆதரவை நாங்கள் திரும்பப் பெற்றால், அது இந்த ஆட்சிக்கு பெரும் லாபமாகிவிடும் என்று நான் கருதுகிறேன். எனவே நான் அவர்களிடம் சொன் னேன், "ஆமாம்; இந்த அரசாங்கம் மோசமாக நடந்து கொண்டு வருவது உண்மைதான். இதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை முடிவு செய்து, உரிய நேரத்தில் எடுப்பேன்" என்று கூறினார் அத்வானி (இந்துஸ்தான் டைம்ஸ் 21 செப். 1990).


ரதயாத்திரை தொடங்கும் முடிவை எடுத்த அடுத்த 5 நாட்களில் அத்வானி அளித்த பேட்டி இது! ஆக, அத்வானி 'ராமனை' முன் வைத்து, ரத யாத்திரையைத் தொடங்கியதே வி.பி.சிங் ஆட்சிக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்னையை உருவாக்கி, நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதுதான். நேரடியாக 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தால் பாரதிய ஜனதாவுக்குள் உள்ள வடமாநில அப்பாவி பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்குள்ளாகிட நேரிடுமே என்பதால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் உரிமைக்கான அடையாளங்களை ஒழிக்க 'இந்து' என்ற கவசத்தைப் போர்த்திடும் முயற்சிகளில் பார்ப்பனியம் இறங்கியது.


திட்டமிட்டபடி பா.ஜ.க. வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றது. உண்மையில் 1991 ஆம் ஆண்டு ஜனவரியில் தான் அந்த ரத யாத்திரைக்கான திட்டத்தை பா.ஜ.க. தீட்டியிருந்தது. ஆனால், மண்டல் பரிந்துரைஅமுலான காரணத் தால், ஆட்சியை விட்டு வைக்கக் கூடாது என்ற காரணத்தால் உடனே பயணத்தைத் தொடங் கினார்கள். (தொடங்கிய தேதி 7.8.90)பாரதிய ஜனதா ஆதரவைத் திரும்பப் பெற்றவுடன், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவரத்தயாரானர் வி.பி.சிங். பதவி பறிபோகும் என்பது அவருக்கு உறுதியாகத் தெரியும். அதற்காக நரசிம்மராவ் செய்ததுபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை பேச வில்லை.


நாடாளுமன்றத்தை சந்திக்கத் தயாரானார்; நம்பிக்கை ஓட்டுகோரும் ஒற்றைவரி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். சமூக நீதிக்கு கதவு திறந்த சரித்திர நாயகர்கள் - பெரியார், அம்பேத்கர் பெயர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வி.பி.சிங் தனது உரையைத் தொடங்கினார்.இந்த அவையில் - மண்டல் ஆதரவு அணி ஒன்றும், மண்டல் எதிர்ப்பு அணி ஒன்றும் இருக்கிறது. இந்த வாக்கெடுப்பின் வழியாக யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ளட்டும் என்றார்.


வி.பி.சிங் மண்டல் ஆணை அறிவிப்பு வெளி வந்தவுடனேயே வசந்த் சாத்தே என்ற மராட்டிய பார்ப்பன காங்கிரஸ் உறுப்பினர், நாடாளுமன்ற வாயிலிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி, இதில் தனது நிலையைத் தெரிவிக்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது பேசிய ராஜீவ் காந்தி, மண்டல் பரிந்துரையை முழுமையாக எதிர்த்து 3 மணி நேரம் - 10 முறை தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார்.


இடஒதுக்கிடு பொருளாதார அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று பார்ப்பன குரலையே ராஜீவ் எதிரொலித்தார். நாட்டை சாதியால் கூறு போடுகிறது மண்டல் அறிக்கை என்றார். அத்வானியும் அதே குரலையே ஒலித்தார். இந்தப் பிரச்சினையில் ராஜீவ் குரலும், அத்வானி குரலும் ஒன்றாகவே ஒலித்தன என்பதை மறந்துவிடக் கூடாது. அ.இ.அ.தி.மு.க.வும், மண்டல் எதிர்ப்பு அணியில் நின்று வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராகவே வாக்களித்த துரோகத்தை செய்தது.


கான்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும், வி.பி.சிங் ஆட்சியை ஆதரித்து வாக்களிக்கவில்லை. நடுநிலை என்று கூறி ஆட்சிக் கவிழ்ப்புக்கே துணை நின்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டின் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த மறைந்த அப்துல் சமது ஒருவர் மட்டும் தான் அணி மாறி, வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவாக வாக்காளித்தார் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.


பொருளாதார அடிப் படையை வலியுறுத்திய ராஜிவ் காந்தியிடம் வி.பி.சிங் கேட்டார், உங்கள் கட்சி ஆளும் ஆந்திராவிலும், கருநாடகத்திலும் சாதி அடிப்படையில்தானே இடஒதுக்கீடு இருக்கிறது என்று. அவர் கேட்ட கேள்விக்கு ராஜீவ் மவுனமானார்.உண்மையில் காங்கிரஸ் கட்சியிலே இருந்த பல பிற்படுத்தப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆணையை வரவேற்றாலும், அந்த உணர்வுகளை ராஜீவ் மதிக்க தயாராக இல்லை. அதே ராஜீவ் காந்தி சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்கு வந்த போது, மண்டல் பரிந்துரையை கல்விக்கும் அமுல்படுத்த வேண்டும் என்று குரலை மாற்றிப் பேசி தமிழ்நாட்டை ஏமாற்ற இரட்டை வேடம் போட்டார்.


அத்வானி ரதயாத்திரை - பீகாருக்குள் நுழைந்த போது, மாநில முதல்வர் லல்லுபிரசாத், யாத்திரையை அனுமதித்தால் கலவரம் வரும் என்று பிரதமர் வி.பி.சிங்கிடம் கேட்டபோது, 'உங்கள் முடிவில் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்' என்று பச்சைக் கொடி காட்டினார். வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு திரும்பப் பெறப்படுமே என்பது பற்றி அவர் கவலைப் படவே இல்லை. இன்று ஆட்சிக்கு ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கொள்கைகள் பலிகடா வாக்கப்படுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?


வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்ளும் அறிவிப்பை பா.ஜ.க. அறிவித்தவுடன், வி.பி.சிங் தொலைக்காட்சியில் பேசினார்: "இந்த நட்டநடு இரவில், நமக்கு மேலே உள்ள நம்மைப் படைத்தவனுக்கு வீடு கட்டப் போகிறார்கள். அவருக்கு வீடு கட்டவில்லையென்றால், வீடு இல்லாமல் தவித்துப் போய்விடுவார்" என்றுகேலியாக சுட்டிக் காட்டினார். வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சர். கலைஞர் ஆட்சி விடுதலைப்புலிகளுடன் ரகசியமாக தொடர்பு கொண்டுள்ளது என்று மத்திய உளவுத் துறை இரண்டு அறிக்கைகளை தயார் செய்து, அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியது. ஆனால் பிரதமர் வி.பி.சிங் பார்வைக்கு வராமல், பார்ப்பன அதிகார வர்க்கம் மறைத்து விட்டது.


அமைச்சரவை செயலாளருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் வந்த அந்த இரு அறிக்கைகளும், வி.பி.சிங் பார்வைக்கு வராமல் மறைக்கப்பட்டன. காரணம், உள் நோக்கத் துடன் தயாரித்த இந்த அறிக்கையை வி.பி.சிங் குப்பையில் போட்டு விடுவார் என்பது அவர் களுக்குத் தெரியும். அப்படி அறிக்கை தயாரித்தவர் கூட அப்போது உளவுத்துறை இயக்குனராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான்.


இத்தனைக்கும் அப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்புகூட அல்ல.வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, ராஜீவின் பினாமியாக சந்திரசேகர் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது சுப்ரமணியசாமி, சட்டத் துறை அமைச்சர். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உளவுத் துறை அறிக்கை அப்போது தோண்டி எடுக்கப்பட்டு, சுப்ரமணியசாமி துறைக்குப் போகிறது. உடனே தி.மு.க. ஆட்சி, ராஜீவ் ஆலோசனைப்படி பிரதமர் சந்திரசேகரால் கலைக்கப்படுகிறது.


தி.மு.க.வின் மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன், சந்திரசேகரை நேரில் சந்தித்து எவ்வளவோ எடுத்துக் கூறியும் காதில் போட்டக் கொள்ள தயாராக இல்லை. ராஜீவ் கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் முன், வி.பி.சிங் அளித்த சாட்சியம். ஜெயின் அறிக்கையில் பதிவாகியுள்ளது.


அதில் தி.மு.க. ஆட்சியையும், விடுதலைப் புலிகளையும் தொடர்பு படுத்தி உளவுத்துறை தயாரித்த அறிக்கை, தனது பார்வைக்கே கொண்டுவரப்படாததை வி.பி.சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் தீவிரவாதம் பற்றி ஜெயின் ஆணையத்தின் முன் அவர் அளித்த சாட்சியம் இதுதான்."விடுதலைப் புலிகளால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறுவது பற்றி எனது கருத்து இதுதான். ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும், அசாமிலும் கூட தீவிரவாதிகள் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அங்கே 100 சதவீத திருப்தியான நிலை வந்துவிடவில்லை.


தமிழ்நாட்டைப் போலவே இதுவும் மத்திய அரசின் கவலைக்குரிய பிரச்சினை தான். தமிழக அரசியல் தலைவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் - தமிழ் நாட்டில், ஈழப் போராளிகளின் ராணுவ நட வடிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறினார்கள். அதே நேரத்தில், தீவிரவாதத்தைத் தடுக்கும் நட வடிக்கைகள் தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து." - என்றார் வி.பி.சிங்.


விடுதலைப்புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களை முற்றாக ஒழித்துவிடவேண்டும். அதை வைத்து தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்ட ஆளும் பார்ப்பன வர்க்கப் பார்வையிலிருந்து வி.பி.சிங் பார்வை வேறு பட்டே இருந்தது என்பதற்காக இதை சுட்டிக் காட்டுகிறோம்.பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போய்விடும் என்று பார்ப்பனர்கள் கூக்குரலிட்டபோது வி.பி.சிங் கேட்டார், "தென்னகம் முழுதும் நீண்டகாலமாக இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டுத்தான் வருகிறது. அங்கே நிர்வாகம் கெட்டு போய்விட்டதா?" என்று கேட்டார்.


காலம் காலமாக நிர்வாக அமைப்பிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை நிர்வாக அமைப்புக்குள் கொண்டு வருகிறேன் என்று கூறிய வி.பி.சிங், இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார். இப்படி அதிகாரத்தைப் பரவலாக்குவதால்தான் ஆதிக்கவாதிகள் அலறுகிறார்கள் என்று கூறிய அவர், அதற்கு உதாரணமாக ஒரு கதையை கூறினார்.


அண்ணன் தம்பிக்குள் பாகப் பிரிவினை நடந்தது. கடைசியில் இருந்த மாடு ஒன்றையும் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் வாய்ப் பகுதி தம்பிக்கும் வால் பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப் பட்டது. வாய்ப்பகுதி கிடைத்த தம்பி, அன்றாடம் மாட்டுக்கு தீனி போட வேண்டும். வால் பகுதி கிடைத்த அண்ணனோ, பாலைமட்டும் கறந்து கொண்டிருந்தார். தம்பிக்கு ஆத்திரம் வந்தது. ஒரு நாள் தம்முடைய தலைப் பகுதியிலிருந்த மாட்டின் கொம்பை பிடித்து ஆட்டவே, மாடு, வால் பகுதி யிலிருந்த அண்ணனை எட்டி உதைக்க, பால் கீழே கொட்டியது.


ஒவ்வொரு நாளும் இது தொடரவே அண்ணனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. நான் தீனி போட வேண்டும்; நீ மட்டும் பால் கறக்க வேண்டுமா; இது நீதியா என்று தம்பி கேட்டார். அதே நீதியைத் தான், நாமும் கோருகிறோம் (பலத்த கைதட்டல்) என்றார் வி.பி.சிங்.காலம்காலமாக பயனை மட்டும் அனுபவித்துக் கொண் டிருந்தவர்களிடம் உள்ள அதிகாரத்தை நான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க முன் வந்ததால் அவர்களுக்கு என் மீது ஆத்திரம் வருகிறது என்றார் வி.பி.சிங்.


கொள்கைக்காக பதவியை தூக்கி எறிந்த வி.பி. சிங்கை முதல்வராக இருந்த கலைஞர் தமிழகத்துக்கு அழைத்தார். தமிழகம் முழுதும் நான்கு நாட்கள் சூறாவளியாக கலைஞருடன் சுற்றுப் பயணம் செய்தார் வி.பி.சிங். அந்தப் பயணத்தில் பத்திரிகை யாளர் என்ற முறையில் நானும் உடன் சென்றேன். சென்ற இடமெல்லாம் வி.பி.சிங்குக்கு உற்சாக வரவேற்பு காத்திருந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது. இது பெரியாரின் மண். இது சமூக நீதியின் தலைநகரம் என்று தான் ஒவ்வொரு கூட்டத்திலும் வி.பி.சிங் குறிப்பிட்டார்.


வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். கருநாடகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வி.பி.சிங் கட்சியைச் சார்ந்த ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை, தேவ கவுடா போன்றவர்கள் எல்லாம் ஜனதா தளத்தில் முக்கிய தூண்கள். இத்தனைக்கும் கருநாடகத்தில் ஜனதாதளம் ஆட்சியைப் பிடிக்கும் வலிமையோடு இருந்தது. ஆட்சியும் நடத்தியது. ஆனால் தமிழகத்தில் ஜனதாதளத்துக்கு எந்த ஆதரவும் இல்லை. ஒரு சட்ட மன்ற உறுப்பினர்கூட அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.


இந்த நிலையிலும் தனது சொந்தக் கட்சியினர் கருநாடகத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் புறக் கணித்து தமிழகத்தின் பக்கம் நின்று, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தவர் தான் வி.பி.சிங். (பலத்த கைதட்டல்)இப்படி, ஒரு தலைவரை அரசியலில் பார்க்க முடியுமா?அண்ணல் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதான். அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி அவரது எழுத்து பேச்சுகளை இந்தியில் வெளியிட்டதும் வி.பி.சிங் ஆட்சியின் போதுதான்.


நாடாளுமன்ற வளாகத் திலே அம்பேத்கர் படமும், அப்போது தான் திறக்கப்பட்டது. அப்போது வி.பி.சிங் பேசினார். 'கடவுள் சிலையை வடிக்கும் சிற்பி கோயில் கர்ப்பகிரகத் துக்குள் நுழைய முடியாததைப் போல், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் படம் நாடாளுமன்றத்தில் நுழைய முடியாமலே இருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் இடமிருந்தது. ஆனால் ஆட்சியல் இருந்தவர்கள் இதயத்தில் தான் இடமில்லாமல் போய்விட்டது' என்றார்.


நிர்வாக கட்டமைப்பை பரவலாக்கிட மாநிலங்களுக்கிடை யிலான கவுன்சிலை உருவாக்கியது வி.பி.சிங் தான். இன்றைக்கு மக்களுக்குக் கிடைத் துள்ள மகத்தான ஆயுதமாகிய தகவல் உரிமை பெறும் சட்டத்துக்கு காரண மாக இருந்தவரும் வி.பி.சிங் தான். அவர் தான், இந்தக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் டெல்லியில் வாழும் குடிசைப்பகுதி மக்களுடன்தான் கொண் டாடினார். நபிகள் நாயகம் பிறந்த நாளை மத்திய அரசின் விடுமுறை நாளா கவும் அவர்தான் அறிவித்தார். அவர் மிகச் சிறந்த ஓவியர். மிகச் சிறந்த கலைஞர்.

ஒன்றிரண்டு கவிதைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

'கடவுள்' பற்றி வி.பி.சிங் எழுதிய கவிதை இது:

கடவுள்

எங்கும் இருக்கிறார்

அதனால் தான்

என் கை

பிடிக்குள்

அடக்கிவைத்துள்ளேன்

நீயும்அவ்வாறு

செய்து கொள்

இந்த இரண்டு

கைக்குள்இருக்கும்

கடவுள்களில்

பெரியவர் யார்?

அது அவரவர்

கை வலிமையைப்பொறுத்தது.

- என்ன அற்புதமான பகுத்தறிவு சிந்தனை.


சோதிடர் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை இது.

ஜோதிடர்

எனதுவருங்காலம்

பற்றி வகைவகையாய்

சொல்லிவைத்தார்

நான்கேட்டேன்

அவ்வளவுதூரம்

வேண்டாம்.

இன்று இரவு -ஆம்

இன்றுஇரவு

எனக்குஎன்ன

கனவுவரும்?


ஜோதிடர்

மவுனமாகிப் போனார்.

விண்மீன்கள்

ஆதிக்கத்தால்

கண்ணுறக்கம்

இல்லாமல்...நான்

மட்டும்இருக்கிறேன்...

என்கனவுகள்இல்லை...

எனவேதான்

ஜோதிடர்

மவுனமாகிப் போனார்.


சோதிடம் பொய் என்பதை இவ் வளவு அழகாக படம்பிடித்தார். அவர் பகுத்தறிவாளர் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையான மானுடப் பற்றுக் கொண்ட எவரும் இயல்பாகவே பகுத்தறிவாளர் களாகத் தானே இருக்க முடியும்?


இந்திய அரசியலை மண்டல் மய மாக்கி பார்ப்பன ஆதிக்கத்தை அரசிய லில் வீழ்த்தியவர் வி.பி.சிங் தான். எந்த ஆணைக்காக வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்தினார்களோ, அவர் களாலேகூட வி.பி.சிங் ஆணையை வீழ்த்த முடியவில்லை. அந்த ஆணை யில் கை வைத்துவிட்டு - எவரும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது. அந்த சமூக நீதிகளை நிலைத்திருக்கும் வரை வி.பி.சிங் வரலாற்றில் நிலைத்திருப்பார்.


வி.பி.சிங்: சில குறிப்புகள்!


மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வீதியில் போராடிய இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் திரு.வி.பி.சிங் அவர்களது மறைவு வருத்தமானது. மிகவும் கண்ணியமும், கடமையுணர்வும் மிக்க தலைவர் அவர்.


விஸ்வநநாத் பிரதாப் சிங் என்ற இயற்பெயருடன் ஜூன் 25, 1931ல் அலகபாத்தில் மன்னர் குடும்பத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர். அரசியல் தலைவர். ஓவியர். கவிஞர். மனித உரிமை போராளி. 1969ல் உ.பி மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக முதல் முறையாக தேர்வானார். ஐந்தாவது நாடாளுமன்றத்திற்காக 1971ல் முதல் முறை நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வர்த்தகத்துறை அமைச்சர். உ.பி.மாநில முதலமைச்சர். இந்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆகிய பல பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார்.


1984 தேர்தலில் ராஜீவ் வெற்றியின் பின்னர் நிதியமைச்சரானார். அப்போது திருபாய் அம்பானி மற்றும் அமிதாப் பச்சனின் வரி மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். அதனால் ராஜீவி அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார்.


அவரது செல்வாக்கு காரணமாக பாதுகாப்பு துறை அமைச்சராக்கப்பட்டார். ராஜீவ் காந்தியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.


தொடர்ந்து நடந்த தேர்தலில் அவரது ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட தேசிய முன்னணி வெற்றிபெற்றது. டிசம்பர் 2, 1989 முதல் 10 நவம்பர் 1990 வரையில் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தார். ராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறையும், இலங்கை கொள்கையும் காரணமாக சுமார் 2000 கோடி ரூபாய்களை செலவிட்டு இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் சுமார் 10,000 பேரை கொன்றுகுவித்தது.


பலநூறு தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. தமிழர்களது உடமைகளை கொள்ளையிட்டன. அமைதிப்படை என்ற பெயரில் ஆட்கொல்லி படைகளாக மாறியது இந்திய படைகள். திரும்பிச்செல்ல பிரேமதாசா கடும் அழுத்தம் கொடுக்கவும் இந்திய படைகளை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைத்தார்.


அவரது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடப்பங்கீட்டை வழங்க மண்டல் விசாரணைக் குழு அறிக்கையை அமல்படுத்தி அதுவரையில் எல்லா அரசுகளும் புறக்கணித்த மக்களுக்கு சமூகநீதியை வழங்கினார்.


மண்டல் விசாரணை அறிக்கை அமலாக்கத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாபர் மசூதியை இடிக்க மதவெறி பிரச்சாரத்தை அத்வானி தலைமையில் ரதயாத்திரை துவங்கியது. அத்வானியை கைது செய்ய வி.பி.சிங் நடவடிக்கை எடுத்தார். அதனால் பாரதீய ஜனதா கட்சி அவரது அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது.


மதவெறி அரசியலுக்கு எப்போதுமே எதிராக இருந்த அவர் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மிக உறுதியாக செயல்பட்டு மசூதியை பாதுகாத்தார். மதச்சார்பின்மையை காப்பாற்ற போராடிய அவரது அரசை கவிழ்க்க நடந்த அனைத்து அரசியல் குழப்பங்களிலும், சதிகளிலும் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் இறங்கின. ஆனாலும் சமரசமில்லாமல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் வி.பி.சிங்.


142-346 என்ற வாக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் இடப்பங்கீடு அமலாக்கம் வழியாக சமூக நீதிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் அவர் ஆற்றிய பணியின் பலன்கள் பல கோடி மக்களுக்கு மிக்க பலனுள்ளவை.


காஸ்மீர் பிரச்சனி அவரது ஆட்சியின் போதும் வலுவாக இருந்தது. பொற்கோயிலில் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாக மன்னிப்பு கேட்டார் வி.பி.சிங். பஞ்சாபில் அமைதியை உருவாக்க அவரது ஆட்சி பெரும் பங்காற்றியது.



ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, இந்திய அரசியலில் குழப்பம் நிறைந்த சிறுபான்மை ஆட்சியை திரு.சந்திரசேகர் அவர்களை தலைமை அமைச்சராக்கி ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் துவக்கி வைத்தது. மோசமான பொருளாதார கொள்கையும், அரசியல் பித்தலாட்டங்களும் நிறைந்த இந்த ஆட்சியின் முடிவில் தேர்தல் வந்தது.


காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி அல்லாத முற்போக்கு கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். மரண இரக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வென்றது. அந்த தேர்தலில் பல தலைவர்கள் தோல்வியுற்றனர் ஆனாலும் வி.பி.சிங் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் தேர்தல் அரசியலில் ஒதுங்கியிருந்தார்.


ஆனாலும் 1996ல் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் அவரை தலைமை அமைச்சராக்கும் முயற்சி நடந்தன. அவற்றை ஏற்க மறுத்து ஆட்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். சிறுநீரக கோழாறு, இரத்தப்புற்று நோய் காரணமாக அவர்து உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும் புதுடில்லியில் மக்கள் குடியிருப்புகள் அகற்றம், உணவு வினியோக அட்டைகள், பன்னாட்டு நிறுவனங்கள் மக்களது நிலங்களை அபகரிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் மக்களோடு நின்று வீதியில் போராடினார்.


குறிப்பாக அனில் அம்பானியின் நிறுவனம் நிலம் கைப்பற்றுவதற்கு போதிய நிவாரணம் கேட்டு கிளர்ச்சி செய்த விவசாயிகளோடு போராடியதால் உத்தரப்பிரதேசத்தில் 2007ல் காசியாபாத்தில் அரசு கைது செய்தது.
மன்னர் குடும்பத்தில் பிறந்தும் இந்திய மக்களின் மாபெரும் தலைவரான வி.பி.சிங் இன்று மறைந்தார். அவரது இழப்பு குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டுமல்ல. நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு!


காலத்தை வென்று நிற்கும் மாமனிதர்


பார்ப்பன ஊடகங்களால் முழுமையாக வெறுக்கப்பட்ட ஒரு தலைவர் என்பது தான், வி.பி.சிங் உண்மையான தொண்டுக்கு கிடைத்த மகுடம். பார்ப்பன ஆதிக்கக் கொடுமை களுக்கு எதிராக - பார்ப்பன ஊடகங்களின் வெறுப்புகளை சுமந்து அவதூறுகளை புறந்தள்ளி பொது வாழ்க்கையில் பயணப்பட்ட ஒரே புரட்சித் தலைவர் பெரியார்;


அதேபோல் இந்திய அரசியலின் பார்ப்பன அதிகார மய்யத்துக்கு எதிராக வரலாற்றுப் போக்கைத் திரும்பி அதிகார மய்யத்தை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை நோக்கித் திருப்பிய ஒரே தலைவர் விசுவநாத் பிரதாப் சிங் தான்! கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் தான் அதிகாரம்; பதவி என்பதை - இந்திய அரசியலில் செயல்படுத்தி பதவிகளைத் துச்சமென தூக்கி எறிந்த வரலாற்றுப் பெருமை இந்த மாமனிதருக்கு மட்டுமே உண்டு.


பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் வெளியிலிருந்து தந்த ஆதரவோடு, அவர் பிரதமர் பதவியில் நீடித்தாலும், ‘அயோத்தி ராமனுக்காக’ அத்வானி நடத்திய ‘ரத யாத்திரையை’ அவர் அனுமதிக்க தயாராக இல்லை. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் உறுதி செய்யும் மண்டல் பரிந்துரையை ஏற்கும் ஆணையையும் பிறப்பித்தார் (7.8.1990).


பா.ஜ.க.வின் ஆதரவோடு ஆட்சியைத் தக்க வைப்பதைவிட, அதிகாரத்தை சமூக நீதிக்காக இழக்கலாம் என்ற உறுதியான கொள்கை முடிவை எடுத்தார்.ஆட்சிக்கான ஆதரவை எதிர்பார்த்ததுபோல் பா.ஜ.க. விலக்கியது. நாடாளுமன்றத் திலே நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்து பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய தமது அரசின் முடிவை முன்வைத்து நியாயம் கேட்டார். வி.பி.சிங் அப்போது, சமூகநீதிக்கு எதிராக, அணி திரண்ட சக்திகள் எவை என்பதை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.


மண்டல் பரிந்துரையை கடுமையாக எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி 10 மணி நேரம் தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார். இந்த சமூகநீதி எதிர்ப்பு அணியில் காங்கிரஸ்-பா.ஜ.க.வோடு கைகோர்த்து, வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. (இவருக்குத்தான் - பிறகு, கி.வீரமணியின், திராவிடர் கழகம் ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ பட்டத்தை வழங்கி மகிழ்ந்தது)ராஜீவ்காந்தியும், ஜெயலலிதாவும் இப்போதும் அவர்கள் கட்சியின் தலைவர்கள் தான். ஆனால், கொள்கைக்காக பதவியை த் தூக்கி எறிந்த வி.பி.சிங், மக்கள் தலைவராக, வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.


அவர் பிறப்பித்த இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யும் துணிவு, அதற்குப் பின் ஆட்சி சிம்மாசனத்துக்கு வந்த பா.ஜ.க.வினருக்கோ, காங்கிரசுக்கோ கூட வரவில்லை.உ.பி.யின் முதல்வராக வி.பி.சிங் பதவி ஏற்றபோது, சம்பல் கொள்ளைக்காரர்களை மனித நேயத்துடன் அணுகி சரணடைய வைத்தார். அதிலும் ஒரு பிரிவினர் சரணடைய மறுத்து, வி.பி.சிங்கின் சொந்த சகோதரரையே படுகொலை செய்து, முதலமைச்சர் இல்லத்தின் முன்பே வீசினார்கள். சொந்த சகோதரனையே கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற முடியாத நான், உ.பி. மக்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்று தனக்குத் தானே நீதிக் கேட்டு முதல்வர் பதவியை தூக்கி எறிந்தார்.


இந்திரா மறைவுக்குப் பிறகு, ராஜீவ் அமைச்சரவையில் அவர்தான் நிதியமைச்சர். பெரும் தொழிலதிபர்கள் பணத் திமிங்கிலங்களின் வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து துணிந்து நடவடிக்கைகளை எடுத்தார். தொழிலதிபர்களின் செல்வாக்குக்கு பணிந்த ராஜிவ், துறையை மாற்றி வி.பி.சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார்.


அப்போதுதான் ‘போபோர்ஸ் பீரங்கி’ பேரத்தில், ராஜீவ் ‘கையூட்டு’ பெற்ற லஞ்ச ஊழல் வெளிச்சமானது. குத்ரோச்சி எனும் இத்தாலி, தரகர் மூலம் ராஜீவ்காந்திக்கு ‘கமிஷன்’ பணம் கைமாறியது. சுவீடன் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் அம்பலமானது. போபோர்ஸ் ஊழல் விசாரணைக்கு நடவடிக்கை மேற்கொண்டதால், வி.பி.சிங், மீண்டும் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று.


தொடர்ந்து ஊழல் ஒழிப்புக்கு ‘ஜன்மோட்சா’ இயக்கத்தைத் தொடங்கிய வி.பி.சிங், பின்னர் தேசிய முன்னணியை உருவாக்கி, தேர்தலில் போட்டியிட்டு, பிரதமராகி, இந்திய அரசியலின் போக்கை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து திருப்பினார்.ஈழத்திலே - ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டு ராஜீவ் காந்தி பூரித்து மகிழ்ந்தார். அந்த ராணுவத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அழைத்த பெருமை, அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்குக்குத்தான் உண்டு.


விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக நீங்கள் கருதவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எந்த ஒரு இயக்கத்துக்கும் முத்திரை குத்தக்கூடிய ரப்பர் ஸ்டாம்ப் எனது சட்டைப் பையில் இல்லை என்று பதிலடி தந்தார்.பம்பாயில், இந்து பார்ப்பன சக்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தைக் கண்டித்து, தண்ணீர்கூட அருந்தாமல், அவர் உண்ணாவிரதத்தை சில நாட்கள் தொடர்ந்தபோதுதான் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்புடன் 17 ஆண்டுகாலம் ஒவ்வொரு நாளும் அவர் போராடினார்.


மதவெறிக்கு எதிரான தளபதியாக, சமூக நீதியின் காவலராக வரலாற்றுப் புகழோடு இந்த மண்ணிலிருந்து 27.11.2008 அன்று விடைபெற்றுக் கொண்டுள்ளார்.நேர்மை - தூய்மை - கொள்கை எல்லாம் அரசியலில் அற்றுப் போய்விட்டதாக கூச்சல் போடும் பார்ப்பன தலைவர்களும், பார்ப்பன ஊடகங்களும், களங்கமில்லாத இந்த மாமனிதனை அங்கீகரித்ததா? இல்லை. இழிவுபடுத்தினார்கள். சேறுவாரி இரைத்தார்கள். இவர்களின் கோபமும், வெறுப்பும், அவரது மரணச் செய்தியில்கூட பிரதிபலிக்கவே செய்தன.


அந்த மாமனிதனின் மரணம், ஒற்றைக்காலச் செய்தியானது. அவரது இறுதி நிகழ்ச்சிகூட இந்த பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிப்புக்கு உள்ளாகிவிட்டது.வி.பி.சிங் என்ற வரலாற்று நாயகர், காலத்தை வென்று நிற்கும் மாமனிதர் என்பதற்கு பார்ப்பன ஏடுகளின் இந்த வெறுப்பும் கசப்புகளுமே சான்றாக நிற்கின்றன. நன்றியுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குடிமகனும், இந்த மனிதனின் நன்றி பாராட்டாத தொண்டுக்கு தலை வணங்குவான்.


சமூகநீதி சரித்திரத்தில் அழியாத அத்தியாயமாகிவிட்ட அந்த மனிதகுல மேதைக்கு பெரியார் திராவிடர் கழகம் தலைவணங்கி, வீர வணக்கத்தை செலுத்துகிறது.வி.பி.சிங் முடிவெய்தினார்; வி.பி.சிங் வாழ்க! வாழ்க!!