Wednesday, December 31, 2008

அறியப்படாத அமெரிக்கா!!???


ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.


சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.




ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.




கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.




ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.




இன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000 கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.




1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.
இந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர்.



ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.




நமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை ""பிரட் லைன்'', ""சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.




1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன. அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும்.



ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.




இத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் "பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும்? பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.




அரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.




அமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.




ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ""கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது.



மறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது.



WrittenBy: புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் 2008

பேராசிரியர் ஆஷிஷ் நந்தி





இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளுள் ஒருவர் எனவும் பின் காலனித்துவ ஆய்வுகளை துவக்கியவர் எனவும் மதிக்கப்படும் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி தற்போது ஒரு புதிய ‘அடையாள’த்தைப் பெற்றிருக்கிறார். குஜராத் மாநில காவல்துறைக் குறிப்புகளின்படி ‘சாதி, மதம், பிறப்பிடம் மற்றும் மொழியின் அடிப்படையில் பல்வேறு பிரிவினரிடையே பகையுணர்வை வளர்த்ததாக’ அவர் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கிறார். பேராசிரியர் நந்தியின் எழுத்துக்களுக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் ஒரு நாள் வரும் என்று நிச்சயமாக அவரோ அவரது ஆதரவாளர்களோ கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் மிகச் சரியாகவே சொல்லி வருவது போல குஜராத்தில்தான் இப்படி நடக்க முடியாததெல்லாம் நடக்கும்.


ஜனவரி 8-ம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் பேரா.நந்தி எழுதிய ‘நடுத்தர வர்க்கத்தினரைக் குற்றம் சுமத்துக’ என்ற கட்டுரையைக் குறித்து ‘தேசிய சமூக விடுதலை மன்றம்’ (National Council for Civil Liberties) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர் சமர்ப்பித்த மனுவை அகமதாபாத் காவல்துறை பதிவு செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. முன்பு ஒருமுறை சில அற்பக் காரணங்களுக்காக ‘நர்மதையைக் காப்போம்’ இயக்கத்தின் தலைவியான சமூகநல ஆர்வலர் மேதா பட்கர் மீது வழக்குத் தொடர்ந்ததும் இதே அமைப்புதான் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. நீதிமன்றம் இவ்வழக்கை பிறகு தள்ளுபடி செய்தது.


உண்மையைச் சொல்வதென்றால், பேரா.நந்தியின் அக்கட்டுரை நரேந்திர மோடியை மீண்டும் பதவியிலமர்த்திய டிசம்பர் 2007 குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஆராய்ந்திருந்தது. குறிப்பாக, மூன்று விஷயங்களைப் பற்றி அக்கட்டுரை கருத்து தெரிவித்திருந்தது.


முதலாவதாக, 2002 கலவரங்களுக்குப் பிறகு குஜராத்தில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் முஸ்லிம்களின் அவல நிலையை அக்கட்டுரை இவ்வாறு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.


குஜராத்தின் முஸ்லிம்களும் ‘தங்களுக்கான இடம் இதுதான்’ என்பதை பழகிக் கொண்டு விட்டார்கள். தங்கள் சொந்த மாநிலத்திலேயே நீதியும் நிவாரணங்களும் மறுக்கப்பட்டு, தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களின் தயவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசு தர மறுக்கும் நிவாரண உதவிகளில் ஒரு பகுதியை அடிப்படைவாத நோக்கமுடைய தன்னார்வல அமைப்பினர்

தருகின்றனர். நிவாரண உதவிகளை வழங்கும் அதே வேளையில், குஜராத் முஸ்லிம்கள் குஜராத்திய மொழி பேசுவதை விடுத்து உருது பேச வேண்டும், பெண்கள் முக்காடிட வேண்டும், பிள்ளைகள் மதரஸாக்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்துகின்றனர்.


இரண்டாவதாக, முஸ்லிம்களின் அவல நிலையை சுட்டிக் காட்டியதோடல்லாமல், அக்கட்டுரை குஜராத்தில் மதச்சார்பின்மை அடிப்படையிலான அரசியல் கூட்டமைப்புகள் இயங்கும் சூழ்நிலையையும் விளக்குகிறது. இத்தகைய கூட்டமைப்புகள் மற்றும் தனிநபர்களைப் பற்றியும் பேரா.நந்தி தனது கட்டுரையில் விமர்சிக்கத் தவறவில்லை.


சங்பரிவார அமைப்புகளை எதிர்ப்பவர்களின் மதச்சார்பின்மை கொள்கை உரிய பலனை அளிக்கவில்லை. மதச்சார்பற்ற வழக்குரைஞர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்களின் மூலம் பயனடைபவர்கள்கூட மதச்சார்பின்மை கொள்கைகளை தேவைப்படும் நேரத்தில் ஒரு கருவியாக மட்டும் உபயோகித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு இக்கொள்கைகள் புரிவதுமில்லை; அவர்கள் அவற்றை மதிப்பதுமில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்களின் மதங்களே ஆறுதலளிக்கின்றன. அவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் தங்கள் நம்பிக்கைகளை மேலும் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். உண்மையில், ஆழமற்ற மதச்சார்பின்மைக் கொள்கைகள் காந்திய கொள்கைகளின் முதுகெலும்பையே முறித்து, அலி ஷரியதி, டெஸ்மண்ட் டுட்டு, தலாய் லாமா போன்றோர் உருவாவதையும் தடுக்கிறது. இவர்களைப் போன்றவர்கள் வறிய மற்றும் வலிமையற்ற மக்களின் துயரங்களில் தலையிட்டு அவற்றைப் போக்குவதற்கு குரல் கொடுக்கக் கூடியவர்கள்.


குஜராத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தினர், போலியான சமுதாயப் பற்று, மதாபிமானம் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு துணைபுரிவதையும் இக்கட்டுரை கடுமையாகச் சாடுகிறது.


படித்த நடுத்தர வர்க்கத்தினரின் பிடியிலிருந்து குஜராத்தை விடுவிப்பது எளிதானதன்று. இந்த வர்க்கத்தினர் போராட்ட மதவாதத்தின் மூலம் தங்களுக்கு ‘போர்க்குணம் கொண்ட சமுதாயம்’ என்றதொரு புதிய அடையாளமும் சுயமதிப்பும் கிடைப்பதாக நம்புகிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பெங்காலி பாபுகள், மஹராஷ்ட்ரிய பிராமணர்கள், காஷ்மீர் முஸ்லிம்கள் போன்றோரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். குஜராத்தின் இந்த வர்க்கம் தங்கள் கரங்களில் இரத்தக்கறை படியாமலேயே, திட்டமிடுதல், பணஉதவி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலமாகப் படுகொலைகளை அரங்கேற்றி அதன் இரத்த வாடையை நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இக்கொலைகளைச் செய்பவர்கள் பழங்குடிகள், தலித்கள் போன்ற மிக கீழ்த்தட்டைச் சேர்ந்த மக்கள்தான். சமீப காலத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் கல்வி நிறுவனங்களும் ‘வெறுப்புணர்வை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை’களாக மாறிப்போயிருக்கின்றன. தேசியவாதம் என்ற பெயரில் இரத்தவெறி கொண்ட பொறுப்பற்ற பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு இது போன்ற அராஜக செயல்பாடுகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றனர்.


பேரா. நந்தியின் கருத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் அவற்றுடன் ஒத்துப்போவர் என்றுச் சொல்ல முடியாது என்றாலும், அவரது எழுத்துக்களில் வெற்று வாதங்கள் இருப்பதில்லை என்பதையும் சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவை தெளிவாக விவரிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்வர். எல்லோருடைய மனத்திலும் இயல்பாகத் தோன்றும் ஒரு கேள்வி, பேரா.நந்தியின் மீது கிரிமினல் வழக்குப் பதியும்படி காவல்துறைக்கு சமிக்ஞை கொடுக்கப்படும் அளவிற்கு இக்கட்டுரை குஜராத் அரசு வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்பதே.


பொதுவாகவே, தமது கொள்கைகளை எதிர்ப்பவர்களை இலக்காக்கி அவர்கள் மீது பலவகைகளில் களங்கம் சுமத்துவது ஹிந்துத்துவப் படையினரின் நடைமுறை. எதிர்க்கருத்துக் கொண்டவர்களை வாயடைத்துப் போகச் செய்யும் அரசியல் உத்தி இது. பேரா. நந்தி மீதான இந்த வழக்கும் இவ்வகையைச் சார்ந்ததே.


கடந்த ஆறு ஆண்டு கால குஜராத்தின் வரலாற்றில், சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வை விதைக்கும் இந்துத்துவச் செயல்திட்டங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்கள் அடக்கப் பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமூகநல ஆர்வலர்கள் சாராபாய், நஃபிஸா அலி, ஜி.என்.டேவி போன்றோர் இத்தகைய அடக்குமுறைகளுக்கு ஆளானதை குறிப்பிடலாம்.. பேரா. நந்தியின் விவகாரத்தில், ஒருவேளை அவர் ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கங்களின் எதிர்காலத் திட்டங்களை தெளிவாக முன்னறிவிப்புச் செய்தது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை போலும்.


உருது கவிதைகளின் ஸ்தாபகர் என மதிக்கப்படும் வலி குஜராத்தியின் அடக்கவிடம் நிர்மூலமாக்கப் பட்டது, இந்திய முஸ்லிம்களின் பன்முகப்பட்ட செறிவான கலாச்சார அடையாளங்களை அழிக்கும் ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது.. சீக்கிய தீவிரவாதம் தலைதூக்குவதற்கு ராஜிவ் காந்தி காரணமாக இருந்தது போலவே, இந்தியாவில் அடிப்படைவாத இஸ்லாமின் வளர்ச்சிக்கு சங்பரிவாரங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை வருங்காலத் தலைமுறை நினைவுகூரும்.


பேரா. ஆஷிஷ் நந்தி மீது போடப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு, பாஜக மத்தியில் ஆட்சியிலிருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அவதூறுப் பிரச்சாரங்களை நினைவு படுத்துகிறது. 1998-ல் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து கல்வி பாடத்திட்டங்களை தமது கொள்கைகளுக்குத் தோதாக மாற்றியமைக்க முயன்றபோது, சங்பரிவாரங்களின் வரலாற்றுத் திரிப்புகளை எதிர்த்த அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் பலவிதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. பாஜகவினர், அவர்கள் மாற்றிக் காட்ட விரும்பிய இந்திய வரலாற்றை ஒப்புக் கொள்ளாத அறிஞர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்களை திட்டமிட்டு அவமானப் படுத்தினர்; அவர்கள் காட்டும் ஆதாரப்பூர்வமான வரலாற்றை அங்கீகரிக்காமல் உதாசீனப் படுத்தினர்.. இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் ஆதரவில், பேராசிரியர்கள் சுமித் சர்க்கார், கே.என். பணிக்கர் ஆகியோரின் தலைமையில் நடந்து கொண்டிருந்த ‘விடுதலையை நோக்கி’ என்ற ஆய்வுத்திட்டம் நிறுத்தப் பட்டது. இவர்களைப் போன்ற நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கு, ‘ஹிந்து எதிர்ப்பு ஐரோப்பிய இந்தியர்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் பெயரிட்டார். மேலும், இந்த வரலாற்றாய்வாளர்களின் தாக்கம் இந்திய கல்வித்திட்டத்தில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) மிக முனைப்புடன் செயல் பட்டது. 2001-ல், ‘இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது’ என்று காரணம் காட்டி பாடப்புத்தகங்களிலிருந்து பல பகுதிகளை NCERT நீக்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஆரிய சமாஜிகளின் குழு ஒன்று அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷியைச் சந்தித்து, இத்திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருந்த வரலாற்றாய்வாளர்கள் ரொமிலா தாப்பர், ஆர்எஸ் ஷர்மா, அர்ஜுன் தேவ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஜோஷியும் தம் பங்கிற்கு, ‘ஆயுதந்தரித்த பயங்கரவாதிகளை விட கல்வி சார்ந்த பயங்கரவாதிகள் மிக மோசமானவர்கள்’ என அவ்வப்போது தமது ‘சொந்த ஆய்வுக் கருத்தினை’ வலியுறுத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.


நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, December 30, 2008

மாவீரன் கர்கரேயை காரில் கடத்தி படுகொலை செய்தது யார்?



மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குறித்த தகவல்கள் மறைந்து போயின. அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர் அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.குறிப்பாக மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.மாவீரன் கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது சில சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலேகான் குண்டுவெடிப்பு சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர் கள் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.கர்கரேயின் மரணம் குறித்த மர்மம் நீடித்த நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார். "கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்? ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய அந்த நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது யார்? பயங்கரவாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன் இல்லத்திற் கோ செல்லவிடாமல் காமா மருத்துவமனைக்கு செல்வதற்கு அவரை தவறாக தகவல் கூறி வழிநடத்தியது யார்?'' என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளுமன்ற அவையினைத் திணறடித்தார்.கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துர் ரஹ்மான் அந்துலேயின் உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதகமான வாதம் எனக் கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக் கொண்டனர். ஒரு நேர்மையான நெஞ்சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம் இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ்சமும் இல்லாத பாஜக கும்பலின் வெற்றுக் கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது..அப்துர் ரஹ்மான் அந்துலே-யின் நாடாளுமன்ற அறைகூவல் நாட்டையே அவர் பின்னால் திரள வைத்துள்ளது. அந்துலே எழுப்பிய உரத்த சிந்தனை நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அந்துலே இந்திய முஸ்லிம்களின் மனசாட்சியினை தட்டி எழுப்பியுள்ளார்.. அதோடு அவரின் நாடாளுமன்ற அறைகூவல் இந்திய தேசத்தை உலுக்கியுள்ளது. அந்துலேவை அமைச்சரவையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என காங்கிரசுக்குள்ளே உள்ள பாசிச அடிவருடிகளும் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்துலே தனது விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. பிரதமரும் சரி, அந்துலேயும் சரி அத்தகவலை உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் அந்துலே எழுப்பியுள்ள கேள்விகளில் உள்ள சத்தியத்தை உணராமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அப்துர் ரஹ்மான் அந்துலேக்கு எதிரான செய்திகளை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வருகின்றன. அந்துலேயின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேசத்துரோகிகள் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் பொறியில் சிக்கிய எலியாக தவிக்கிறது. அந்துலே அவர்களை அமைச்சர் பதவியை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட சக்திகளும், காங்கிரசுக்குள் இருக்கும் பாஜகவின் ரகசிய ஆதரவாளர்களும் துடியாய்த் துடிக்கின்றனர். இந்நிலையில் பதவியை விட்டு நீக்கினால் அந்துலேயின் அரசியல் எழுச்சி உடையதாகவும், அந்துலேயை நீக்குவதால் காங்கிரஸ் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும் என காங்கிரஸ் மேலிடம் முடிவெடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது.மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப்பட்ட கர்கரேயின் விஷயத்தில் மகாராஷ்டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது. கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்டமாட்டாது என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.நாட்டின் வர்த்தக தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவமனைக்கு காரில் கடத்திச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.கர்கரேயை படுகொலை செய்த பயங்கரவாதிகள் அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பதுதான் மக்கள் மனதில் உள்ள கேள்வி.அந்துலேவிற்கு முஸ்லிம் அறிஞர்கள் ஆதரவு!அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் ஜஃபரியாப் ஜீலானி, அந்துலேயின் கருத்தை ஆதரித்திருக்கிறார். கர்கரே படுகொலை குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும், கர்கரேயின் மரணம் தெளிவுப்படுத்தப்பட வேண்டும், அதில் தவறுகள் இருந்தால் அவை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்கரே போன்ற சிறப்பு மிக்க அதிகாரிகளின் வாழ்வும் மரணமும் குறித்த இறுதிக் கேள்வியாக இது அமைய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.இந்திய உலமாக்குழுவின் பொதுச்செயலர் மௌலான நைமூர் ரஹ்மான், அனைத்திந்திய சன்னி முஸ்லிம் வாரியத்தின் தலைவர் மௌலான முகம்மது முஸ்தாக் ஆகியோரும் கர்கரேயின் மரணம் குறித்து விசாரணை தேவை என்று கூறியிருக்கிறார்கள். விசாரணையை மறுப்பவர்கள் உண்மை வெளிபடக் கூடாது என்று விரும்புகிறார்கள். கர்கரே போன்ற அதிகாரிகளின் மரணம் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது என்று மௌலானா முஸ்தாக் தெரிவித்திருக் கிறார். ஷியா பிரிவின் அறிஞர் மௌலானா கல்பே ஜாவத் கூறுகையில், `கர்கரே-யின் தியாகம் குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பொருத்த மற்ற நேரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதால் அது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. வேறு பல இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையிலும், கர்கரே காமா மருத்துவமனை நோக்கி தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார்' என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு தீவிரவாதிகள் எளிதாக வருவதற்கு காரணமாக இருந்த பாதுகாப்பில் உள்ள பலகீனத்தையும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் மௌலானா. காலித் ரஷித், ``விசாரணை நடத்துவதால் என்ன தீங்கு நேர்ந்து விடப்போகிறது?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கர்கரேயின் மரணத்திற்கு வேறு காரணம் இருக்க முடியுமோ என்ற சந்தேகத்தை தெளிவுப்படுத்துவதற்கு விசாரணை அவசியப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் சரியான தடத்தில் இருந்தால் பிறகு பி.ஜே.பி எதற்காக விசாரணையை எதிர்க்கிறது. கர்கரே உயிரோடு இருந்த போது அவரை தேசதுரோகி என்று அழைத்தது. அவருடைய விசாரணை முறைகளை கண்டித்தது. தற்போது அவர் மரணம் குறித்த விசாரணையை தடுக்கிறது. இதிலிருந்து உண்மை வெளிப்பட பிஜேபி விரும்பவில்லை என்றே தெரிய வருகிறது' என்று காலித் ரஷித் கூறியிருக்கிறார்அந்துலேக்கு ஆதரவாக முலாயம் சிங், மாயாவதி, திக்விஜய் சிங்!ஹேமந்த் கர்கரே படுகொலை குறித்து மத்திய அமைச்சர் அந்துலே யின் கருத்துக்கு மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்றவை மாலேகான் விசாரணை குறித்தும் கர்கரேயின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தன. இந்தப் பின்னணியை கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றே அந்துலே கருத்து தெரிவித்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. மும்பை பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு உத்தரவிட்டது யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்.கர்கரே ஹிந்துக்களை மட்டும் கைது செய்யவில்லை. எல்லாப் பிரிவுகளில் உள்ள பயங்கரவாதிகளை, கொடிய குற்றவாளிகளைக் கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே என்று கூறிய திக்விஜய் சிங், பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்காக மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிட்டார்.இதனிடையே அந்துலேவுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் ஆதரவு தெரிவித்துள்ளன.மாலேகான் வழக்கின் கதி? தீவிரவாதத் தடுப்பு படையினர் அச்சம்!மாலேகான் குண்டு வெடிப்பில் சங்பரிவாரின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டியவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே. ஹிந்துத்துவ பாசிச சக்திகள் விஷயத்தில் நாட்டு மக்கள் எச்சரிக்கை காட்ட வேண்டிய முக்கியமான தருணத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.கர்கரேயின் திடீர்மறைவு மகாரஷ்ட்ர மாநில தீவிரவாதத்தடுப்பு படையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கு முன்பு போல் துரித கதியில் இயங்குமா? மாநில அரசிடம் இருந்து முன்பு போலவே ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற அச்சத்தில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் ஆழ்ந்துள்ளனர்.அஞ்சா நெஞ்சன் கர்கரே இன்று இல்லை. கர்கரேவுக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய தீவிரவாதத் தடுப்பு படைக்காக பிரத்யேகமாக விமானத்தையே வழங்கிய சரத்பவாரின் தேசியவாதக் கட்சியைக் சேர்ந்த துணை முதல்வர் ஆர்.ஆர் பாட்டீல் இன்று பதவியில் இல்லை. இத்தகைய நிலையில் இந்த வழக்கு குறித்த கவலை காவல்துறை வட்டாரத்தில் பரவலாக நிலவுகிறது. இருப்பினும் கர்கரேயின் தியாகம், அவர் பாடுபட்டதற்கான உரிய பலனை அடையாமல் விடக்கூடாது என்ற உறுதியில் தீவிர தடுப்புப் படையினர் உள்ளனர்.மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்கிறார் தீவிர வாதத் தடுப்புப் படையின் கூடுதல் ஆணையர் சுக் விந்தர் சிங்.நாடாளுமன்றத்தில் நெறிக்கப்படும் உரிமைக்குரல்மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.ஆர் அந்துலே, மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யும் அளவுக்கு நிர்பந்திக்கப்பட்டார்.
இந்துத்துவ பாசிச சக்திகள் கர்கரே யின் மரணத்தால் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப்போடும் ஒரு கேள்வியைத் தான் அந்துலே எழுப்பி னார். மராட்டிய மாநிலத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஸ்ரீ காந்த் புரோகித் என்ற ராணுவ அதிகாரி, அமிர்தானந்தா என்ற ஆண் சாமியார், பிரக்யாசிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் உட்பட 10 இந்துத்துவ தீவிரவாதிகளின் கூட்டுச் சதியைக் கண்டறிந்து கர்கரே தேசத்துக்கு வெளிப்படுத்தினார். இது, தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் என்று கூறிவந்த இந்துத்துவ பாசிஸ்டுகள் வயிற்றில் சயனைடை கரைத்தது. முஸ்லிம்களின் கணக்கில் வரவு வைத்த சாமியார்களின் குண்டுவெடிப்புகளை சல்லடை போட்டு அலசியவர் என்பதால் கர்கரேயின் திடீர் மரணம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் தந்தது.தில்லி ஜாமியா நகர் துப்பாக்கி சூட்டில் முஸ்லிம் இளைஞர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என்று கூறப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சர்மாவின் சடலப் பரிசோதனை காவல்துறை அறிவித்த தகவலை புரட்டிப் போட்டது அனைவரும் அறிந்ததே. பின் மண்டையில் சுடப்பட்டு முன் நெற்றி வழியே துப்பாக்கிரவை வெளியேறியதாக மருத்துவ அறிக்கை கூறியது. இச்சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், காவல்துறை அதிகாரிகளை தீவிரவாதிகள் மட்டும் கொல்வதில்லை என்ற பூடகமான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்துத்துவ சக்திகளால் கடுமையாக கண்டிக்கப்பட்ட கர்கரே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறியிருந்தார். இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை சாதகமாக்கிக் கொண்டு வேறு சக்திகள் கர்கரேயை கொன்றிருக்க முடியுமோ என்ற சந்தேகம் பரவலாக உள்ளது. இதையே அந்துலேயின் கேள்வியும் உறுதி செய்கிறது. மக்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தனது கேள்வி வெளிப்படுத்தியதாக அந்துலே கூறியுள்ளார்.மும்பை நகரத்தை பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டிருந்த போது அந்த பயங்கரவாதிகள் சுடும் இடத்தை நோக்கி மூன்று முக்கிய அதிகாரிகளை வழி நடத்தியது யார் என்று தான் நாடாளுமன்றத்தில் அந்துலே கேள்வி எழுப்பினார். இக்கேள்வியை எதிர்கொண்ட நேரத்தில் ஜனநாயகத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆவேசக்குரல் எழுப்பினர், வெளிநடப்பு செய்தனர். அவையில் குளறுபடி செய்ய இதனை ஒரு வாய்ப்பாக்கினர். தாவூத் இபுராஹிம், ஐ.எஸ்.ஐ. யின் கைப்பாவை என்றும் அந்துலேயை அவமானப்படுத்தினர். அந்த நேரம், லல்லு பிரசாத்தை தவிர வேறு யாரும் ஆதரவாக பேசவில்லை. காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மௌனிக்க, அதிலும் ஒரு கூட்டம் அந்துலேவுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியது.
பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். தனது கட்சியை சார்ந்த ஒருவர் அதுவும் குறிப்பாக, சிறுபான்மை நலத்துறை சார்ந்த அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இருக்கும் உரிமை குறித்து பிரதமர், சபாநாயகர் முதலானோர் பேசாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. தனது கட்சியே தனக்கு ஆதரவளிக்காததும், அதில் இருந்தே எதிர்ப்புக் குரல் எழுந்ததும், பிரதமரே மௌனமாக இருந்துள்ளதும், அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யக் காரணமாக அமைந்தது. கர்கரேயின் திடீர் மரணத்தால் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியில் குறைபாடு வந்து விடுமோ என்ற ஆதங்கம் சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு ஏன் வரக் கூடாது? இதைக்கூட கேட்காமல் பின்னர் எதற்காக அவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்க வேண்டும். அதே நேரம் கர்கரே பற்றி நரேந்திர மோடி கூறிய விமர்சனம் விவாதிக்கப்படுவதில்லை என்பதையும் கவனிக்க. மோடி விமர்சித்த காரணத்தால் அவர் வழங்கிய நிவாரண தொகையை கர்கரே மனைவி வாங்க மறுத்தது பற்றி விவாதிக்கப்படுவதில்லை.பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் டிசம்பர் 6க்கு பிறகு நாடாளுமன்றத்தை கூட்டியிருக்கும் காங்கிரஸிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. சட்டமன்றங்கள் மற்றும் நாடாளு மன்றத்தில் அமரும் பொதுக்கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை, மனக்குறைகளை வெளிப் படுத்துவதில்லை. ஆனால் தனது அமைச்சர் பொறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்ட அமைச்சர் அந்துலே பாராட்டுக்குரியவர்.
சிறுபான்மை நலனுக்காக கேள்வி கேட்க முடியாத ஒரு பதவி தனக்குத் தேவையில்லை என்று பதவியை இழக்க முன்வந்துள்ளார் அந்துலே. குலாம் மஹ்மூது பனாத்வாலா போன்ற உறுதிமிக்க அறிவுசார் முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய தருணங்களில் எல்லாம், பல கட்சியினர், அவர்களது உரையின் குரல்வளையை நெறிக்கப் பார்ப்பார்கள்... இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே சிறுபான்மை உறுப்பினர்கள் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். அதனால் அதிர்வுகள் அதிகரிக்கின்றன. அதே நேரம், கேள்வி கேட்டும் உரிமைகள், முஸ்லிம் சமூகத்திற்கு நாடாளுமன்றத்திலும் மறுக்கப்படுகிறது என்ற உண்மை அந்துலே வழியாக வெளிப்படுகிறது.
அந்துலேவுடன் இணைந்து குரல் கொடுக்கவும் வெளிநடப்பு செய்யவும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்திருக்குமானால் பாசிஸ்டுகளின் குரல் வளை நசுக்கப்பட்டிருக்கும்.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரல் வளை நெறிக்கப்படுவதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற வேண்டும்.

பாதகன் இஸ்ரேலியனால் கொல்லப்பட்ட பாலகனே! சுவனத்துக்கு சொந்தக்காரனே!



பாலஸ்தீன !பாலகனே
நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால்
நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை
நெஞ்சில் சுமக்கிறாய்.
நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து

எத்துனை வேதனை நீ ஏற்றாயோ
என்னாள் குமுற இயலவில்லை
உன் நெந்சம் துளைத்த ரவைகள்
எம் இதயமும் தொலைத்ததடா

காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய்
காலம் உனக்கு விடை தந்து விட்டது
காயம் உனது ஆறி விட்டது
இதயமோ எமது?

படை பட்டாளங்களுக்கு முன்னால்
பாலஸ்தீனனை உன்னால் எறியப்படும்
கற்கள் எம்மாத்திரம் என நினைத்திருந்தேன்
கண்டு கொண்டு விட்டேன் உண்மையை

ஷைத்தானை கல்லால்தான் அடிக்க வேண்டும்
சுவனத்தின் சொந்தகாரனே
ஷஹிதாகி சாய்ந்தவனே
சின்னஞ்சிறு பாலகனே

உன் மரண செய்தி கேட்டு
அன்னை உனது இங்கு
இன்னும் இருந்திருந்தால்
எப்படி துடித்திருப்பாளோ

இன்னும் அதிகமாய் இந்த
இஸ்லாம் சமுதாயம் துடிக்கிறது
இம்மை துறந்த இலவளே
என்றாவது சந்திப்போம்
இல்லை, இல்லை
சுவனத்தில் சந்திப்போம்

முதுவை சல்மான், ரியாத்

Saturday, December 27, 2008

விடுதலை வேங்கை. இயக்குனர்.அமீரின் ஆதங்கம்!!!



`யோகி' திரைப் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார் அமீர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஆவேசமாய் பேசி, சிறை சென்று வந்ததால் சற்று தாமதமாகிறது படம். ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.


`யோகி' எந்தளவிற்கு வந்திருக்கிறார்?


"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது.


ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன?''


ஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது?


"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள்.


அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம்.


`ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது.


சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''



மிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?


"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது.


முஸ்லிம்களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது.


இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''


ஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்?


"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு.


அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை.


மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை?


இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்?


இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.


- இரா. ரவிஷங்கர் நன்றி: குமுதம்

செல்வி ஜெயலலிதாவின் இயல்பு


திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது.


அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார்.


அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது.


ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது. அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை.


கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை.


அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன. அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார்.


சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம். ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.


அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன. நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது. அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.


ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா. அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு.


அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார்.


தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம்.


இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.


இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்', இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை'யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன. சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.


அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றிவீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன.


ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார்.


சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது' என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்.


பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார்.


ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார். காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை.


பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.


அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது. தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார்.


அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.


`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே' என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.


ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான்.

Thanks to: Kumudam

Friday, December 26, 2008

கொரியாவில் நடந்த சாம்சங் நிறுவன விழாவில் - ஓர் ஆயங்குடியான்....



கடந்த நவம்பர் 10 – 14 வரை நடந்த நவீன சிசிடிவி கேமராவின் அறிமுக விழாவில் அமீரகத்தின் அல் நூர் நிறுவனத்திலிருந்து கலந்துக்கொண்ட இருவர்களில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன் முஹம்மது தஸ்லீமும் ஒருவராக கலந்துக்கொண்டதில் ஆயங்குடி பெருமிதம் கொள்கிறது.


கொரியாவில் நடந்த இந்த அறிமுக விழாவில் சர்வதேச அளவிலிருந்து பல மேலை நாட்டு வல்லுனர்களும், சாம்சங் நிறுவனத்தின் தலைவரும் கலந்துக்கொண்டார் என்பதும், சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான உரை நிகழ்த்தியதற்காக சாம்சங் நிறுவனத்தின் தலைவரிடம் தஸ்லீம் அவர்கள் பரிசு பெற்றார் என்பதும் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய ஒன்று.


முகம்மது தஸ்லீமுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள்

+971-50-7005179 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு வாழ்த்தலாம்.


Thanks to: ஆயங்குடியான்

Wednesday, December 24, 2008

அமெரிக்க பயங்கரவாதம்

அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள்
புதிய ஜனநாயகம் 2008


ஈவிரக்கமற்ற படுகொலைகளால் ஈராக் நாட்டையும் ஆப்கனையும் குதறிக்கொண்டிருக்கும் அமெரிக்க நாசகார அரசுப் படையினரின் மத்தியில் இருந்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் தோன்ற ஆரம்பத்துள்ளன.
சென்ற தலைமுறையில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த முன்னாள் படைவீரர்களின் உந்துதலால் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்'' எனும் நிகழ்வு அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் ஈராக், ஆப்கன் போர்களில் பங்கெடுத்த அமெரிக்க வீரர்களில் 200 பேருக்கும் மேலானோர், அமெரிக்க ராணுவம் அந்நாடுகளில் செய்துள்ள படுகொலைகளையும், மனிதவிரோதச் செயல்களையும் அம்பலப்படுத்தினார்கள்.
நான்கு நாட்கள் நடந்த அச்சந்திப்பில் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' எனும் பேரால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர்களுக்கு எதிராக அமெரிக்கப் படை நடத்திய மனித உரிமை மீறல்கள் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட்டன.
அமெரிக்காவின் பேரால் தாங்கள் செய்த கொடூரச் செயல்கள் மனசாட்சியை உறுத்தியதால் அவற்றை அம்பலப்படுத்துவதென்று முடிவு செய்த அப்போர்வீரர்களின் சாட்சியங்கள் தொகுக்கப்பட்டு ''குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்: ஆக்கிரமிப்பின் சாட்சியங்கள்'' என்ற நூலாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

அந்நூலில் பதிவாகியிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் வான்வெளி உளவமைப்புப் பிரிவின் கீழ் ஈராக்கிற்கு சென்ற மைக்கேல் பிரிஸ்னர் எனும் முன்னாள் படைவீரரின் வாக்குமூலம் கீழே தரப்பட்டுள்ளது.
''அமெரிக்க இராணுவத்தில் நான் சேர்ந்தபோது இனவெறி என்பதே இராணுவத்தில் கிடையாது எனச் சொன்னார்கள். இவ்வெறியைக் களைவதற்காக, இராணுவத்தில் சேர்ந்த அனைவருக்கும் "சம வாய்ப்பு' என்னும் பயிற்சி தந்தார்கள். ஒவ்வொரு இராணுவ யூனிட்டிலும் இனவெறிக்கூறுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அங்கே சமத்துவமின்மையும், இன ஒதுக்கலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகவே நான் உணர்ந்தேன்.

ஆனால் செப்டம்பர் 11, 2001 (இரட்டைக்கோபுரங்கள் தகர்ப்பு)க்குப் பிறகு "முக்காடு மண்டையர்கள்', "ஒட்டகம் ஓட்டிகள்' போன்ற சொற்களும், இச்சொற்களை விட அதிக துவேசமான "பழுப்பர்கள்' எனும் சொல்லும் இராணுவத்தில் புழக்கத்தில் வந்தன. கட்டளையிடும் தகுதியில் உள்ள உயர்பதவி வகிப்பவர்கள்தான் இச்சொற்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். உடனடியாக இராணுவம் முழுக்க இனவெறியை உமிழும் வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் புழங்க ஆரம்பித்தன.

2003இல் நாங்கள் ஈராக்கிற்கு சென்றபோது, எங்கள் அகராதியில் "ஹாஜி' எனும் புதிய வார்த்தை சேர்ந்தது. ஹாஜி என்றால் "எதிரி' என எங்கள் அகராதியில் பொருள்படும். ஒவ்வொரு ஈராக்கியனுமே எங்களுக்கு "ஹாஜி'தான். "ஹஜ்' பயணம் மேற்கொள்பவர்களைக் குறிக்கும் "ஹாஜி' எனும் இசுலாமின் மிக உயர்வான சொல், மிக மோசமான விசயத்துக்கு எங்களால் பயன்படுத்தப்பட்டது.

நாங்கள் ஈராக்கில் எதிர்கொண்ட "ஹாஜி'க்களில் ஒன்றைப் பற்றி சொல்லப்போகிறேன். ''ஈராக்கில் ஐந்தாறு வீடுகள் மட்டும் தற்போது இராணுவத்துக்கு சொந்தமாகி விட்டதென்றும், அவ்வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை விரட்டி விடவேண்டுமென்றும்'' எங்களுக்குக் கட்டளையிட்டனர்.
அவ்வீடுகளுக்கு சென்று "இனி இவ்வீடுகள் உங்களுடையதல்ல' என்பதைச் சொன்னோம். ஆனால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடோ, இழப்பீடோ நாங்கள் தரவில்லை. அவர்கள் எங்கு போவது என்பதையும் சொல்லவில்லை. அக்குடும்பத்தினர் குழப்பமும் பீதியுமடைந்தனர். அடுத்து என்ன செய்வது என்பதை அறியா அம்மக்கள் வீடுகளை உடனடியாகக் காலி செய்யவில்லை. உடனே அவர்களை அங்கிருந்து நாங்கள் வலுக்கட்டாயமாய் விரட்டி அடித்தோம்.

ஒரு பெண்மணி, இரண்டு சிறுமியர், நடுத்தர வயதுடைய இரு ஆண்கள் இவர்களைத் தவிர ஒரு முதியவர் ஆகியோர் அடங்கிய குடும்பம் ஒன்றை வீதியில் வீசி எறிந்தோம். வீட்டை விட்டு வெளியேற மறுத்துப் போராடிய முதியோர் உள்ளிட்ட ஆண்கள் அனைவரையும் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பினோம்.

இவ்வாறு நூற்றுக்கணக்கான குடும்பத்தினரை அவர்கள் வசித்து வந்த வீடுகளில் இருந்து விசாரணை எனும் பெயரால் சில மாதங்களிலேயே துரத்தி அடித்தோம்.

இதன் பின்னர் நடந்த ஒரு விசாரணைச் சம்பவம், ஈராக்கில் நாங்கள் நடத்தி வரும் ஆக்கிரமிப்பின் இயல்பை எனக்குத் தெளிவாக உணர்த்தியது.
அந்த விசாரணைக் கைதி ஏற்கெனவே உள்ளாடைகள் உரியப்பட்டு அம்மணமாக இருந்தான். அவனது புறங்கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. தலையை கோணிப் பையால் மூடியிருந்தனர்.
அவனை, சுவர் ஒன்றின் முன்னால் அவனுடைய மூக்கு சுவரை உரசும் வண்ணம் நிறுத்தி இருந்தோம். முகத்தைக் கூட பார்க்க முடியாத அக்கைதியின் மண்டையை உரசினாற்போல் உலோக நாற்காலி ஒன்றினால் சுவரில் ஓங்கி அடிக்கவேண்டியதே, எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை. விசாரணைக்கான கேள்வியை சக படைவீரன் கைதியிடம் கேட்பான்.
அவனிடம் இருந்து வரும் பதில் எதுவாய் இருப்பினும், எனது வேலை அவனது காதை உரசினாற்போல ஓங்கிப் பெரும் சப்தம் வரும் வரை சுவற்றில் அடிப்பதுதான். அவன் களைத்துச் சோர்ந்துவிடும் வரை மாற்றி மாற்றி இதனைச் செய்தோம்.

அவன் ஒழுங்காக நிற்கிறானா என்பதைச் சோதிக்கும்படி என்னுடைய சார்ஜென்ட் உத்தரவிட்டார். அவன் காலில் ஏதோ பிரச்சினை மாதிரி தெரிந்தது. அவனது காலில் காயம் ஒன்று இருந்ததால் நேராக நிற்க இயலாமல், அவன் தரையை நோக்கிச் சரிந்தவண்ணம் இருந்தான். அவனை நேராக நிற்க வைக்க உத்தரவு வரவே, அவன் கால்களைப் பிடித்து நேராக நிறுத்தினேன். ஆனால், பலனில்லை.
மீண்டும் மீண்டும் சரிந்து விழுந்தான். உத்தரவைச் சரியாக நான் நிறைவேற்ற வில்லை என்று சார்ஜெண்ட் என் மீது கோபப்பட்டு, அக்கைதியை அவரே தூக்கி எழுப்ப அவனுடைய முகத்தைச் சுவரில் தடார் என்று மோதவைத்து நிறுத்தினார். மீண்டும் சரிந்த கைதியை மாறிமாறிச் சுவற்றோடு சேர்த்து அறைந்தார். சற்று நேரத்தில் எல்லாம், சார்ஜெண்ட் வெளியே போய்விட்டார்.
இப்போது கீழே சரிந்து விழுந்த கைதியைத் தூக்கி நிறுத்தினேன். அவனது முகத்தோடு சேர்த்துக் கட்டியிருந்த கோணிப்பையில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியேறிக்கொண்டிருந்தது.

அவனை அப்படியே உட்கார வைத்து விட்டேன். சார்ஜெண்ட் வரும் அறிகுறி தெரிந்ததும், மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைப்பதை ஆரம்பித்தேன்.
நான் செய்த இந்த இராணுவ சேவையை எண்ணிப் பார்க்கையில் மிகவும் வெட்கப்படுகிறேன்.
எங்காவது வயதான மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம், ஈராக்கில் வீடுகளை விட்டு எங்களால் ஸ்ட்ரெச்சர்களில் கட்டாயமாகத் தூக்கிப்போடப்பட்டு ஈராக் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட முதியவர்கள் நினைவுக்கு வந்து நான் குற்ற உணர்வுக்கு உள்ளாகிறேன்.

குழந்தைகளோடு இருக்கும் தாய்மார்களைப் பார்க்கும்போதெல்லாம் எங்களால் வெளியேற்றப்பட்ட எண்ணற்ற தாய்மார்களும் அவர்களின் குழந்தைகளும் கதறக் கதற அழுத கண்ணீர் நினைவில் எழும்புகிறது. ஆயுதம் தரித்த நாங்கள் தெருவில் வீசி எறிந்த குழந்தைகள் நினைவில் வந்து என்னை வதைக்கின்றனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுகிறோம் என்று எங்களிடம் சொன்னார்கள். உண்மையில் பயங்கரவாதி நான்தான். பயங்கரவாதமே எங்கள் படை எடுப்புதான்.

இனவெறிதான், இப்பேரழிவுகளையும் அடுத்தவர்களின் நாட்டை அநியாயமாக ஆக்கிரமித்திருப்பதையும் நாங்கள் நியாயப்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது.

எங்கள் வீரர்களிடம் இந்த வெறி மட்டும் இல்லாமல் இருந்தால், தாங்களும் ஈராக்கின் சாதாரண மக்களைப் போன்றவர்கள்தான் என்பதனையும், அமெரிக்காவின் கோடீஸ்வரர்களால் ஏவப்பட்ட படையினர்தாம் நாங்கள் என்பதையும் உணர்வார்கள்.

"நான் ஈராக்கில் பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு வீசி எறிந்தேன்.. ஈராக்கை விட்டு இங்கு (அமெரிக்கா) வந்து பார்த்தால், பொருளாதாரப் பின்னடைவால் இங்கும் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன. நம்முடைய எதிரி எங்கோ ஐந்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இல்லை.
அவர்கள் இங்கேதான் (அமெரிக்காவில்) தத்தம் வீடுகளில் இருக்கின்றார்கள். நாம் அணிதிரண்டு போராடினால் இப்போரை நம்மால் நிறுத்த முடியும். இந்த அரசையே நிலைகுலைய வைக்க முடியும். நம்மால் புதியதோர் உலகை உருவாக்கவும் முடியும்.''

மொழியாக்கம்: செங்கதிர் Thanks to : www.tamilcircle. net

Tuesday, December 23, 2008

சும்மா அதிருதில்ல‏!

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால்
அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
==================================================
கவிதை:
ஜோதிகா கொஞ்சம் குண்டு
பூவுல இருக்கும் வண்டு
நல்லவங்க செய்யறது தொண்டு
நீயோ மர மண்டு
ஆனாலும்,நீதான் என் உயிர் ஃபிரண்டு!

காலை வணக்கம். ==================================================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். ==================================================
மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும். ==================================================
நம்ம நட்புக்கு நல்ல ரெண்டு உதாரணம்.

தளபதி படத்துல நீ ரஜினின்னா நான் மம்முட்டி
பிதாமகன்ல நீ விக்ரம்னா நான் சூர்யா.
என்ன பாக்கறே?
எப்பவுமே நான்தான்டா முதலில் சாகணும்,

என் நண்பா.No No அழக்கூடாது
Control yourself.
==============================
ஒரு சிறு கவிதை:
மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர்விட்டது தீக்குச்சி.
நினைத்து நினைத்து உருகியதுமெழுகுவர்த்தி.
==============================
நண்பன் 1: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா.
நண்பன் 2: கார் ஓட்டிப் பாரேன்.
==============================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள். ஏன்னா அறிவு......சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
==================================================
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: 'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
=============================================
-
Thanks to : Subram, Vijaya Balan, Doha - Qatar

Monday, December 22, 2008

மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! - பெரியார்

இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் சமூக அமைப்பின் அஸ்திவாரமே சரியில்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின்மீது கட்டக்கூடிய எந்த அமைப்பும் மக்கள் சமூகத்துக்கு நன்மையளிக்கக்கூடியது அல்ல.

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான், மக்கள் சுகமாக வாழமுடியும்.

ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான், மற்றொருவன் சுகத்தை அனுபவிக்கப் பாத்தியதை உடையவன்தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது.

இந்த எண்ணம் மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்கான எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணகாது.மக்களின் மனோபாவமும் வாழ்க்கை நடத்தும் முறையும் மாறினால் ஒழிய வேறொரு முறையாலும் நன்மையுண்டாகாது என்பது திண்ணம்.

தற்போதிருக்கும் நிலைமையில் சுயராஜ்யம் வந்தால் குருட்டு நம்பிக்கையும் வைதிகமும்தான் வலுக்கும். தற்போது சுயராஜ்யம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக்கொள்ளுங்கள்; ஏழைகள் நிலைமை அங்கு எப்படியிருக்கிறது ? அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடையதாகத்தான் இருக்கிறது.

அங்கே இலட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். அமெரிக்கா உலகின் செல்வத்திற்கே இருப்பிடமாய் இருந்தும் -அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள்.

ஜெர்மனி நிலைமை என்ன? சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உடையதென்று சொல்லும் இங்கிலாந்து சுயராஜ்ய தேசமேயாகும். ஆனால், அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல. சுயராஜ்யமுள்ள ஒவ்வொரு தேசமும் இப்படித்தான் இருக்கிறது.

சுயராஜ்யமோ, அந்நிய ராஜ்யமோ, குடியரசோ, முடியரேசோ எந்த விதமான முறையாலும் மக்கள் சுகம் பெறமுடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகின்றது. ஆகையால், ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்யம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

சமதர்மத்தையும் பொதுவுடைமையையும் அஸ்திவாரமாகக் கொண்ட அமைப்பு ஒன்றே மக்கள் சுகவாழ்க்கைக்குரிய வழியாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராய் இருக்கக்-கூடாதென்று கேட்கிறேன்.உலகத்தில் பல வகைகளில் ஜீவராசிகள் மரணமடைகின்றன.

பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமு-மில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

இன்னும் பல வழிகளில் மரணம் அடையும்போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசிக்கச் சிலரோ, பலரோ உயிரைத் தியாகம் செய்வதுகூட பெரிய காரியமாகுமோ?மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசம் காண்பிக்கப்படவேண்டும் ? அறிவுள்ள எவரும் இனி இந்நிலைமையைச் சகித்துக்கொண்டு ஒரு கணமாவது வாழமுடியாது. பலாத்காரம் கூடாது.

இம்முறைகளை மாற்ற பலாத்காரம் ஒருபொழுதும் வெற்றியடைய முடியாது. பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மையை மறைத்துவிடும். ஆகையால், மக்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையே ஒழிய,பலாத்காரத்தினால் சாதித்துவிடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும்.

இந்தத் தேசத்திலும் முன்னேற்றமுள்ளவர்களென்றும், பிற்போக்கானவர்களென்றும் இரண்டு கட்சிகளே இருக்க முடியும். இப்படிப் பிரிக்கப்பட்டால் ஒழிய மக்கள் அபிவிருத்தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தால் ஒழிய மற்ற எந்த ராஜ்ய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை.

------------------- தந்தைபெரியார் -குடந்தையில், 8-7-1934-இல் சொற்பொழிவு - 'பகுத்தறிவு' 9-9-1934

Thanks to: தமிழ் ஓவியா

Tuesday, December 16, 2008

புஷ்ஷை செருப்பால் செருப்பால் அடித்த மாவீரன்!


தோழனே!
எல்லோரும் கவலைப்படுகிறார்கள்
புஷ்ஷை நோக்கி வீசிய செருப்பில்
குறி தவறிபோய்விட்டதே என்று...!

தோழனே!
இங்கே பாதணி என்று
குறிப்பிடாமல் செருப்பு என்றே விளிம்புகிறேன்.
பாதணியை விட செருப்பில்
வீரியம் தெறிப்பதால்..!

தோழனே!
உலகம் முழுவதும்
மக்கள் கவலைப்படுகிறார்கள்
குறி தவறிப்போய்விட்டதே என்று..!
இல்லை.... இல்லை...
ஒளிப்படத்தை மீண்டும் பார்
புஷ் குனிந்து கொள்ள
அமெரிக்க தேசிய கொடியின்
மீதல்லவா பட்டு தெறித்தது...!

தோழனே!
எனக்கு கூட ஓர் சிந்தனை
செருப்பை வீசி பார்த்து பயிற்ச்சி
எடுத்திருந்திருக்கலாமே என்று..!

தோழனே!
நீ ஆயுதத்தால்
தாக்கி இருந்தால் கூட
அவன் அன்றே இறந்திருப்பான்.
செருப்படியால் அவனை
வாழும் பிணமாக அல்லவா
மாற்றிவிட்டாய்!

தோழனே!
பத்திரிக்கையாளர்களை
தீவிர சோதனை செய்தது
ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்று
ஆனால்,
அதை விட அதிக வலிமையுடைய
எழுதுகோளையும், நாவையும்,
செருப்பையும் அல்லவா
உங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!

தோழனே!
எனக்கும் பாசீஸ மிருகங்களை
செருப்பால் அடிக்க விருப்பமுண்டு.
ஆனால் குறி தப்பாமல் இருக்க
இன்றே பயிற்ச்சி எடுக்க வேண்டும்!
குறி தவறினாலும் பரவாயில்லை
பின்புறம் தேசீய கொடி இருக்குமல்லவா?

தோழனே!
உனக்கொரு செய்தி
உன் வீரத்தை
இணையத்தில் படித்த போது
மற்றொரு செய்தியையும் கண்டேன்
நடிகைக்கு கோயில் கட்டுகிறார்களாம்.
என் சமூகத்திலும்
இளைஞர்கள் உன்னைப் போல்
என்று செருப்பைத் தூக்குவார்களோ
என்ற பெருமூச்சுடன்
வந்த சிந்தனையை
தவீர்க்க முடியவில்லை.



தமிழச்சி

Sunday, December 14, 2008

தீவிரவாதம்

நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன
மனித மாமிச வாசனைகள்
என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவனாய்
அறுபட்ட பிண்டமொன்றை தொப்பென முன் கடாசி
தோய்ந்த குருதி துடைத்தபடி விரைகிறான் ஒருவன்

நேரிய குறுகிய அகன்ற பாதைதோறும்
இளித்தபடியான சிரங்கள் இறைந்து கிடக்கின்றன

தெரு முச்சந்தியில் மண் கவ்விக் கிடக்குமோர்
எதுவுமற்ற எலும் போட்டுடலில் இணைக்கச் சொல்லி
கெஞ்சும் தோரணையில் என் பால் நீண்டு கிடக்கிறது
பிண்டமற்ற வெற்று இடக்கையொன்று

ஒரே இடத்தில் மாண்ட ஒரு குழும எண்ணிக்கையை
இன்னோரிடத்துக் குழுமம் மிஞ்சியதாக நின்று
துணிந்து மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது
வானொலிகளும் தொலைக்காட்சிகளும்
மனிதனாயிருந்திருக்காத பெருமூச்செறிந்தபடி

வடித்திறக்கிய தூய வெண் சோற்றில்
இழுத்திரைத்த இரும்பு வாளியில் ததும்பம்
கிணற்றூற்று நன்னீரிலெல்லாம்
ததும்புகின்றன இரத்தச் சாயங்கள்
தொட்டுத் தொடரும் தீவிரவாதங்களென்று

சாடிக் கழித்து பின் கூடியும் கழிக்கிறார்கள்
பெருஞ்ஜன ஆளுமை ஆதிக்கர்கள்
இருண்டு சூழ்ந்த தோலுலகைக் கிழித்து
கருக்கள் ஜனித்திறங்கும் பாதையைப் போல்
மாள நேரும் பாதையும் ஒருமையாயிருந்திருக்காத
கைசேதத்தில் தேகம் நோகிறார்கள் எஞ்சியவர்கள்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.

ஆங்கில டி.வி சேனல்கள் பயங்கரவாதிகள்???


நூறு பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு நிகரான பயங்கரவாதிகள் இருக்க முடியுமா? ஆங்கில டி.வி சேனல்கள்தான் அப்படிப்பபட்டவர்களாக எனக்கு இப்போது தெரிகிறார்கள். மழையில் மூழ்கிய சென்னைக்குத் திரும்புவதை விட மும்பையில் இருப்பதே பாதுகாப்பானது என்று சென்னை நண்பர்கள் எச்சரித்ததால், மும்பை வீட்டிலேயே மேலும் ஒரு வாரம் இருந்தபோது தொடர்ந்து 60 மணி நேர மீடியா பயங்கரவாதத் தாக்குதலை நான் அனுபவிக்க நேர்ந்தது.


திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி நம் தலைக்குள் அதைப் பதியவைக்க முயற்சி செய்துகொண்டே இருந்தன இந்த டி.வி சேனல்கள். இந்தியாவின் அடையாளச் சின்னமான ஹோட்டல் தாஜ் தாக்கப்பட்டுவிட்டது என்று இன்னமும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த இந்தியாவில் யாருடைய அடையாளச் சின்னம் ஹோட்டல் தாஜ் ? மும்பையில் முதலில் தாக்குதலுக்கு உள்ளான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான் மும்பையின் உண்மையான அடையாளச் சின்னம்.


இங்குதான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு முதலியவற்றிலிருந்து சக இந்தியர்கள் தினசரி வந்து இறங்கி மும்பையையும் தங்களையும் கடும் உழைப்பால் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ரயில் நிலையத்தின் நடை மேடையில்தான் அறுபது பிணங்கள் முதலில் விழுந்தன. ஆனால் இன்று வரை ஒரு சேனலும் இந்த ரயில் நிலையக் காட்சிகளைக் காட்டவில்லை.


நட்சத்திர ஓட்டல்களான தாஜ், ஓபராய் இரண்டிலும் உடைந்த சோபாக்கள், எரிந்த திரைச் சீலைகளைக் காட்டுவதற்கு இந்தியாவின் நம்பர் ஒன் பெண் டி.வி அறிவிப்பாளர் பர்க்கா தத் முண்டியடித்துக் கொண்டு காமராவுடன் அலைகிறார்.


ஆனால் அரசு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் தெரியாமல் கிடந்துகொண்டிருக்கும் ரயில் நிலையப் பிணங்களையோ, அடையாளம் தெரிந்த பிணங்களைப் பெற்றுச் செல்ல சாதாரண மக்கள் படும் பாட்டையோ எந்த டி.வி சேனலும் கண்டுகொள்ளவே இல்லை.


பயங்கரவாதத் தாக்குதல்களினால் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இந்த சேனல்கள் ஏற்படுத்தின. அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவாஜி ரயில் நிலையம் மறு நாள் விடியற்காலையிலிருந்து இயங்கத் தொடங்கிவிட்டது.


பயங்கரவாதிகளின் முற்றுகை நீடித்த இடங்களான ஹோட்டல் தாஜ், ஓபராய், நாரிமன் பவன் என்ற யூதர் குடியிருப்புக் கட்டடப் பகுதிகளைத் தவிர மீதி மும்பை சகஜமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது.மும்பையின் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாஜ், ஓபராய் ஹோட்டல்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.


மும்பையின், இந்தியாவின், உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே புழங்கும் இடங்கள் அவை. தாக்குதலைப் பதிவு செய்ய 60 மணி நேரம் தாஜ் ஓட்டலுக்கு வெளியே முகாமிட்டிருந்த சுமார் 300 டி.வி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்களில் பத்துப் பதினைந்து பேரைத் தவிர வேறு யாரும் சாதாரண நாட்களில் அந்த ஹோட்டலுக்குள் போய் ஒரு காபி கூடக் குடிக்க முடியாது.


தினசரி 60 லட்சம் பயணிகளை காலையும் மாலையும் சுமந்து சென்று வரும் மும்பையின் உள்ளூர் ரயில்களில் குண்டு வெடித்தபோது, அதில் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இறந்தபோது, மும்பை நகரமே தாக்கப்பட்டுவிட்டதாகவோ, இந்தியாவே தாக்கப்பட்டுவிட்டதாகவோ கூக்குரல் எழுப்பாத இந்த சேனல்கள், நட்சத்திர ஓட்டல்கள் மீதான தாக்குதல்களின் போது மட்டும் ஓவராக புலம்பி வருவது ஏன் ?


இந்தியாவை ஆட்டிப் படைக்கும் அதிகார சக்திகளின் சந்திப்பு இடம் இவை. பெரும் தொழிலதிபர்கள், உலக வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகர்கள், சினிமா நட்சத்திரங்கள், சினிமா, அரசியல், பயங்கரவாதம் அத்தனைக்கும் நிதியுதவி வழங்கும் மாஃபியா ரவுடி கும்பல் தலைவர்கள் தினசரி இந்த ஹோட்டல்களில்தான் சந்திக்கிறார்கள்.


நடைபாதையில் தூங்கும் சாதாரண மக்கள் மீது கார் ஏற்றிக் கொன்றுவிட்டு, காரை ஓட்டியது தானல்ல, டிரைவர்தான் என்று இன்னொரு சாதாரண மனிதனைச் சிறைக்கு அனுப்பி வைக்கும், பணக்கார வீட்டுப் பொறுக்கி வாரிசுகள்தான் லியோபோல்ட் கிளப்புகளின் முக்கிய வாடிக்கையாளர்கள்.


அதிகாரத்தின் சின்னம் இந்த ஹோட்டல். தேசத்தின் சின்னமோ, மக்களின் சின்னமோ அல்ல. அதனால்தான் பயங்கரவாதிகள் இந்த முறை இதைத் தேர்ந்தெடுத்துத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண மக்களைத் தாக்கி எந்தப் பயனும் இல்லை என்பது பயங்கரவாதிகளுக்கும் புரிந்து விட்டது. மார்க்கெட்டில், பஸ்களில், ரயிலில் குண்டு வைத்தால், சாதாரண மக்கள் சாகிறார்கள். ஆனால், மறு நாளே சகஜ நிலைக்கு வந்துவிடுகிறார்கள். எதுவுமே நடக்காதது போல அவரவர் வேலைக்குப் போகிறார்கள்.


ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், சாதாரண மக்கள் சாகும்போது, எதுவுமே நடக்காதது போல தங்கள் ஊழல் அராஜக ஆட்சிப் பணிகளைத் தொடர்கிறார்கள். நட்சத்திர ஓட்டல்களை தாக்கிய வுடன்தான் அதிகார சக்திகளுக்கு பதற்றம் ஏற்படுகிறது. அவர்களை அண்டிப் பிழைக்கும் டி.வி சேனல்கள் எல்லாம் ஒப்பாரி வைக்கின்றன. `பொறுத்தது போதும். பொங்கி எழு' என்கின்றன.


பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகளில் மறு நாளே நகரம் சகஜ நிலைக்குத் திரும்பியபோது, அதை `ஸ்பிரிட் ஆஃப் மும்பை', `விழ விழ, எழுவோம்' என்றெல்லாம் கொண்டாடியவர்கள் இவர்கள். ஏனென்றால் அடுத்த நொடியிலேயே சாதாரண மனிதன் சகஜ நிலைக்குத் திரும்பியதால்தான், இந்தப் பணக்காரர்களுடைய ஆலைகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் தடையின்றி இயங்க முடிந்தது. தங்கள் தொழிலுக்கு பாதிப்பு வராதவரை அது `ஸ்பிரிட் ஆஃப் மும்பை.'


இப்போது இந்தப் பெரும் பணக்காரர்களே நேரடியாகத் தாக்கப்படும்போது, பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சாதாரண மக்களைத் தூண்டி விடுகிறார்கள். தங்கள் நீச்சல் குளங்களுக்கும், குடித்து கும்மாளம் போடும் ரெஸ்டாரண்ட்டுகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்று அதை நெருக்குகிறார்கள். திவாலாகும் வரை லாபம் எல்லாம் தங்களுடையது. திவாலானால், காப்பாற்றவேண்டியது அரசின் பொறுப்பு என்று சிட்டி பேங்க் முதல் ஜெனரல் மோட்டார்ஸ் வரை சொல்லும் அதே அணுகுமுறை.காவல் அதிகாரிகள் முதல் கமாண்டோக்கள் வரை பலர் உயிரிழந்தது பெரும் தியாகம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


ஆனால் அறிவைப் பயன்படுத்தாத தியாகத்துக்கு ஒரு அர்த்தமும் இல்லை. மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கர்காரேவும் இன்னும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளும் ஒரே ஜீப்பில் சென்று பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையானது முட்டாள்தனமானது. உயர் தலைமையில் இருப்பவர்கள் நெருக்கடியான நேரங்களில் ஒன்றாகப் பயணம் செய்வது கூடாது என்பது அடிப்படை விதி.


பிரதமரும் ஜனாதிபதியும் ஒரே காரில் வருவதில்லை. இந்த சாதாரண அடிப்படை விதிகளைக் கூடப் பின்பற்றாமல் உயிர்த் தியாகம் செய்வதில் என்ன பயன்?பேட்டி தந்த கடற்படை கமாண்டோவின் தலைவர், முகம் தெரியக்கூடாது என்று ஒரு துணி கட்டியிருக்கிறார். சினிமா கதாநாயகிகள் போடுகிற மாராப்பு மாதிரி; உள்ளே இருப்பதெல்லாம் தெரிவதற்கென்றே போடுகிற மறைப்பு போல. தாஜ் ஓட்டலின் உட்புற அமைப்பு எப்படி இருக்கும் என்று கமாண்டோக்களுக்குத் தெரியாதாம்.


அதனால் கடுமையாகப் போராட வேண்டியிருந்ததாம். ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஒட்டலின் அத்தனை பகுதிகளும் அத்துப்படி என்று அவரே சர்ட்டிஃபிகேட் தருகிறார்.பல மணி நேரம் போட வேண்டிய சண்டை என்று தெரிந்தே செல்கிற கமாண்டோக்கள், ஏன் மேலும் ஒரு மணி நேரம் ஓட்டலின் வரைபடத்தைப் பார்த்துப் படித்து திட்டமிட்டுவிட்டு நுழைந்திருக்கக்கூடாதா ?


ஓட்டல் அதிபர் ரத்தன் டாட்டா நினைத்தால் அரை மணி நேரத்தில் ஓட்டலின் வரைபடத்தை வரவழைத்துத் தரமுடியாதா ? பயங்கரவாதிகளிடம் சேட்டிலைட் படங்களெல்லாம் இருந்ததாம். ஏன், அதெல்லாம் இந்திய அரசிடம் கிடையாதா ? இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பாத டி.வி.சேனல்கள், வசதியாக எல்லா பிரச்சினைகளுக்கும் அரசியல்வாதிதான் காரணம் என்று குற்றம் சாட்டுவதை, ஒரு இயக்கமாக ஒரு வாரமாக செய்து வருகின்றன. தேசத்துக்கே நெருக்கடியான இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியும் மும்பைக்கு சேர்ந்து வரக்கூடாதா, தனித்தனியாக வரவேண்டுமா என்று ராஜ்தீப்பும் அர்னாபும் கேட்கிறார்கள்.


தேச நெருக்கடி என்றால் அரசியல்வாதிகள் கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவிட்டு ஒன்று சேரவேண்டுமாம். அந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாதாம். சரி. சேனல்கள்? அவை எப்படி நடக்க வேண்டும்? அவையும் ஒவ்வொரு இடத்துக்கும் தனித் தனி கேமரா, தனித் தனி நிருபர் அனுப்பாமல், ஒளிப்பதிவை, பேட்டிகளை பகிர்ந்துகொள்ளலாமே. மிச்சப்படும் நிறைய பேரை இன்னும் அதிக இடங்களுக்கு அனுப்பலாமே. மாட்டார்கள்.


சேனல்களில் பத்து நிமிடத்துக்கொரு முறை என்ன சொன்னார்கள் தெரியுமா? `இந்த செய்தி எங்கள் சேனலின் பிரத்யேக செய்தி. இதை முதலில் சொன்னது நாங்கள்தான்.'தேச நெருக்கடியில் நீங்கள் இப்படி வியாபாரம் செய்யலாமென்றால், அரசியல்வாதி அரசியல் செய்யக் கூடாதா ?உண்மையில் அரசியல் செய்வது சேனல்கள்தான். இந்த நாட்டின் பெரும் பணக்காரர்கள் சார்பான அரசியல்.


சாதாரண மக்கள் தாக்கப்படும்போதெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சொல்லாதவர்கள், நட்சத்திர ஓட்டல் தாக்கப்பட்டதும் பொங்கி எழச் சொல்லி தூண்டுகிறார்கள். அமிதாப், அமீர்கான் எல்லாரும் இணையத்தில் புலம்புகிறார்கள். சேனல்களின் தொடர் பிரசார அரசியல் வெற்றி பெறுகிறது என்பது இன்னொரு வேதனை.


பாபர் மசூதி இடிப்புக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்டதற்கு, பஸ், ரயில் குண்டு வெடிப்புகளுக்கு, குஜராத் கோவில் தாக்குதலுக்கு, முஸ்லிம்கள் படுகொலைக்கு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தற்கொலைக்கு ராஜினாமாக்கள் இல்லை. ஆனால் நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்கு ஒரு மத்திய உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று மூன்று தலைகள் உருட்டப்பட்டிருக்கின்றன.எல்லா அரசியலும் எல்லா அரசியல்வாதியும் மோசம் என்ற கருத்தை இந்த சேனல்கள் பரப்புகின்றன.


ஒரு சர்வாதிகாரி நாட்டுக்குத் தேவை என்ற மனநிலையை மறைமுகமாகப் பரப்புகின்றன. சர்வாதிகாரிகளும் பயங்கரவாதிகளும்தான் பணக்காரர்களுக்கு உகப்பானவர்கள். ஏனென்றால் பேரம் பேச வசதியானவர்கள் அவர்கள்தான். ஜனநாயகத்தின் அரசியல்வாதிகள் ஒரு கட்டத்துக்கு மேல் மக்களுக்கு பயந்தாக வேண்டும். மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டு அரசியல்வாதிகளின் மீதான ஒட்டுமொத்த அவ நம்பிக்கையை ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.


எல்லை கடந்த பயங்கரவாதத்தை விட ஆபத்தானது இந்த உள்ளூர் பயங்கரவாதம். கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்படும் இந்த யுத்தம் நம் உடல் மீது அல்ல, உள்ளத்தின் மீது, சிந்தனை மீது. உஷாராக இருப்போம்..

Thursday, December 11, 2008

துபாய்-ல் கீற்று அன்பர்கள் சந்திப்பு.











இலக்கியம், அரசியல் என பல நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதில் துபாய் தமிழுணர்வாளர்கள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வரிசையில் "கீற்று இணைய அன்பர்கள் சந்திப்பு" மற்றும் கலந்துரையாடல் 5-12-2008 துபாயில் கராமா பூங்காவில் நடைபெற்றது.








முன்னதாக தமிழ்நாட்டில் நிகழவிருந்த சந்திப்புகள் மழை காரணமாக தள்ளிவைக்கபட்டதால் குறித்த நேரத்தில் கீற்று அன்பர்கள் சந்திப்பை நிகழ்த்தி இதிலும் துபாய் தமிழுணர்வாளர்கள் முன்வரிசையில் நின்றுவிட்டனர். மேலும் துபாயிலும் மழையாக இருந்து நிகழ்வின்போது நின்றிருந்தது. மழை தொடருமெனில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக நடத்த மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.








முன்னதாக கத்தார் நாட்டில் பணிபுரியும் கீற்று வாசகர் கவிஞர் திரு.இனியவன் ஹாஜி முஹம்மது அவர்கள் கீற்றுவின் பணியைப் பாராட்டி அதன் ஆசிரியர் திரு.இரமேசுக்கு தனது “இனியவன் மீடியா இண்டர்நேஷனல்” நிறுவனத்தின் சார்பாக அய்க்கிய அரபுநாடுகளின் அதிபர் காலஞ்சென்ற மதிப்பிற்குரிய "ஷேக்ஜாயித் அல் நஹ்யான்" பெயரிலான விருதினை (250டாலர்) அன்பர்கள் முன்னிலையில் கீற்று நிர்வாகத்தினர்களில் ஒருவரான திரு. குமார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கீற்று குழுமம் சார்பில் திரு,இனியவன் அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.








நிகழ்வில் அன்பர்கள் கீற்றுவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட இன்னும் நாம் என்ன முறையில் இயங்கவேண்டும் என்கிற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.








அவற்றில் சில:-




• கீற்று அன்பர்கள் சந்திப்பை கீற்று சார்பாக திரு.இ.இசாக் ஒருங்கிணைத்தார்.




• கீற்று பன்முகத்தன்மையுடன் இயங்குவது குறித்து அன்பர்களாகிய நமக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எனவே அன்பர்கள் சந்திப்பானது மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் துபாய், சார்ஜா, அபுதாபி என ஏனைய அமீரகத்திலும் நடத்துவது சம்மந்தமாக திரு.கவிமதி கருத்து தெரிவிக்க அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.








• கீற்றுவில் ஒற்றைக் கருத்தின் சார்பு நிலைதான் என்று இல்லாமல் எதிர்த் தரப்பு கருத்துகளுக்கும் இடமளிப்பது பாராட்டுக்குரியது. இதுபோன்ற எதிர்த் தரப்பு செய்திகளுக்கு இடமளிப்பது மூலம் கீற்றுவின் கோட்பாடு சார்ந்த செயல்பாடுகளுக்கும், வாசக கருத்து விவாதத்திற்கும் இப்பன்முகத்தன்மை துணைபுரிவதாகவும் அமைகிறது என திரு.ஆசிப்மீரான் தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார்.








• மற்ற வலைத்தளங்களின் "கீற்று அன்பர்கள்" எழுதிய ஆக்கங்களை அவை சிறப்பாக இருக்கும் பொருட்டு அதை கீற்றுவில் மறுபதிப்பு செய்ய ஆவன செய்ய வேண்டுமென திரு.ஆசாத் தனது கருத்தைத் தெரிவித்தார்.








• கீற்று வளர்ச்சிக்கு வாசகர் தளத்தை விரிவுபடுத்துவது குறித்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாசகர்களும் படைப்பாளிகளும் நிதியுதவிக்காக ஆவன செய்யவேண்டும் எனவும் திரு.பாரத் தனது கருத்தை வெளியிட்டார்.








• கீற்று தமிழ் இலக்கியத்திற்கு பெரும்பணியாற்றி வருவது கண்டு தானும் இக்குழுவில் இணைவதில் பெருமைகொள்வதாக குழுமத்தில் புதிதாக இணைந்த திரு.சே.ரெ.பட்டணம் மணி தெரிவித்தார்.








• மேலும் கீற்று இணையதளத்தில் வெளிவரும் ஆக்கங்கள் பற்றிய கருத்துகளையும் விவாதங்களையும் கீற்று குழுமத்தில் முன்னெடுத்து செல்ல ஆசிரியர் குழு முயற்சிக்க வேண்டும் என திரு.முத்துக்குமரன் தெரிவித்தார்.








• கீற்று பல நல்ல படைப்புகளை வெளியிட்டாலும் கீற்று தளத்தின் நிலைப்பாடுகளை வாசக சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் வகையில் ஆசிரியர் குழுவின் குரலாக ஒரு பகுதி தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆசிரியர் குழுக்கான நிலைபாட்டு கருத்துகளை பதிவு செய்யவேண்டுமென திரு.நண்பன் தனது கருத்தை தெரிவித்தார்.








• சமூக விரோதக் கருத்துக்களை பரப்புகிற எழுத்தாளர்களுக்கு ஆதாரப்பூர்வமான விடையளிக்கும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்து கீற்று வெளியிட வேண்டும் என திரு.உமர்சரீப் மற்றும் திரு.நஜீமுத்தீன் ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்தார்கள்.








• கீற்று தளம் கடந்த ஒரு வாரத்திற்கு முந்திதான் தன் கவனத்திற்கு வந்தாலும் தான் வாசித்த தளங்களிலிருந்து மிக மிக வித்தியாசமான சிந்தனையுடனும் சமூக அக்கறையுடனும் படைப்புகளை வெளியிட்டு வருவதுடன் இதைப் போன்ற சந்திப்புகளையும் நடத்துவும் மிகவும் சிறப்பானது என திரு.தயாளன் தெரிவித்தார்.








கீற்று மின்னிதழில் வெளியிடப்படும் படைப்புகளை தொகுத்து கீற்று ஆண்டுமலராக வெளியிட வேண்டுமென்று கீற்று ஆசிரியர் குழுவிடம் பரிந்துரைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நண்பர்கள் பலரும் எடுத்துரைத்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்று தங்கள் ஆசிரியர் குழு ஆவனசெய்யும் என கீற்று நிர்வாகிகளில் ஒருவரான திரு.குமார் தெரிவித்தார்.








நிகழ்வின் முடிவில் கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் திரு.சுரேசு நன்றி தெரிவிக்க கீற்று அன்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது.








செய்திகள்-படங்கள்கீற்றுக்காக...கவிமதி/துபாய்

அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?



அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? 16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு‏



16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, டிச. 6- மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.


அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


அது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன். இன்றைக்கு பாபர் மசூதி இடித்த நாள் (டிச. 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் ஆகின்றன.


பாபர் மசூதி முதல் குற்றவாளி அத்வானி
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி எல்.கே.அத்வானிதானே. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். பிறகு துணைப் பிரதமராக ஆனார்.
இன்றைக்கு பிரதமர் பதவி வேட்பாளர் நான் தான் என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றார். பதினாறு ஆண்டுகாலமாக இந்த வழக்கு ஏன் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது?


லிபரான் கமிஷன் 40 முறை நீட்டிப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்காக நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றது. நாற்பது முறை லிபரான் கமிஷன் காலம் நீட்டிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கின்றது.


ஆனால் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் 16 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை! என்பதை இந்திய அரசுக்கு கேள்வியாக வைக்கின்றோம்.


தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில் மோடி
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு தீவிரவாதி என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான்? அவன் இந்த முறையில் ஈடுபடுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது என்பதை பிடிபட்ட அந்தத் தீவிரவாதியே சொல்லியிருக்கின்றான்.


எனக்கு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், மோடி பேசிய பேச்சு, பிரவின் தொகாடியா போன்றவர்கள் பேசிய பேச்சு போட்டுக் காட்டப்பட்டது. அதுதான் எனக்கு ஊக்கமாக இருந்தது என்று அவன் வாக்குமூலத்திலே சொல்லியிருக்கின்றான்.


ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தீவிரவாதத்தை வேரிலிருந்து அழிக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், பாபர் மசூதியை தாக்கிய தீவிரவாதிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும்.


இதிலே ஆர்.எஸ்.எஸ்சா, பி.ஜே.பியா, அந்த மதமா? இந்த மதமா?

இந்துத்துவாவா? முஸ்லிமா? அந்த ஜாதியா? இந்த ஜாதியா? என்று பார்க்காமல் தீவிரமான நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாகும்.


இந்து தீவிரவாதிகள் மீது என்ன நடவடிக்கை?
அதே போல மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு சம்பவம், பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயாயனந்த் பான்டே (சங்கராச்சாரி) ஆகிய இந்துத் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள், தீவிரவாதச் செயல்கள் செய்த இவர்கள் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்திலே வேண்டுகோளாக வைக்கின்றோம்.


(சென்னை பெரியார் திடலில் (6.12.2008) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியிலிருந்து)




டிசம்பர் 6டிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் - முக்கிய மான வரலாற்றுக் குறிப்பு நாள்!


இந்த நாளில் திட்டமிட்ட வகையிலே கறுப்பு நாளாக ஆக்கியவர்கள் இந்துத்துவா என்ற பெயரில் வன்முறைக் கொடி பிடித்து வக்கிரங்களை அரங்கேற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல்.


450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுச் சின்னமான பாபர் மசூதியை இந்தக் கும்பல் திட்டமிட்டு அடித்து நொறுக்கியது.


இடித்தவர்கள் ஏதோ சாதாரண அப்பாவி மக்கள் அல்ல! பிற்காலத்தில் இந்தியாவில் துணைப் பிரதமராக இருந்த திருவாளர் எல்.கே. அத்வானியாவார்.


இந்தப் பெரிய மனிதர்தான் பா.ஜ.க.வின் சார்பில் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான வேட்பாளர் ஆவார்.இவர் மட்டுமல்ல; பிற்காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த டாக்டர் முரளி மனோகர்ஜோஷி, வினாய் கட்டியார், விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால், கிரிராஜ் கிரோன், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வீ ரிதம்பரா, செல்வி உமாபாரதி உள்பட 49 பேர்கள் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.


எந்தெந்தப் பிரிவுகளில்?இந்தியக் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளில் வழக்குகள் இவர்கள்மீது கலவரம் விளைவித்தல், மதக் குரோத உணர்வை ஏற்படுத்துதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமூகத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் மக்களிடையே பீதியை உண்டாக்குதல் என்பன போன்ற குற்றங்கள் இந்த விளம்பரம் பெற்ற மனிதர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.


16 ஆண்டுகள் ஓடிய பிறகும், இந்த மாபெரும் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத்தரப்படவில்லை என்பது - இந்தியாவின் நடைமுறையில் உள்ள நிருவாகம், நீதித்துறை இவற்றின்மீது விழுந்துள்ள அழிக்க முடியாத கரும்புள்ளியாகும்.


தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிதான் என்று ஏட்டில் உள்ளதே தவிர, யதார்த்தத்தில் கிடையவே கிடையாது.


பாதிப்புக்கு ஆளான முசுலிம் மக்களின் மனம் இந்த 16 ஆண்டுகாலமாக எப்படி எப்படியெல்லாம் வேதனைப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?


ராமன் பாலம்பற்றிப் பேசினால், இந்துக்களின் மனம் புண்படும் என்று ஒப்பாரி வைக்கும் இந்துத்துவா வெறியர்கள்தான் - இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுச் சின்னத்தை உடைத்து நொறுக்கினர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.


குற்றவாளிகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படாவிட்டால், மக்கள் மத்தியிலே வன்முறை நடவடிக்கைகள் சரியானதுதான் என்கிற மனோபாவத்தைத்தானே வளர்க்கும்? இந்தியாவில் நடக்கும் பல்வேறு வன்முறைகளுக்கு - பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் ஒரு முக்கிய காரணமே!


உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என்கிற மிகப்பெரிய பொறுப்பான பதவிகளில் அதிகாரப் பீடத்தில் இருந்த அத்வானி போன்றவர்கள் வழக்கினைத் துரிதமாக நடத்திட ஒத்துழைக்காமல், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பியதும், வேண்டு மென்றே காலதாமதம் செய்துவருவதும் எந்தத் தரத்தைச் சார்ந்தது? பொதுமக்கள்தான் உணரவேண்டும்.


இதுபோன்ற தகுதியில் உள்ளவர்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்வது என்பது பெருமைக்குரியதாக இருக்குமா? என்ற கேள்வி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் நெஞ்சிலும் எழ வேண்டிய அர்த்தமிக்க நேர்மையான வினாவாகும்.


ஒரு பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்தும் எந்தவிதத் தண்டனையையும் குற்றவாளிகள் பெற்றுவிடவில்லை என்ற தைரியத்தில் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு அரசே அதிகாரத்தைப் பயன்படுத்தி - அரசப் பயங்கரவாதம் என்ற தன்மையில் வேட்டையாடித் தீர்த்தது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.


அரசு புள்ளி விவரப்படி 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப் பட்டனர்! கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களின் வீடுகளும், தொழில் நிறுவனங்களும் சூறையாடப்பட்டன, கொளுத்தப்பட்டன என்றால், இது நாடா? - கடும்புலிகள் வாழும் காடா? என்று நினைக்கத்தானே தோன்றும்.
இந்த வன்முறை வேட்டைக்குத் தலைமை தாங்கிய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என்று அடையாளப்படுத்தப்பட்டார்.


ஆனால், இந்த நாட்டில் சோ போன்ற பார்ப்பனக் கூட்டம் இந்த நீரோ மன்னன் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் பிறவிக் குணம் 2008-லும் மாறவில்லை என்றுதானே பொருள்!


மீண்டும் நினைவூட்டுகிறோம் - பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி கள் தண்டிக்கப்படாமலேயே இன்னும் எத்தனை டிசம்பர் ஆறை நாம் சந்திக்கப் போகிறோம்?



-ஷேக் அப்துல் காதர்

Tuesday, December 9, 2008

கனத்த உடல் கரைக்கும் கருணை



அன்று கொடி இடை, இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு ஆகியவற்றால் பலர் கொடி மரத்து இடைபோல் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவு உள்ள பெண்களுக்கு கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற கால தாமதம் ஆகிறது. மேலும் மாதவிடாய் கோளாறும் தொடர் கதையாய் தொடர்கிறது.
தைராய்டு சுரப்பு குறைவை சரியாக்கி முப்பது நாட்களில் குணமாக்கும் சித்த மருந்துகள் உண்டு. இரத்த சோகை, மாதவிடாய் தடையால் ஏற்படும் உடல் ஊதலுக்கு தனி மூலிகை மருந்துகள் தேவை.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு" என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

பொதுவாக ஐந்தரை அடி உயரமுள்ளோர் அறுபத்தைந்து கிலோ எடை இருக்க வேண்டும்.

"வைத்தியர் அய்யா, கனத்த உடல் உள்ள என் குழந்தை கட்டுடலாய் ஆக கருணை காட்டுங்கள்" என்றாள் தாய். "கருணை தான் காட்டப் போகிறேன்" என்றார் வைத்தியர் இரு பொருள் படும்படி.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட கருணைக் கிழங்கின் கனத்த உடல் கரைத்திடும் உயர்வை உணர்வீர்கள். “என்ன விலை அழகே, கருணை உண்டு வருவேன், கனத்த உடல் கரைந்து நிற்பேன்" என்றுதான் பாடுவீர்கள். குண்டுடலால் உடல் உறுப்புகள் இரு பங்கு செயல்படும் நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு வரும் மூட்டு வலி, மூச்சிறைப்பு, முள்ளந்தண்டு வலி ஆகியவை குணமாக கால தாமதமாகிறது.

குண்டுடல் உள்ளோர் உணவில் வாழைத்தண்டு சூப், முருங்கைக் கீரை காம்பு சூப், முட்டைகோஸ் சூப், கொள்ளு கஞ்சி போன்ற திரவ உணவுகளை தினசரி உணவில் சாப்பிட வேண்டும். தொட்டுக் கொள்ள கருணைக் கிழங்கு புளிக்குழம்பு, கீரைத்தண்டு சாம்பார் பயன்படுத்தவும்.

நொறுக்குத் தீனி தின்பதை நிறுத்த வேண்டும். அடிக்கடி காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும். தண்ணீர் குடிக்க தடை இல்லை. அதிக ரத்தக் கொதிப்பு உள்ளோர் சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய நீர் குடித்தால் நல்லது. தேங்காய், நிலக்கடலை, தயிர், அசைவ உணவுகள், உருளைக் கிழங்கு, பூசணிக் காய், கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் ஒரு லிட்டர் குடிக்கவும்.

காலையில் எழுந்தவுடன் வெந்நீர் இருநூறு மில்லியில் இரண்டு ஸ்பூன் தேன் (பத்து கிராம்) கலந்து குடிக்கவும். ஆடாதொடை ஆபத்தும் கலந்து குடிக்கலாம். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் உணவில் சேர்க்கவும். கடலை எண்ணெய், நெய், டால்டா நீக்கவும். தினசரி மதிய உணவில் கருணைக் கிழங்கு முன்னூறு கிராமுக்கு குறையாமல் சமைத்து சாப்பிடவும். ஊறவைத்த அவல் காலை, இரவு சாப்பிடவும், மதியம் வெள்ளரிப்பிஞ்சு மட்டும் சாப்பிட உடல் எடை விரைவில் குறையும்.

பொன்னாங்கன்னிக் கீரையை மிளகு தாளித்து பயன்படுத்த உடல் எடை குறையும். தொட்டுக் கொள்ள கீரைகளை பயன் படுத்தவும். இம்முறைப்படி தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட, மாதம் ஐந்து கிலோ எடை குறையும்.

-Thanks to Adikaalai.com Written by: லயன்.மரு.க.கோ. மணிவாசகம்

Monday, December 8, 2008

உண்மையில்... காந்தியார் யார்?




"தேசத்தந்தை" என்று அழைக்கப்படுவதற்கு உண்மையில் இந்த இருவரில் யாருக்கு அதிகத் தகுதிகள் இருக்கிறது என்கிற என்னுடைய கேள்விக்கு விடை கிடைக்க ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுவும், இந்த நன்னாளில் அதற்கான விடையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.



இன்று இந்தியா முழுவதும், "தேசப் பிதா" என்கிற காந்தியாரின் மீதான ஒரு போலியான உருவகம் பள்ளிக்கூடங்களில் இருந்தே தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போலவே பார்ப்பனீய ஊடகங்களின் வாயிலாக நிலை நிறுத்தப்படும் இந்த "போலிப் பிம்பம்", தொடர்ச்சியான நமது அடுத்த தலைமுறையை அடையக்கூடாது என்ற நோக்கத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.



சரி, நண்பர்களே, ஒரு நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? "நீங்கள் அந்த நாட்டின் ஆதரவற்ற மக்களுக்கு, அவர்களின் உண்மையான விடுதலைக்குப் போராடி, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்க வேண்டும்"



அப்படியென்றால், காந்தியார் இதனைச் செய்யவில்லையா என்கிற உங்கள் கேள்விக்கான பதில் "இல்லை" என்று பல்வேறு ஊடக, அரசுக் கட்டமைப்புகளின் உடைந்த சிதிலங்களில் இருந்து ஒரு மெல்லிய இழையாய் வெளியே வரும்.



"வெறும் நிலப்பரப்பு நோக்கிய விடுதலைப் போராட்டம்" மற்றும் "அடிப்படை அடிமைத் தளைகளில் இருந்து வெளியேறும் சமூக, அரசியல் அதிகாரம் நோக்கிய விடுதலைப் போராட்டம்" என்றும் இரு கூறுகளாகப் பிரிந்து கிடக்கும். தேசத்தந்தை ஆவதற்கான தகுதிச் சான்றுகளில் காந்தியாரிடம் இருந்தது முந்தையது.



ஆனால், தேசியம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தின் ஊடாக ஒடுக்கப்பட்டு, வாழ்விழந்து கிடந்த அடிமை மக்களின் விடுதலையை நோக்கி எந்தநேரமும் சிந்தனை செய்த டாக்டர்.அம்பேத்கர் இன்றைக்கு பார்ப்பனீயத்தின் பித்தலாட்டங்களுக்கு இரையாகி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்கிற அளவில் குறுக்கப்பட்டு விட்டார்.




சாதீயத்தின் மீதான அவரது கடுமையான நிலைப்பாடும், இந்துமதத்தின் மீதான முழுமையான வெறுப்புணர்வும் அவரது உண்மையான "தேசத் தந்தை" உருவகத்தை பார்ப்பன வடிவங்களில் சிதைக்க முனைந்தன. ஒருவேளை அவர் இந்து மதத்தின் உயர் பீடங்களை தொழுகை செய்யும் முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர்களை முன்பற்றியிருந்தால் "தேசத் தந்தை" ஆகி இருக்கலாமோ என்னவோ?



வெறும் அரசியல் அதிகாரங்களுக்கான போட்டியில், காந்தியார் இந்தியாவின் விடுதலை என்கிற நோக்கை விடவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையை எதிர்ப்பதில் முதன்மையாக இருந்தார் என்பதை வரலாற்றின் பக்கங்களை நடுவு நிலை தவறாமல் புரட்டுபவர்களுக்கு நன்றாகவே புரியும்.



மாறாக ஒரு தேசத்தின் பெரும்பான்மை மக்களுக்கான சமூக, அரசியல் மற்றும் கல்வியை நோக்கிய உண்மையான விடுதலைப் போராட்டத்தில் மட்டுமன்றி, தேசிய விடுதலையிலும், தொழிற்சங்க அமைப்புகளின் உரிமைகளுக்கும் உரக்கக் குரல் எழுப்பிய, வாழ்வின் எந்த ஒரு பகுதியிலும் தனி மனித ஒழுக்கம் தவறாத போராளியாக வாழ்ந்த "டாக்டர்.அம்பேத்கர்தான் இந்த தேசத்தின் உண்மையான தந்தை".




பல்வேறு காலகட்டங்களில், வரலாற்றின் பக்கங்களில் அவரே வெளிப்படுத்தி இருக்கும் கருத்துக்கள் அவரை இந்த உயர்ந்த நிலையை நோக்கி தானியக்கமாக எடுத்துச் செல்லும்.



1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள், ரத்னகிரி மாகாண உழவர் மாநாட்டில், சிப்லம் என்னும் ஊரில் உரையாற்றும் போது பின்வருமாறு கூறுகிறார். "ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளும், அடக்குமுறைகளும், கோத்தி முறையும் ஒழிக்கப்பட வேண்டும் என்றால், சட்ட மன்றங்களுக்கு நீங்கள் சரியான மனிதர்களை அனுப்பும் கடமையை சரியாகச் செய்ய வேண்டும்".



மேற்சொன்ன இந்த தேசத்தந்தையின் வார்த்தைகளை இன்று வரை நாம் கடைபிடிக்க இயலாமல் போனதற்கு ஒரு வகையில் இரட்டை வாக்குரிமை முறையை எதிர்த்து உண்ணா நோன்பிருந்து பயமுறுத்திய காந்தியாரும் ஒரு காரணம்.



1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் புனேயில் நடைபெற்ற "சாந்த சமாஜ்" என்னும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய அண்ணல், "சம உரிமைகளைப் பெற வேண்டுமென்றால், சமூக உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால், இப்போதைய விடவும் அதிகமாகப் போராடுங்கள், நன்கு இணைந்து செயல்படுங்கள்" என்று முழங்கினார்.



1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் தானேயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், "ஒரு போதும் விதியை நம்பாதீர்கள், உங்கள் வலிமையை நம்புங்கள்" என்றார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு எளிமையான அழகான வழியைச் சொன்னார், அது வேறொன்றுமில்லை, "இந்து மதத்தைப் புறக்கணியுங்கள்" என்பதுதான்.




இந்த ஒரு காரணமே போதும் அவரை நாம் இந்த தேசத்தின் தந்தையாகக் கொண்டாடுவதற்கு. ஏனென்றால், இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அடிமைத்தனங்கள் துவங்குகிற மைய ஊற்று இந்த மதம்தான்.



இப்படித் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இரவுபகலாய் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மனிதகுலம் தழைப்பதற்கும், இந்தியக் குடியரசின் சட்ட முன்வடிவங்களை செதுக்கியதற்கும் "டாக்டர்.அம்பேத்கர் அவர்களைத்தான் நாம் தேசத்தந்தை என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்".



ஒரு மாமேதையின் நினைவு நாளில், அவரது கனவுகளை மெய்ப்பிக்க ஒன்றிணையும் உறுதி கொள்வோம், நம் சகோதரச் சண்டைகளை விடுத்து உண்மையான விடுதலை நோக்கி விரைவோம்!




- கை.அறிவழகன்