நம்மை 300 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களது வரவு - செலவு கணக்கெழுத கணக்கு பிள்ளைகளை உருவாக்கும் நோக்கில், "மெக்காலே' என்ற ஆங்கிலேயரைக் கொண்டு உருவாக்கிய கல்வித் திட்டத்தை தான் இந்தியாவில் இன்றளவும் தொடர்கிறோம். இந்தக் கல்வித் திட்டம், ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறதே தவிர, வாழ்க்கையை, தான் வாழும் சமூகத்தை, வாழ்வியல் நெறிகளைச் சொல்லி, மனதை, அறிவை விசாலப்படுத்துவதாக இல்லை.
ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், கேந்திரிய வித்யாலயா என்று பல பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதால், மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு எண்ணத்தை வளர்த்தன. ஸ்டேட் போர்டில் படிப்பவன் சாதாரணமானவன், சென்ட்ரல் போர்டில் படிப்பவன் மேலானவன் என்ற மன நிலையை உருவாக்கின. அதற்கு ஏற்றாற்போல், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பதவிக்கான படிப்புகளைப் படிக்க, சென்ட் ரல் போர்டு மாணவர்களுக்கு எளிதாக இருந்தது. "எல்லாருக்கும் ஒரே விதமான பாடத்திட்டம்' என, கல்வித் திட்டத்தை மாற்றும் முயற்சியில், மத்திய, மாநில அரசுகள் தற்போது ஈடுபட்டுள்ளன. இதற்கு முன் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில், சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அதில் கிடைத்த அனுபவங்கள், "புதிய மொந்தையில் பழைய கள்'ளாகவே இருந்திருக்கின்றன. இப்போதைய கல்வித்துறை சீர்திருத்தமும் அப்படி அமையாமல், "புதிய பாத்திரம்; புதிய அமிர்தம்' என்று சொல்லத்தக்க வகையில் முழுமையான, முற்றிலும் பலன் தரக்கூடியதாக அமைய வேண்டும்.
"வாழ்வியல் கல்வி' என்பது தான், வாழுகிற சமூகத்தின் அனைத்து துறைகளையும் பற்றி தெரிந்து கொள்ள வைப்பது. ஒரு மாணவன் ஐந்தாம், பத்தாம், பிளஸ் 2வோடு படிப்பை நிறுத்தினாலும், படிப்பை விட்டு வெளியேறிய பின், இவர்கள் அனைவரும் சமூக அறிவில் ஒரே தளத்தில் தான் நிற்கின்றனர். அவர்கள் அதுவரை கற்ற கல்வி, வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை. இன்றைய கல்வித் திட்டப்படி, படித்து வெளிவருகிற மாணவர்களுக்கு, சரியாக ஒரு கடிதம் எழுதவோ, வங்கியில் பணம் போட ஒரு செலான் நிரப்பவோ, ஒரு வேலைக்கு மனு செய்வது கூட எப்படி என்று தெரிவதில்லை. நம் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி யார் யார் என்பதும், கிராமத்து பஞ்சாயத்து தலைவர், தொகுதி சட்டசபை உறுப்பினர் பெயர் கூட தெரிவதில்லை. பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி மன்ற அமைப்புகள் பற்றிய விவரங்கள், அவற்றின் தேர்வு முறைகள், அவர்களுக்கான அதிகாரம், மக்களுக்கு பயன்படுகிற முறைகள், இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் காலகட்டத்தில், ஒவ்வொரு மாணவனையும், அவனைப் பற்றி, அவனுடைய ஆரோக்கியம், சமூகத் தேவை, சுயசிந்தனையுள்ளவனாக மாற்றும் வகையில், வாழ்வியல் கல்வி போதிக்க வேண்டும்.
இன்றைய புள்ளி விவரப்படி, ஏறக்குறைய ஆறு லட்சம் பேர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வோடு தங்கள் படிப்பை கைவிட்டு, ஏதோ ஒரு வேலை அல்லது சுயதொழில் செய்தோ வாழ முயல்கின்றனர். அவர்களுக்கு, இப்போதைய கல்வி முறை எந்தவிதத்திலும் வழிகாட்டுவதாக இல்லை. படித்த கல்விக்கு தகுந்த வாழ்வியல் அறிவைப் பெற வேண்டுமானால், ஆரோக்கிய சிந்தனை, போதை வஸ்துக்களின் எதிர்ப்பு, புத்தகம், பத்திரிகை படித்தல், மனிதநேயப் பண்புகள், குடும்ப உறவுகள், நமது மண்ணின் விவசாய முறைகள், கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி, நமது கலாசார பெருமைகள், மொழி, இன, நாட்டுப் பெருமை போன்ற வாழ்வியல் பாடங்கள், பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். சில ஆண்டுக்கு முன் வரை, ஐந்து ஆண்டுகள் படித்திருந்தாலும், தமிழில் ஒரு சொற்றொடரை சரிவர படிக்க முடியாத குழந்தைகள் நிறைய பேர் இருந்தனர். செய்தித்தாள், புத்தகங்கள் படிப்பது, ஒவ்வொரு மாணவனின் கட்டாய கடமை என்று சீரமைக்கப்பட்டால், வாழ்வியல் சார்ந்த கல்வி என்ற இலக்கை அடைய எளிதாக இருக்கும்.
பிறர் துன்பத்தை துடைக்கிற தேவைப்படுவோருக்கு தன்னாலானதை செய்கிற, பாகுபாடு இல்லாத மனிதநேயம் மலர்ந்து விட்டால், கற்ற கல்வி பயனுள்ளதாகிவிடும். அவற்றை எல்லா மாணவர்களும் புரிந்து, உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்கிற அளவிற்கு, பாடத்திட்டத்தில் அதற்குண்டான சம்பவங்களை இடம் பெற செய்ய வேண்டும். ஒரு மாணவன், பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை ஒரு மரத்தை நட்டு, பராமரித்து, உருவாக்கி இருக்க வேண்டும். அப்படி செய்தால், அதற்கு மதிப்பெண் அளிக்கப்படும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக் கான மரங்களை உருவாக்க முடியும்.
நேற்றைய வரலாறு தெரியாதவனுக்கு இன்றைய வரலாறு புரியாது; இன்றைய வரலாறு புரியாவிட்டால், நாளைய வரலாறு உருவாகாது. எனவே, நமது மண்ணின் வரலாறு, கலாசார பெருமை பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பது சமூகக் கடமை. சோறு மட்டுமே வாழ்க்கையல்ல; அன்பு, பாசம், பற்று, மொழி நேசம், இனப்பற்று, தேசபக்தி எல்லாம் கலந்து உருப்பெறுவது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை. அதை மாணவச் செல்வங்களுக்கு உணர்த்த வேண்டும். இன்னும் சேர்க்க வேண்டிய பயனுள்ள பாடத்திட்டங்களைப் பற்றி, அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களின் மூலம் கருத்துகளை திரட்ட வேண்டும். மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, அந்த மாதிரி பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அதை மீண்டும் ஒரு ஆய்வு செய்து, பின் அந்தப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பிளஸ் டூ வகுப்பு முடித்து வெளியே வரும்போது, எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவோடும், புதிதாக ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்குத் தக்கவாறு, தன்னை எவ்விதம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவோடும் மாணவர்கள் இருப்பர்.
- சைதை துரைசாமி, சிந்தனையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி
Thanks to: Dinamalar Daily
Saturday, October 31, 2009
Wednesday, October 28, 2009
நாளை நமதாகாதா?
எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் முனைவர்களாகவும் உள்ளனர் என்றார்.
அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார்.
அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்’ என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.
ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. ‘பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.
கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.
எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?
முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே.
நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1
நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார். அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.
ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது.
இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா?
- ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார்.
அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்’ என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.
ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. ‘பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.
கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.
எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?
முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே.
நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1
நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார். அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.
ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது.
இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா?
- ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
ஆன்மீக சிந்தனைகள் - 2
* பலவருடங்களாக பூட்டிக் கிடக்கும் அறை இருண்டு கிடக்கும். ஆனால், அந்த அறைக்குள் விளக்கினைக் கொண்டு வந்த உடனேயே இருள் மறைந்து ஒளி பரவும். அதுபோல, இறைவனின் கருணைப்பார்வை பட்டவுடனேயே பல பிறவிகளில் செய்த பாவங்களும் உடனேயே நீங்கிவிடும்.
* இறைவனின் அருள் என்னும் காற்று இடையறாது வீசிக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் கடலில் முன்னேற விரும்பினால் உனது மனமாகிய படகின் பாயை விரித்தால் கடலைக் கடந்து கரை சேரலாம்.
* இறைவனின் திருப்புகழைப் பாடும் போது, கைகளை அசைத்துக் கொண்டும், இசைத்துக் கொண்டும் பாடுவாயாக. அப்போது பாவம் என்னும் பறவைகள் பறந்தோடிப் போகும்.
* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார்.
* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும்.
-ராமகிருஷ்ணர்
* எவர்கள் ஒரே இறைவனை விட்டு விட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப் பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப் பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! இறைவனை விட்டுவிட்டு எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, இறைவன் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். மக்கள் புரிந்து கொள்வதற் காக உவமைகளை நாம் கூறுகின்றோம். ஆயினும், ஞான முடையவர்கள் மட்டுமே இவற்றை அறிந்து கொள்கின்றார்கள்.
* ""அவனை(ஒரே இறைவனை) அழைப்பது தான் சரியான தாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக் கக்கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளை நீட்டி, ""தண் ணீரே! எனது வாயினுள் வந்து விடு''என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக் கூடியதாய் இல்லை. இவ்வாறே, இறைமறுப்பாளர்களின் இறைஞ்சுதல் இலக்கின்றி எறியப்படும் அம்பாகும்''.
-(வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)
"உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்?' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது.
""ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர்? என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே! எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை? என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் சொல்கிறார்களே! கர்த்தாவே! நான் செய்த பாவங்கள் தான் என்ன?'' இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள்.
""தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை விபத்துக்களை அனுமதிக்கிறீர்கள்?'' என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியை, ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?
""என்னை ஏன் குற்றப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து சாலை விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,'' என்பார்.
இது நிஜம் தானே! சட்டத்தை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! இதே போல், ஆண்டவருடைய சட்டப்புத்தகமான வேதாகமத்தை (பைபிள்) புறக்கணிப்பதால் தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். இறைவன் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறான். பொய் சொல்லாதே, களவு செய்யாதே, உழைக்காதவனுக்கு உண்ண உரிமையில்லை... இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லையே!
சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா? இல்லையே! இன்னின்ன காரியங்களைத் தவிர்த்தால், நீ சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார்! அழகான உலகத்தைக் கொடுத்த தேவன், அங்கே வாழும் முறையையும் கற்றுத் தந்துள்ளார்.
கொடுக்கப்பட்ட செயல்முறைக்கு மாறாக நடந்தால், வாங்கிய பொருள் எப்படி செயலிழக்குமோ அதுபோல், ஆண்டவரின் கட்டளைகளை மீறி நடக்கும்போது பிரச்னைகள் தலை தூக்குகிறது. ஒரு இன்டர்வியூவுக்குப் புறப்பட்டால், முதல்நாளே எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயாராகிறோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போக, முதல்நாள் இரவே எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துவதில்லையே! அப்படியானால் ஆத்துமாவுக்கும், ஆவிக்கும் எப்படி அமைதி கிடைக்கும்? ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைபிடித்தும் கெடுக்கிறோமே! பின்னர் கஷ்டம் வரத்தானே செய்யும்!
பைபிளில் ஒரு வசனம், ""உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமுமுள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது'' என்கிறது. மனித சரீரத்தின் உண்மைத்தன்மை இந்த வசனத்தில் வெளிப்படுகிறது. மனித உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறார்கள் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக வருகின்றன. ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்டு அதில் இருந்து விடுபடுங்கள் என்பது இந்த வசனம் உ<ணர்த்தும் கருத்து.
நமது துன்பங்களுக்கு நாமே காரணம் என்பது புரிந்து விட்டதல்லவா! இனி தவறு செய்ய மாட்டீர்கள்தானே!
தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும். அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
'நான்' என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும் பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும். அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து கொள்ளும் வரை 'நான்' என்ற மயக்கம் இருக்கும்.
வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள் அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள். வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது. காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு காரணத்தோடுதான் வருகிறது.
கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய் உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை நீங்கள் காணமுடியும்.
நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர் கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம் அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான் தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன் மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.
கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம் ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கிவிட வேண்டும்.
Thanks to:
Labels:
ஆன்மீக சிந்தனைகள்,
கடவுள் நம்பிக்கை,
தர்மம்
Monday, October 26, 2009
பிரளயத்தின் விளைவும் பெரும் அழிவும்!!!
( கம்பம் மவ்லானா பீர்முஹம்மது பாகவியின் – வெள்ளிச்சரம் )
வெள்ளப் பிரளயம் ஏற்பட்டிருந்த போது நபி நூஹ் அவர்கள் தமது மகனை எச்சரித்தார்கள். உனது நீச்சலும் மலையும் காப்பாற்றும் என எண்ணாதே என இரக்கத்துடன் எச்சரித்தார்கள். அவனோ வியக்கும் வண்ணம் நீந்தி வந்து கொண்டிருந்தான். இதற்குள்ளாக இருவருக்கு மிடையே ஒரு பேரலை எழுந்து குறுக்கிட்டு விட்டது. ஆபத்தும் அழிவும் தன் கண்முன்னே தெரிந்தும் அகந்தை பேசிய அவனை, அப்படியே அமுக்கி முழ்க வைத்து அழித்து விட்டது. மகனின் மரணம் நபி நூஹின் மனதைப் பெரிதும் பாதித்து விட்டது. அடக்கிக் கொண்டார். வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளப் பிரளயம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்தது.
ஒரு மாபெரும் வெள்ளப்பிரளயம் உலகை உலுக்கிய செய்தியை முந்தைய வேதங்களும் உலகின் தொன்மை யான வரலாற்று நூல்களும் கூறு கின்றன. இவ்வுலகின் இறுதி வேதமாம் இறைமறை அல்குர்ஆனில் இது குறித்துத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இம்மண்ணகத்தில் இறைவனுக்கெதிரான அனைத்துச் சக்திகளும் அழிக்கப்பட்டிருந்தன. உண்மைக்கு எதிரான அனைவரும் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் துடைத் தொழிக்கப் பட்டிருந்தனர்.
மீண்டும் இறைக்கட்டளை பிறந்தது! “பூமியே! உனது நீர் முழுவதை யும் விழுங்கி விடு! வானமே! நீர் பொழிவதை நிறுத்திக் கொள்!” நீர் வற்றத் துவங்கியது. வானம் வறண்டு போனது. பயணப்பட்டுக் கொண்டிருந்த கப்பல் அமைதியடைந்தது. “ஜூதி” எனும் மலையில் நிலை கொண்டது. நீர்மயம் மறைந்து நிலம் தெரிந்தது. “அக்கிரமம் புரிந்த மக்கள் அழிக்கப்பட்டு விட்டனர்!” எனும் செய்தி அறைகூவலாக ஒழித்தது. நபி நூஹின் மனம் பாசமகளை எண்ணிப் பரிதவித்தது. இறைவா! எனது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதாக வாக்குறுதி தந்தாயே! என் மகனும் என் குடும்பத்தைச் சார்ந்தவனல்லவா? எனப் பிரார்த்தித்தார்கள்.
நூஹே! நீர் அறியாமல் பேசிகிறீர்! அவன் உன் மகனாக இருக்கலாம். ஆனால் அவனிடம் நற்பண்புகள் இல்லாததால் நல்லவனாக இல்லாததால் அவன் உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்லன். உனக்குத் தெரியாதவை பற்றியெல்லாம் கேட்டு என்னிடம் தர்க்கம் செய்யாதீர்! என இறைவன் கடிந்தான். நூஹ் தனது அவசரத் தவறுக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோரினார்கள். தந்தை இறைத் தூதராக இருக்கின்றார் என்பதற்காகத் தனயன் ஈடேற்றமடைந்து விட முடியாது.
அவரவர் இறை விசுவாசம் கொண்டு தூய நெறிகளைப் பேணிப் பண்போடு வாழும்போதே சிறப்படைகின்றனர். இறை அன்பைப் பெறுகின்றனர். குர்திஸ்தான் பகுதியில் இபுனு உமர் தீவுக்கு வட கிழக்குப் பகுதியில் ஜூதிமலை உள்ளது. இன்றும் இது இப்பெயரால் இங்கு பிரபலமாக அழைக்கப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் இம்மலையின் உச்சியில் மிகவும் சிதைந்து போன பழமையான மரக் கலம் ஒன்று அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது நூஹ் (அலை) அவர்களின் கப்பல் என உறுதி செய்யப்பட்டது. நோவாவின் மரக்கலத்துண்டுகள் என இன்னும் மக்கள் கூறுகின்றனர்.
1400 ஆண்டுகளுக்கு முன் அருள்மறையில் கூறப்பட்டுள்ள செய்திக்கு அண்மையில் வரலாற்றுத் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நபி நூஹின் மீதும் அவரைப் பின்பற்றிய அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் அன்பும் பொழியப்பட்டன. அவர்களிலிருந்து வேறு சில சமூகங்களும் தோன்றும் என அறிவிக்கப்பட்டது. அம்மக்கள் புதிய உலகத்தில் புதிய வாழ்க்கை வாழத்துவங்கினர்.
புயலென வீசிய மாபெரும் சூறைக்காற்று!
வெள்ளம் வடிந்து மக்கள் புதிய வாழ்வைத் துவக்கினர். அன்று பூமி புனிதமடைந்திருந்தது. உண்மை இறைவனை நம்பியோர் மட்டுமே இருந்தனர். ஆண்டுகள் பல கடந்தன. ஆங்காங்கு மக்கள் பெருகினர். நபி நூஹ் (அலை) அவர்களின் வாழ்வும் முடிந்தது.காலம் செல்லச் செல்ல மக்கள் நெறி பிறழ்ந்து சென்று கொண்டிருந்தனர். பெரும்பாலும் நெறி பிறழ்வது மக்களின் இயல்பாக அமைந்து விட்டது. படைத்தாளும் இறைவன் அவ்வப்போது தூதர்களை அனுப்பி மனிதர்களைச் செம்மைப் படுத்தி வந்தான். இது மனித இனத்துக்கு இறைவன் செய்த பேரருளாகும்.
வேதங்கள், மனித வாழ்வின் பாடப்புத்தகங்களாகவும் தூதர்கள், அப்புத்தகங்களை விளக்கிக்கூறி, வாழ்வின் இரு பக்கங் களான இம்மை மறுமைக்கு வழிகாட்டும் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தனர். “நான் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தரும் ஆசானா கவே வந்திருக்கின்றேன்” என இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நம் சிந்தையை ஈர்க்கின்றது. தூதர்கள் தோன்றியிராவிட்டால் மாந்தர்கள் விலங்கினும் கீழாய் ஆகியிருப்பர்.
இறைத்தூதர்களின் சீர்திருத்தப் பிரச்சாரம் மக்களைச் செம்மைப் படுத்தியது. அவர்களில் இறையுணர்வையும், இறையச்சத்தையும் தோற்றுவித்தது. இறைத்தூதர்கள் அறிவொளி ஏந்தி வந்தனர். அறிவு, அறியாமையைப் போக்குகின்றது. வெளிச்சம் இருட்டை விரட்டுகின்றது அவர்கள் “இறையச்சம்” எனும் சர்வரோக நிவாரணியைக் கொண்டு வந்தனர். அது மனிதனின் உடல் உளப்பிணிகளைப் போக்கி எல்லா விதப் பாவ நோய்களையும் அகற்றுகின்றது. ஆக, வகுப்பில் ஆசிரியரின் பங்கும் பணியும் எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே உலகப் பள்ளிக்கு இறைத்தூதர்களின் பணி மிக உன்னதமானதாக இருந்தது.
தூதர்களின் தொடர் தொடர்ந்தது. ஆங்காங்கிருந்த சிற்றூர், பேரூர், நாடு, நகரங்களில் அந்தந்த மொழி இனங்களிடையே இறைத் தூதர்கள் இறைவனால் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். தன்னைப் பற்றி அறிவிக்கவும் தனது கட்டளைகளைத் தெரிவிக்கவுமே இறைவன் தூதர்களைத் தோற்றுவித்தான். உன்னைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எவரும் எங்களிடம் வரவில்லை” என யாரும் இறைவனிடம் குறை கூறி முறையிட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு, சிந்தனை, தெளிவு, பகுத்துப் பார்க்கும் உணர்வு, சீர்தூக்கிப் பார்க்கும் செறிவு, நல்லதைப் பின்பற்றும் மனநிலை ஆகியவை வைத்தே இறைவன் படைத்திருக்கின்றான். சிலர் இவற்றைப் பயன்படுத்த வில்லை என்றால் அது அவர்களின் குற்றமே அன்றி இறைவனின் குற்றமன்று.
நோய் தீர்க்கும் அருமருந்திருக்கும் போது அதை வைத்து பிணிநீக்க முற்படுவது தானே அறிவுடைமை. ஆரம்ப காலத்திலிருந்தே தூதர்கள் ஆங்காங்கே தோன்றிக் கொண்டே இருந்தனர். வாய்மையும் பொறுமையும் நிறைந்த நபியாக இத்ரீஸ் (அலை) அவர்கள் வந்தார்கள். மக்களிடம் மார்க்க அழைப்புப் பணியை மகிமையுடன் செய்தார்கள். “ஆத்” எனும் சமூகத்தாரிடம் ஹூத் (அலை) எனும் சிறப்பு வாய்ந்த தூதர் நபியாக வந்தார். அல்லாஹ்வை நம்பி அவனுக்குப் பணிந்து வாழுங்கள். அவனையே வணங்குங்கள். என்று அன்பாகக் கூறினார். அகந்தை கொண்ட அம்மக்கள் அவரது இறைச்செய்தியை நிராகரித்தனர். பொய்யர் என்றும், அறிவற்றவர் என்றும் வாய்க்கு வந்தவாறெல்லாம் தூற்றிப் பேசினர்.
“ஹூத்” நபி சொன்ன எந்த விஷயத்தையும் அவர்கள் கேட்கவில்லை. எங்களின் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நாங்கள் செய்வோம். உமது புதிய கொள்கையான ஓரிறைக் கொள்கையை ஒரு போதும் ஏற்கமாட்டோம்” என விடாப்பிடியாய் நின்றனர். “ஆத்” சமூகத்தினரே! நூஹ் நபியின் சமூகத்தாருக்குப்பின் இப்புவியில் நீங்களே சிறந்த சமுதாயத்தினராக இருக்கின்றீர்கள். முதலில் நீங்கள் இந்த உண்மையை உணர்ந்து பின் பற்றுங்கள். பின்னர் மற்றவர்களுக்கும் கூறுங்கள்” என இதமாக இனிமையாக எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் கேட்கவில்லை.
“உமது இறைவனின் தண்டனை வரும் வரும் என எங்களை மிரட்டிக் கொண்டிருக்கின்றீரே! எங்கே அந்த வேதனையை வரச்சொல்லும் பார்க்கலாம்!” என ஏளனமாகக் கேட்டனர். அருள்மயமான இறைவன் அந்த அக்கிரமக்காரர்கள் மீது அடங்காச்சினம் கொண்டான். பெரும் சூறைக்காற்றை அனுப்பினான். அது படுபயங்கரமாக வீசியது. இறை நிராகரிப்பாளர்களான ஆணவக்காரர்களைத் தூக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது.
“ஆத்” சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளியால் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களும் தொடர்ந்து ஏவினான். இற்றுப்போன ஈச்சமரத் துண்டுகளைப் போன்று அவர்கள் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தனர். (அல்குர்ஆன்). உடலில் அழுகிய பகுதி இருந்தால் அதனை வெட்டி எடுத்துப் பாதுகாக்கின்றோம். புற்று நோய் பற்றியிருக்கும் அங்கத்தை அகற்றி விடுகின்றோம். உண்மையை ஏற்காத இவர்கள்… சத்தியத்தை நிராகரித்த இவர்கள்… மனித இனத்தின் அழுகிய அங்க மாகும். புற்றுப் பகுதியாகும். எனவே தான் படைத்தாளும் இறைவன் இவர்களை முற்றிலுமாகத் துடைத்தொழித்தான். நல்லவர்களைப் பாது காத்தான். ஈடேற்றமடையச் செய்தான்.
இனிய நெஞ்சங்களே! உலகின் தொடக்க காலத்திய இறைத்தூதர்கள் பற்றிய செய்திகளும் அன்று வாழ்ந்த மக்கள் பற்றிய நிலைமை நிகழ்வு களும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக ஈண்டு எடுத்துக் காட்டப்படு கின்றன. ஆரம்ப காலம் தொடுத்தே இறைநெறியின் பக்கம் மக்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த உண்மையை அருள்மறை அல்குர் ஆனின் வெளிச்சத்தில் நாம் அறிந்து கொள்கின்றோம். இறை நம்பிக்கை கொண்டு இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நல்லோர் என்றுமே பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையை ஏற்று உண்மையாய் வாழ்ந்தோர் இறையன்பைப் பெற்று இனிதே வாழ்ந்திருக் கின்றனர். இதுவே இறைவனின் நியதி. நாட்கள் நகர்ந்தன. காலம் சுழன்றது. அடுத்தடுத்த தலைமுறை தோன்றியது. நேர்த்தியான நெல் மணியில் பதர்களும் கலந்தன.
மீண்டும் தூய இறைநெறியை மறந்து மனம் போன போக்கில் மக்கள் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்தில் “ஸமூத்” எனும் சமூகத்தார் சிறந்து விளங்கினர். அவர்களிடையே இறை உணர்வையூட்டி சீர்திருத்தம் செய்வதற்காக ஸாலிஹ் நபி (அலை) அவர்களை இறைவன் தெரிந்தெடுத்து அறிவித்தான். மக்களிடையே தோன்றிய அவர்கள் இறைமார்க்க அழைப்புப் பணியைத் துவங்கினார்கள்.
நன்றி : குர் ஆனின் குரல் ( அக்டோபர் 2009 )
வெள்ளப் பிரளயம் ஏற்பட்டிருந்த போது நபி நூஹ் அவர்கள் தமது மகனை எச்சரித்தார்கள். உனது நீச்சலும் மலையும் காப்பாற்றும் என எண்ணாதே என இரக்கத்துடன் எச்சரித்தார்கள். அவனோ வியக்கும் வண்ணம் நீந்தி வந்து கொண்டிருந்தான். இதற்குள்ளாக இருவருக்கு மிடையே ஒரு பேரலை எழுந்து குறுக்கிட்டு விட்டது. ஆபத்தும் அழிவும் தன் கண்முன்னே தெரிந்தும் அகந்தை பேசிய அவனை, அப்படியே அமுக்கி முழ்க வைத்து அழித்து விட்டது. மகனின் மரணம் நபி நூஹின் மனதைப் பெரிதும் பாதித்து விட்டது. அடக்கிக் கொண்டார். வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளப் பிரளயம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்தது.
ஒரு மாபெரும் வெள்ளப்பிரளயம் உலகை உலுக்கிய செய்தியை முந்தைய வேதங்களும் உலகின் தொன்மை யான வரலாற்று நூல்களும் கூறு கின்றன. இவ்வுலகின் இறுதி வேதமாம் இறைமறை அல்குர்ஆனில் இது குறித்துத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இம்மண்ணகத்தில் இறைவனுக்கெதிரான அனைத்துச் சக்திகளும் அழிக்கப்பட்டிருந்தன. உண்மைக்கு எதிரான அனைவரும் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் துடைத் தொழிக்கப் பட்டிருந்தனர்.
மீண்டும் இறைக்கட்டளை பிறந்தது! “பூமியே! உனது நீர் முழுவதை யும் விழுங்கி விடு! வானமே! நீர் பொழிவதை நிறுத்திக் கொள்!” நீர் வற்றத் துவங்கியது. வானம் வறண்டு போனது. பயணப்பட்டுக் கொண்டிருந்த கப்பல் அமைதியடைந்தது. “ஜூதி” எனும் மலையில் நிலை கொண்டது. நீர்மயம் மறைந்து நிலம் தெரிந்தது. “அக்கிரமம் புரிந்த மக்கள் அழிக்கப்பட்டு விட்டனர்!” எனும் செய்தி அறைகூவலாக ஒழித்தது. நபி நூஹின் மனம் பாசமகளை எண்ணிப் பரிதவித்தது. இறைவா! எனது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதாக வாக்குறுதி தந்தாயே! என் மகனும் என் குடும்பத்தைச் சார்ந்தவனல்லவா? எனப் பிரார்த்தித்தார்கள்.
நூஹே! நீர் அறியாமல் பேசிகிறீர்! அவன் உன் மகனாக இருக்கலாம். ஆனால் அவனிடம் நற்பண்புகள் இல்லாததால் நல்லவனாக இல்லாததால் அவன் உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்லன். உனக்குத் தெரியாதவை பற்றியெல்லாம் கேட்டு என்னிடம் தர்க்கம் செய்யாதீர்! என இறைவன் கடிந்தான். நூஹ் தனது அவசரத் தவறுக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோரினார்கள். தந்தை இறைத் தூதராக இருக்கின்றார் என்பதற்காகத் தனயன் ஈடேற்றமடைந்து விட முடியாது.
அவரவர் இறை விசுவாசம் கொண்டு தூய நெறிகளைப் பேணிப் பண்போடு வாழும்போதே சிறப்படைகின்றனர். இறை அன்பைப் பெறுகின்றனர். குர்திஸ்தான் பகுதியில் இபுனு உமர் தீவுக்கு வட கிழக்குப் பகுதியில் ஜூதிமலை உள்ளது. இன்றும் இது இப்பெயரால் இங்கு பிரபலமாக அழைக்கப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் இம்மலையின் உச்சியில் மிகவும் சிதைந்து போன பழமையான மரக் கலம் ஒன்று அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது நூஹ் (அலை) அவர்களின் கப்பல் என உறுதி செய்யப்பட்டது. நோவாவின் மரக்கலத்துண்டுகள் என இன்னும் மக்கள் கூறுகின்றனர்.
1400 ஆண்டுகளுக்கு முன் அருள்மறையில் கூறப்பட்டுள்ள செய்திக்கு அண்மையில் வரலாற்றுத் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நபி நூஹின் மீதும் அவரைப் பின்பற்றிய அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் அன்பும் பொழியப்பட்டன. அவர்களிலிருந்து வேறு சில சமூகங்களும் தோன்றும் என அறிவிக்கப்பட்டது. அம்மக்கள் புதிய உலகத்தில் புதிய வாழ்க்கை வாழத்துவங்கினர்.
புயலென வீசிய மாபெரும் சூறைக்காற்று!
வெள்ளம் வடிந்து மக்கள் புதிய வாழ்வைத் துவக்கினர். அன்று பூமி புனிதமடைந்திருந்தது. உண்மை இறைவனை நம்பியோர் மட்டுமே இருந்தனர். ஆண்டுகள் பல கடந்தன. ஆங்காங்கு மக்கள் பெருகினர். நபி நூஹ் (அலை) அவர்களின் வாழ்வும் முடிந்தது.காலம் செல்லச் செல்ல மக்கள் நெறி பிறழ்ந்து சென்று கொண்டிருந்தனர். பெரும்பாலும் நெறி பிறழ்வது மக்களின் இயல்பாக அமைந்து விட்டது. படைத்தாளும் இறைவன் அவ்வப்போது தூதர்களை அனுப்பி மனிதர்களைச் செம்மைப் படுத்தி வந்தான். இது மனித இனத்துக்கு இறைவன் செய்த பேரருளாகும்.
வேதங்கள், மனித வாழ்வின் பாடப்புத்தகங்களாகவும் தூதர்கள், அப்புத்தகங்களை விளக்கிக்கூறி, வாழ்வின் இரு பக்கங் களான இம்மை மறுமைக்கு வழிகாட்டும் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தனர். “நான் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தரும் ஆசானா கவே வந்திருக்கின்றேன்” என இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நம் சிந்தையை ஈர்க்கின்றது. தூதர்கள் தோன்றியிராவிட்டால் மாந்தர்கள் விலங்கினும் கீழாய் ஆகியிருப்பர்.
இறைத்தூதர்களின் சீர்திருத்தப் பிரச்சாரம் மக்களைச் செம்மைப் படுத்தியது. அவர்களில் இறையுணர்வையும், இறையச்சத்தையும் தோற்றுவித்தது. இறைத்தூதர்கள் அறிவொளி ஏந்தி வந்தனர். அறிவு, அறியாமையைப் போக்குகின்றது. வெளிச்சம் இருட்டை விரட்டுகின்றது அவர்கள் “இறையச்சம்” எனும் சர்வரோக நிவாரணியைக் கொண்டு வந்தனர். அது மனிதனின் உடல் உளப்பிணிகளைப் போக்கி எல்லா விதப் பாவ நோய்களையும் அகற்றுகின்றது. ஆக, வகுப்பில் ஆசிரியரின் பங்கும் பணியும் எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே உலகப் பள்ளிக்கு இறைத்தூதர்களின் பணி மிக உன்னதமானதாக இருந்தது.
தூதர்களின் தொடர் தொடர்ந்தது. ஆங்காங்கிருந்த சிற்றூர், பேரூர், நாடு, நகரங்களில் அந்தந்த மொழி இனங்களிடையே இறைத் தூதர்கள் இறைவனால் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். தன்னைப் பற்றி அறிவிக்கவும் தனது கட்டளைகளைத் தெரிவிக்கவுமே இறைவன் தூதர்களைத் தோற்றுவித்தான். உன்னைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எவரும் எங்களிடம் வரவில்லை” என யாரும் இறைவனிடம் குறை கூறி முறையிட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு, சிந்தனை, தெளிவு, பகுத்துப் பார்க்கும் உணர்வு, சீர்தூக்கிப் பார்க்கும் செறிவு, நல்லதைப் பின்பற்றும் மனநிலை ஆகியவை வைத்தே இறைவன் படைத்திருக்கின்றான். சிலர் இவற்றைப் பயன்படுத்த வில்லை என்றால் அது அவர்களின் குற்றமே அன்றி இறைவனின் குற்றமன்று.
நோய் தீர்க்கும் அருமருந்திருக்கும் போது அதை வைத்து பிணிநீக்க முற்படுவது தானே அறிவுடைமை. ஆரம்ப காலத்திலிருந்தே தூதர்கள் ஆங்காங்கே தோன்றிக் கொண்டே இருந்தனர். வாய்மையும் பொறுமையும் நிறைந்த நபியாக இத்ரீஸ் (அலை) அவர்கள் வந்தார்கள். மக்களிடம் மார்க்க அழைப்புப் பணியை மகிமையுடன் செய்தார்கள். “ஆத்” எனும் சமூகத்தாரிடம் ஹூத் (அலை) எனும் சிறப்பு வாய்ந்த தூதர் நபியாக வந்தார். அல்லாஹ்வை நம்பி அவனுக்குப் பணிந்து வாழுங்கள். அவனையே வணங்குங்கள். என்று அன்பாகக் கூறினார். அகந்தை கொண்ட அம்மக்கள் அவரது இறைச்செய்தியை நிராகரித்தனர். பொய்யர் என்றும், அறிவற்றவர் என்றும் வாய்க்கு வந்தவாறெல்லாம் தூற்றிப் பேசினர்.
“ஹூத்” நபி சொன்ன எந்த விஷயத்தையும் அவர்கள் கேட்கவில்லை. எங்களின் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நாங்கள் செய்வோம். உமது புதிய கொள்கையான ஓரிறைக் கொள்கையை ஒரு போதும் ஏற்கமாட்டோம்” என விடாப்பிடியாய் நின்றனர். “ஆத்” சமூகத்தினரே! நூஹ் நபியின் சமூகத்தாருக்குப்பின் இப்புவியில் நீங்களே சிறந்த சமுதாயத்தினராக இருக்கின்றீர்கள். முதலில் நீங்கள் இந்த உண்மையை உணர்ந்து பின் பற்றுங்கள். பின்னர் மற்றவர்களுக்கும் கூறுங்கள்” என இதமாக இனிமையாக எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் கேட்கவில்லை.
“உமது இறைவனின் தண்டனை வரும் வரும் என எங்களை மிரட்டிக் கொண்டிருக்கின்றீரே! எங்கே அந்த வேதனையை வரச்சொல்லும் பார்க்கலாம்!” என ஏளனமாகக் கேட்டனர். அருள்மயமான இறைவன் அந்த அக்கிரமக்காரர்கள் மீது அடங்காச்சினம் கொண்டான். பெரும் சூறைக்காற்றை அனுப்பினான். அது படுபயங்கரமாக வீசியது. இறை நிராகரிப்பாளர்களான ஆணவக்காரர்களைத் தூக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது.
“ஆத்” சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளியால் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களும் தொடர்ந்து ஏவினான். இற்றுப்போன ஈச்சமரத் துண்டுகளைப் போன்று அவர்கள் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தனர். (அல்குர்ஆன்). உடலில் அழுகிய பகுதி இருந்தால் அதனை வெட்டி எடுத்துப் பாதுகாக்கின்றோம். புற்று நோய் பற்றியிருக்கும் அங்கத்தை அகற்றி விடுகின்றோம். உண்மையை ஏற்காத இவர்கள்… சத்தியத்தை நிராகரித்த இவர்கள்… மனித இனத்தின் அழுகிய அங்க மாகும். புற்றுப் பகுதியாகும். எனவே தான் படைத்தாளும் இறைவன் இவர்களை முற்றிலுமாகத் துடைத்தொழித்தான். நல்லவர்களைப் பாது காத்தான். ஈடேற்றமடையச் செய்தான்.
இனிய நெஞ்சங்களே! உலகின் தொடக்க காலத்திய இறைத்தூதர்கள் பற்றிய செய்திகளும் அன்று வாழ்ந்த மக்கள் பற்றிய நிலைமை நிகழ்வு களும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக ஈண்டு எடுத்துக் காட்டப்படு கின்றன. ஆரம்ப காலம் தொடுத்தே இறைநெறியின் பக்கம் மக்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த உண்மையை அருள்மறை அல்குர் ஆனின் வெளிச்சத்தில் நாம் அறிந்து கொள்கின்றோம். இறை நம்பிக்கை கொண்டு இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நல்லோர் என்றுமே பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையை ஏற்று உண்மையாய் வாழ்ந்தோர் இறையன்பைப் பெற்று இனிதே வாழ்ந்திருக் கின்றனர். இதுவே இறைவனின் நியதி. நாட்கள் நகர்ந்தன. காலம் சுழன்றது. அடுத்தடுத்த தலைமுறை தோன்றியது. நேர்த்தியான நெல் மணியில் பதர்களும் கலந்தன.
மீண்டும் தூய இறைநெறியை மறந்து மனம் போன போக்கில் மக்கள் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்தில் “ஸமூத்” எனும் சமூகத்தார் சிறந்து விளங்கினர். அவர்களிடையே இறை உணர்வையூட்டி சீர்திருத்தம் செய்வதற்காக ஸாலிஹ் நபி (அலை) அவர்களை இறைவன் தெரிந்தெடுத்து அறிவித்தான். மக்களிடையே தோன்றிய அவர்கள் இறைமார்க்க அழைப்புப் பணியைத் துவங்கினார்கள்.
நன்றி : குர் ஆனின் குரல் ( அக்டோபர் 2009 )
"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி"
"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.
அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?
கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான மல்கோண்டா பட்டேல் மற்றும் யோகேஷ் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.
இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.
இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.
***
"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:
சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.
நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.
ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.
மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.
இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:
ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.
பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.
திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.
பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.
அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.
- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்
Labels:
ஊடகங்கள்,
தீவிரவாதிகள்,
முஹம்மது அலி. ஐ.பி.எஸ்
சிறையில் காலம்தள்ளும் விசாரணைக் கைதிகளின் கதிக்கு விமோசனம்!!!
விசாரிக்கப்படாத தண்டனை கைதிகளும், விசாரணைக்கே அழைக்கப்படாத விசாரணை கைதிகளும், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் அனுபவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை உடனே கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தும்படி சட்ட அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளின் நிலை பற்றி முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தண்டனை பெற்ற கைதிகள், அப்பீல் செய்தாலும், அந்த அப்பீல் மனு விசாரணைக்கு வர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.இதுபோல, குற்றம் காரணமாக அடைக்கப்பட்ட விசாரணை கைதிகள் , விசாரணைக்கு உட்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இப் படி சிறையில் கண்டுகொள்ளப் படாத கைதிகள் பல்லாயிரக்கணக்கான பேர், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல், இப்படி விசாரணை செய்யப்படாமலேயே அனுபவித்து விட்டனர்.இன்னமும் சிறையில் தண் டனை அனுபவித்து வரும் இவர் கள் பற்றிய விரிவான கருத்துக்கள், பிரதமர் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. சமீபத்தில் ஒரு பத்திரிகையும் இது தொடர்பாக ஆய்வு அறிக்கை வெளியிட்டது.
இதை அடிப்படையாக வைத்து, ராஜ்யசபா காங்., உறுப்பினர் அஸ்வினி குமார், சமீபத்தில் பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார்."பல முறை கோர்ட்கள் எச்சரித்தும், இது போன்று நிலை நீடிக்கிறது. தண்டனை கைதிகளின் அப்பீல் மனு மீதான நடவடிக்கை பற்றி கண்டுகொள்ளப்படுவதே இல்லை. அதுபோல, விசாரணைக் கைதிகளின் நிலையும் படுமோசம். சிறையில் அடைப்பதோடு சரி; அவர்களை கண்டுகொள்வதே இல்லை' என்றும் தன் கடிதத்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, இந்த விஷயம் குறித்து விசாரித்து உரிய முடிவு எடுக்கும்படி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்
Saturday, October 24, 2009
ஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக! - இந்திய அரசுக்கு கடிதம்
சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!
இந்தியப் பிரதமருக்கு அனுப்பப் பட்ட வெளிப்படையான கடிதம்
ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராட்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு, பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளோம்.
மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்கான முக்கிய காரணமாகும். இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும் இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும், வாழ்நிலை தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவிலான இடம்பெயர்தல், அவலநிலை, மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை செய்யும்.
உள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை விளைவுகளையும், கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே அமையும். கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது.
உழலும், ஏழ்மை மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான் இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும். 1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை, தொழிற்சாலை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற‘ வளர்ச்சி திட்டம் என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.
இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச்செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது.
வேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள் இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும் செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள் இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன்மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம்.
விரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும், ஏழை மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும் உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற
வடிவத்தை பெறுகிறது.
பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ”ஏழையைக் கொல்வோம், ஏழ்மையை அல்ல" என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது.
இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும். இத்தகைய முயற்சியில்
குறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும்.
இந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி, ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில் அணிதிரளுமாறு கோருகிறோம்.
இவண்.
அருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ், திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி, மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி, டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர், ஜேம்ஸ் சி ஸ்காட் மற்றும் பிறர்.
(நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்கு)
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
99432 16762, 99433 11889, 94434 39869
Thanks to Mr. kalaiyarasan, Holland, www.kalaiy.blogspot.com
Labels:
அறிவுஜீவிகள்,
ஆதிவாசி மக்கள்,
இந்திய அரசாங்கம்
Friday, October 23, 2009
ஆன்மீக சிந்தனைகள்
* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
* அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.
-ஆதிசங்கரர்
* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.
* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்நாமாக்களை உச்சரித்தல், திருக்கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்லசெயல்கள் பாவம் தொலைக்கும் வழிகளாகும்.
* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
* வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். நமக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்து விடுகிறான்.
* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் போன்றது. புறவுலகில் இருக்கும் இன்பம் அனைத்தும் ஒரு நீர்த்துளி போன்றது தான். பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே ஒரு சொட்டுத் தண்ணீர்தான். இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.
- காஞ்சிப்பெரியவர்
* தானங்கள் நான்கு வகையாகும். அவை உணவு, மருந்து, சாஸ்திரம், அபயம் என்பன. இந்த நான்கு தானங்களையும் நாம் முடிந்த அளவிற்கு செய்ய வேண்டும்.
* உண்மையை மறந்து பொய்யின் பக்கம் சென்றுவிடுதல் பாவமாகும். உண்மையை மட்டும் பேசி வாழ்தல் என்பது எப்போதும் கடினம் தான். இருந்தாலும் பிறருக்கு தீங்கிழைக்காத படி நாம் பேச வேண்டும்.
* மிதமிஞ்சி உணவை ருசிக்காகச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். உடல் மட்டுமின்றி அதிக உணவால் மனமும் கெட்டுவிடும்.
* பேராசை உடையவனுக்கு இந்த உலகம் முழுவதையும் வழங்கினாலும் திருப்தி உண்டாவதில்லை. வயதான நிலையிலும் ஆசை மனிதனை விடுவதில்லை. இதனால் மரணம் நெருங்கும்போதும் அவன் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.
* கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?
* நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.
-மகாவீரர்
* பலவருடங்களாக பூட்டிக் கிடக்கும் அறை இருண்டு கிடக்கும். ஆனால், அந்த அறைக்குள் விளக்கினைக் கொண்டு வந்த உடனேயே இருள் மறைந்து ஒளி பரவும். அதுபோல, இறைவனின் கருணைப்பார்வை பட்டவுடனேயே பல பிறவிகளில் செய்த பாவங்களும் உடனேயே நீங்கிவிடும்.
* இறைவனின் அருள் என்னும் காற்று இடையறாது வீசிக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் கடலில் முன்னேற விரும்பினால் உனது மனமாகிய படகின் பாயை விரித்தால் கடலைக் கடந்து கரை சேரலாம்.
* இறைவனின் திருப்புகழைப் பாடும் போது, கைகளை அசைத்துக் கொண்டும், இசைத்துக் கொண்டும் பாடுவாயாக. அப்போது பாவம் என்னும் பறவைகள் பறந்தோடிப் போகும்.
* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார்.
* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும்.
-ராமகிருஷ்ணர்
* இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது.
* மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.
* யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.
* ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள்.
* மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும்.
-விவேகானந்தர்
* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது.
* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன். எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல் செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.
* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி கடவுளைக் காண முடியும்?
* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.
* மீனுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும், பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.
* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.
* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?
* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக் கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.
- கபீர் தாசர்
Labels:
ஆதி சங்கரர்,
ஆன்மீக சிந்தனைகள்,
கபீர் தாசர்,
மகாவீரர்,
ராமகிருஷ்ணர்
சுபாஷ் சந்திர போஸ் : மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரன்!
18th August 1945 - என்ன நடந்தது என்று தெரியுமா?
பள்ளிக்கூடங்களில் படித்த வரலாற்று புத்தகங்களில் சொல்லப்பட்டவை ஞாபகம் இருக்கிறதா?
அன்று தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்து போனார். (அல்லது இறந்து போனதாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது!)
தைவான் நாட்டின் இருந்த விமான நிலையத்தில் நடந்த விபத்தில் காயமடைந்தவர், எப்போது இறந்தார், அவரது அஸ்தி ஏன் டோக்யோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது?
டோக்யோ அருகில் இருக்கும் ரெண்கோஜி ஆலயத்தில் இருக்கும் அஸ்தி நேதாஜியுடையது அல்ல என்று கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் ஆனது ஏன்?
1999 - 2005 நடந்த முகர்ஜி கமிஷன் 2006-இல் முடிவை அறிவித்தது. அமெரிக்கா & தைவான் நாடுகள் அளித்த தகவல்களின்படி, தைவான் நாட்டில் அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் விமான விபத்து நடக்கவில்லை எனவும், ஜப்பானில் இருக்கும் அஸ்தி நேதாஜியுடையது அல்ல எனவும் அறிவிக்கப்பட்டது. 1945-லிருந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு ... என்ன ஒரு சுறுசுறுப்பு?
கமிஷன் அளித்த விசாரணை முடிவுகளை இந்திய அரசாங்கம் ஏற்காதது ஏன்? அதற்கான காரணங்கள் என்ன?
அங்கிருப்பது நேதாஜியின் அஸ்தி தான் என்றால், அதனை தகுந்த மரியாதையுடன் இந்தியாவுக்கு கொண்டு வராதது ஏன்?
அறுபது ஆண்டுகளில் 5 தலைவர்கள் மட்டுமே அங்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு வந்துள்ளனர்.
ராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
அடல் பிஹாரி வாஜ்பாய்
ஜஸ்வந்த் சிங்
மற்றவர்களுக்கு அவர் காந்தி, நேரு அளவுக்கு இந்திய விடுதலைக்கு போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பது தெரியவில்லையா? (இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்களிப்பை விட நேதாஜியின் பங்களிப்பு அதிகம் என்று வாதிடும் மக்களுமுண்டு)
2007-இல் ஜப்பானில் இருந்த போது, ஒரு ஜப்பானிய நண்பருடன் அந்த கோவிலுக்கு சென்றேன். சில வருடங்களுக்கு முன்பு அங்கே சென்ற அவருக்கு வழி மறந்து விட்டது. வழிப்போக்கர்களிடம் கேட்டுப் பார்த்தும் எந்த பயனுமில்லை. பத்து, பதினைந்து நிமிடங்கள் சுற்றி அலைந்து கொண்டிருந்தோம். (அது சரி, டோக்யோ இந்திய தூதரகத்தில் இருப்பவர்களுக்கே நேதாஜி அஸ்தி இருக்கும் கோவிலைப் பற்றி எதுவும் தெரியாத போது, சம்பந்தம் இல்லாத இவர்கள் எப்படிச் சொல்வார்கள்?) ஒரு வழியாக அந்த சின்ன கோவிலை கண்டு பிடித்து சென்றால் அது பூட்டப்பட்டிருந்தது.
நேதாஜி சிலையருகே ஒரு நிமிடம் நின்று அஞ்சலி செலுத்தி விட்டு, படிக்கட்டில் அமர்ந்த படி நண்பருடன் சிறிது நேரம் பேசி விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.
ஜப்பானில் இருக்கும் நண்பர்கள் / ஜப்பானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கே செல்ல விரும்பினால், Shinjuku-லிருந்து Ogikubo செல்லும் தொடர் வண்டியில் ஏறி, Higashi koenji நிலையத்தில் இறங்கி, Tokyo-to, Suginami-ku, Wada 3 Chome 30-20 என்ற விலாசத்தில் இருக்கும் புத்த கோவிலுக்கு செல்லவும்.
இந்த இடுகையை சரியாக அவரது நினைவு நாளன்று வெளியிட வேண்டுமென்று எண்ணினேன், முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
Posted by Joe at Thursday, August 20, 2009 Reactions:
Labels: டோக்யோ, நேதாஜி, ரெண்கோஜி ஆலயம்
27 comments:
கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி said...
jai hind
21 August 2009 06:39
சுல்தான் said...
எல்லா காலத்திலும் தலைமையில் இருப்பவர்கள் அல்லது பிரபலமானவர்கள் தனக்கு பிடிக்காதவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் அழுத்தி வைப்பது நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் இந்த தலைவன் இறந்த பிறகும் அல்லது இறந்ததாக சொல்லப்பட்ட பின்னரும் உரிய மரியாதையைக் கொடுக்காதது மிகப்பெரிய அவலம்தான்.
ஆ.ஞானசேகரன் said...
ஒரு இறுக்கமான பதிவு நண்பா,...
நேதாஜியின் நினைவுகளை இந்திய அரசு மறக்கடிக்கப்பட்ட நுண் அரசியல் என்வென்றுதான் புரியவில்லை
Triumph said...
மன்னிக்க வேண்டும். எனக்கு உலகில் பிடிக்காத / இவர்கள் போல வாழவே கூடாது என்று நான் நினைக்கும் இருவரில் காந்தியும் ஒருவர். மற்றவர் புத்தர். எங்கள் வீட்டில் முதன் முதலில் வந்த ஆனந்த விகடனில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் வரை வந்த ஆனந்த விகடன்கள் எங்கள் வீட்டு லைபிரரியில் உண்டு. அதில் ஒன்றில், பகத் சிங்கின் சாவு பற்றி இருந்தது. அதாவது, காந்தி தான் காட்டிய அகிம்சையில் போராடாது ஆயுதம் ஏந்தியது பகத் சிங் போராடியதில் அதிருப்தி அடைந்ததால், பகத் சிங்கை காப்பாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் காப்பாற்றாது விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்கள். 21 வயதில் பகத் சிங் சாவதற்கு காந்தியும் ஒரு காரணமே.
யுத்தத்தினால், எல்லா புத்தகங்களும் அழிந்துவிட்டன. முடிந்தால், ஆனந்த விகடனிடம் அவர்களின் பழைய புத்தங்களை வாங்கிப் பாருங்கள்.
சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை, காந்தி பெற்றது போல் நினைத்து தேச பிதா என்று அவரைக் கூப்பிடும் முட்டாள்களுக்கு எப்போது தான் புத்தி வருமோ தெரியாது... எப்படி ஐயா காந்தியை மாகான் என்கிறீர்கள். தன் சுய கட்டுப்பாடைப் பரிசோதிப்பதற்காக, தன் மனைவியை வெற்றுடலுடன் இருக்கும் படி கூறி அந்த அறையில் அவரைத் தொடாது இரண்டு மூன்று நாட்கள் இருந்து காட்டினாராம். நான் கஸ்தூரி பாயாக இருந்து இருந்தால், செருப்பாலேயே அடித்திருப்பேன். தன் மனைவி ஒரு உயிருள்ள பெண் என்பதை மறந்து இப்படி அறையில் வைத்து தன் சுய கட்டுப்பாட்டை சோதித்த இராட்சதன் தேச பிதாவா?
நீண்டகாலம் தான் வாழ என்று தன் சலத்தை தானே குடித்த மாகான் அல்லவா காந்தி... எப்படி ஐயா அந்த அற்ப மனிதனை தேச பிதா என்று கூறுகிறீர்கள்.
ஞானம் பெற போகும் போது மனைவியிடமோ யாரிடமோ கூறாது திருட்டுத்தனமாக மாளிகையை விட்டு ஓடிய கோழையை கடவுள் என்று துதிக்கும் மூடர்களைக் காணும் போது எனக்கு வரும் கோபம் கட்டுக்கடங்காதது. கோழையை புத்தர் என்று போற்றுவதை எப்போதய்யா நிறுத்தப் போகிறீர்கள்.
இந்தியாவும் இலங்கையும் சாபப்பட்ட பூமி. என்ன செய்வது தலை விதி.. வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான்... .
கார்த்திகைப் பாண்டியன் said...
அருமையான பகிர்வு நண்பா.. தலைப்பில் இருக்கும் உண்மை சுடுகிறது.. நான் பெரிதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.. கடைசி வரை அவருடைய மரணம் பற்றிய தகவல்கள் கிடைக்காது கொடுமை..
சூரியன் said...
சுபாஷ் -- வீரத்திருமகன் .பல பேருக்கு காந்திய தெரியும் ஆனா மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது .. சுபாஷ் சில பேருக்கு தெரிந்தாலும் அவர்களின் மனதில் என்றும் இருப்பவர்..
எனக்குள்ளும் ..
http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_21.html
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
நண்பர் ஜோ
ரொம்ப அருமையான பதிவுங்க
மகாத்மா சுபாச்துடன் சேராததற்கு முக்கிய காரணம்
சுபாஷ் ஹிட்லருடன் வைத்த கூட்டு.
என்ன தான் நம் நாட்டுக்கு சுதந்திரம்
வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும் பதினெட்டு லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லருடன் கைகோர்க்க சுபாஷை போல காந்திக்கு மனம் வரவில்லை.
நமக்கு சுதந்திரம் கிடைத்தும் என்ன பிரயோசனம்.
எங்கு பார்த்தாலும் ஜாதி,மத வெறி.
நீங்கள் முன்பே உங்கள் கட்டுரையில் சொன்னது போல இந்தியர்தாம் சிறந்த ரேசிஸ்ட் -இனவெறியர்.
jothi said...
ஜோ சூப்பர்.
ஆங்கிலேயன் செய்தது கொள்ளை என்றால் காங்கிரஸ்காரன் செய்தது கொலை. சமீபத்தில் கூட ஜாஸ்வந்தின் புத்தகம் நேரை கிழித்துப் போட்டது. தமிழ் நாட்டில் எத்தனை பேர் இது போல நசுக்கபபட்டார்கள்??
Joe said...
நன்றி சூரியன்.
நன்றி பாண்டியன் : இணையத்தில் தேடிப் பாருங்கள், நேதாஜியைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன.
நன்றி (என் பக்கம்) பிரதீப் : வரலாற்றில் ஆர்வமுள்ள நீங்கள் இந்த இடுகையை விரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
நன்றி தங்கம் : அழுத்தமான கருத்துகள் கொண்ட பின்னூட்டம். அட்லி பிரபு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குமுன் அளித்த பேட்டியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்கு குறைவு என்று கூறியிருக்கிறார். இருசாராருக்கிடையே சர்ச்சை வேண்டாமென்று தான் சில தகவல்களைப் பற்றி எழுதவில்லை.
நன்றி கார்த்திகேயன் : வெள்ளையர்கள் போய் நாமே தேர்ந்தெடுக்கும் கொள்ளையர்கள்களிடம் ஆட்சி மாறியிருக்கிறது. போஸ் ஜப்பான், ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்தது தவறாக இருக்கலாம், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு முக்கியமானது.
நன்றி யாசவி : 1945-இல் Bose மர்மமாகக் கொல்லப்பட்டது, 1947-இல் உயிரோடு இருந்தால் அவர் இந்த நாட்டின் பிரதமர் ஆகியிருப்பார் என்ற காரணமாகக் கூட இருக்கலாம்.
நன்றி சுல்தான்.
நன்றி கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி.
நன்றி ஜோதி : சுதந்திரத்தில் தென்னிந்தியர்கள் பங்கு பெரிதாகக் காண்பிக்கப்படவில்லை என்பதும் உண்மை.
நன்றி குறையொன்றுமில்லை : இந்த இடுகையில் உங்கள் பின்னூட்டம் ஸ்பாம் போல இருக்கிறது ;-). போதுமய்யா விருதுகள் வழங்கியதும் வாங்கியதும்!
Pradeep said...
ரொம்ப நல்ல விஷயம் ஜோ. நீங்க சொன்ன மாதிரி இங்க எல்லார்கிடேயும் கேட்டேன். ஆனால் ஒருத்தருக்கு கூட தெரியல இந்த இடத்த.
நான் இங்க போய் பார்த்துட்டு சொல்றேன்.
Triumph said...
I used to read lot. And we had a huge library @ home. Now nothing. I had Bhagat Singh's Pic in my room. also Gandhi's pic as well. One to remind that I should be like him and the other one to remind not to be like him.
I used to read lot abt Indian history. The credit goes to palaniyappa brother's "Naattukku Uzhaitha Nallavarkal". And so many other books. I forgot all now - thats sad....
Gifariz said...
///(இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்களிப்பை விட நேதாஜியின் பங்களிப்பு அதிகம் என்று வாதிடும் மக்களுமுண்டு)///
இதை உண்மை என்று சொன்னால் யார் நம்புவார்கள்.... அந்தளவுக்கு மீடியாக்கள் மாற்றிவிட்டது எங்களை....
///...பதினெட்டு லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லருடன்///
இது யூதர்கள் ஆடிய நாடகம் என்று இப்போது நிருபிக்கப்பட்டு விட்டது
Joe said...
நன்றி கிபாரிஸ் : ஊடகங்கள் அரசாங்கங்கள் ஆட்டும் பொம்மையாக இருக்கின்றன இந்த நாட்டில்.
நன்றி தங்கம் : மீள்வரவுக்கும், கருத்துக்கும்.
நன்றி தேவன்.
நன்றி பிரதீப் : நீங்கள் தங்கியிருக்கும் கோதந்தா-விலிருந்து, அங்கே செல்வதற்கு அரை மணி நேரம் ஆகும். நல்ல வேளை அங்கிருக்கும் இந்திய நண்பர்கள் "யார் போஸ்?" என்று கேட்காமல் விட்டார்களே!
நமது நாட்டு சுதந்திரத்துக்கு உழைத்த ஒரு மாமனிதனுக்கு செய்யும் ஒரு மரியாதை என்பதற்காக அங்கே போனால் தான் உண்டு. மற்றபடி அந்த இடத்தில் வேறெந்த கேளிக்கைகளுமில்லை என்பதால் நம்மவர்கள் அதிகம் போவதில்லை என்று நினைக்கிறேன். (வங்காளிகள் அங்கே வருடம்தோறும் அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள்)
நன்றி வால்பையன்.
நன்றி ஆகாய மனிதன்.
sikkandar said...
அருமையான ஒரு பதிவு.... நமது நாட்டில் எல்லா ரூபாய் நூட்டுகளிலும் காந்தி யை திவர யாருடைய போடோவையும் போடுவது இல்லை....நேதாஜி போட்டோவை போட்டு அவருக்கு மரியாதையை செலுத்த நம்முடைய அரசாங்கத்திற்கு ஏன் அறிவு வரவில்லை?
Triumph said...
This post has been removed by the author.
22 August 2009 17:49
Triumph said...
ha ha... There starts the revolution. U guys can make a difference. Teach ur kids the truth. Dont let them to believe the lies that you guys had studied in school. Thats a revolution too. Who knows in next generation you could see BS and SCB's pics printed in the notes... :D Revolution is not just fighting with arms. Bringing up your kids with truth is also revolution. Make them to become free thinkers too. Jai Hindh....
குறை ஒன்றும் இல்லை !!! said...
//இந்த இடுகையில் உங்கள் பின்னூட்டம் ஸ்பாம் போல இருக்கிறது ;-). போதுமய்யா விருதுகள் வழங்கியதும் வாங்கியதும்!//
மன்னிக்க அதை அகற்றி விட்டேன்.. இனிமேல் இந்த தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.. மீண்டும் மன்னிக்க!!
Joe said...
நன்றி சிக்கந்தர் : மற்றவர்களெல்லாம் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?
நன்றி தங்கம்.
நன்றி குறையொன்றுமில்லை : நான் உங்க பின்னூட்டத்தை ஸ்பாம்-நு சொன்னா நீங்க அதை நீக்காமே, உங்க இடுகையில என்னோட பேரை நீக்கிருக்கீங்க? நல்லது தான், எனக்கு பத்துப் பேரை தேடுற வேலை மிச்சம். ;-)
டக்ளஸ்... said...
ஒரு தனி மனுஷனா நின்னு, தனக்கு கீழ ஒரு மிகப்பெரிய ராணுவத்தையே ஆளுமை செய்து, வெள்ளையர்களின் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த ஒரு மாபெரும் வீரன். ஒரு நாட்டிற்கு ராணுவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் போஸ்.
Thanks to Mr.Joe, http://joeanand.blogspot.com
Wednesday, October 21, 2009
இளைஞர்களின் காலம்!
தமிழ்நாட்டில்உருவாக்கப்படக் கூடிய “புதிய தண்ணீர் வழிகளைப் பற்றி சென்ற இதழில் சொல்லி யிருந்தேன் அல்லவா, அது குறித்து எனக்குத் திருச்சி யைச் சேர்ந்த ஒரு இளைஞர் அனுப்பியிருந்த ஈ-மெயி லில் மிகவும் சிலாகித்துப் பாராட்டியிருந்தார். "இந்தக் கனவு மட்டும் பலித்துவிட்டால் இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டி மாநிலமாக தமிழகம் மாறும்'’என்று குறிப்பிட்டிருந்த அவர் ஒரு முக்கியமான விஷயத் தைப் பற்றிய சந்தேகத்தைக் கேட்டிருந்தார்.
"நீங்கள் அந்தத் திட் டத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியிருந்தீர்கள். அது ஒரு மிகப் பிருமாண்டமானத் திட்ட மாக எனக்குத் தோன்றுகிறது. அதைச் செய்து முடிக்க எவ்வளவு செலவாகும்? அந்தப் பணம் எங்கிருந்து கிடைக்கும்?'’’ என்று கேட்டிருந்தார்.
அவருக்கு இந்த அத்தியாயத் தில் பதில் சொல்கிறேன். பத்து ஆண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய இந்த மெகா திட்டம் முழுக்க செலவு ரீதியாகப் பார்க்கப் போனால் முழுக்க சாத்தியமானது. மின்சார ஜெனரேஷனில் இருந்து நீர்தேக் கங்கள், அணைகள் உருவாக்குவது வரை இந்தத் திட்டத்துக்கு பட்ஜெட் "பிரேக் அப்' சரியாகப் போடப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு எஸ்டிமேட் 36,000 கோடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப் படும் செலவுகளை ஒப்பீட் டளவில் பார்க்கும் போது இது வழக்கமானதே.
லார்டு கெயின்ஸ் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒரு காலகட்டத்தில் பொருளா தார ரீதியில் பெரும் பின்னடை வைச் சந்தித்த போது அவர் அர சாங்கங்கள் பொதுப்பணித்துறை யில் பிருமாண்டமான திட்டங் களை ஆரம்பித்து (அணைகள், ரயில்வே, சுரங்கங் கள் அமைப்பது போன்றவை) அதில் பெரும் பணத்தைக் கொட்ட வேண்டும் (public spending) என்று ஆலோசனை சொன்னார். அப்படிக் கொட்டப்படும் பணமானது பலவழிகளில் சுழன்று, மதிப்பு அதிகமாகி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்பது அவருடைய கருத்து. அவர் சொன்ன யோசனையை அமல்படுத்திப் பார்த்த போது அது மிக நல்ல பலனைத் தந்தது.
இந்தப் புதிய தண்ணீர்வழிச் சாலைத் திட்டமும் அப்படிப் பட்ட ஒன்றுதான். இதில் பல்லாயிரம் பேர்களுக்கு வேலையும், பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களும், பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்களும் கிடைக்கும். இஞ்சினியரிங் மற்றும் தொழில்நுட்பத் துறை களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர் களுக்கு இந்தத் திட்டம் ஒரு சவாலாக இருந்து அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும். சிவில், எலக்ட்ரானிக் மற்றும் மெக்கானிக் கல் இஞ்சினியர்கள், பூகோளவியல் நிபுணர்கள், கம்ப்யூட்டர் துறையினர், ஹைடிராலிக் நிபுணர் கள், ரிமோட் சென்சிங் விஞ்ஞானிகள், கார்ட்டோகிராபர்கள், மேனேஜ்மெண்ட் துறையினர் என்று ஒரு பெரும் தொழிநுட்ப அணியே இந்தத் திட்டத்துக்காக உழைக்கும். அப்போது வெளிப்படக் கூடிய எனர்ஜி என்பது விவரிக்க முடியாதது.
கடின உழைப்பு, திட்டமிடுதல், தலை மைப் பண்புடன் வழிநடத்துதல், நேர்மையான செலவழிப்பு, என்று எல்லாமும் சேர்ந்து இந்தத் திட்டம் நிறைவேறும்போது இதில் போடப்பட்ட பணமானது பொருளாதாரச் சுழற்சியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் புதிதாக அமையும் தண்ணீர் வழிகள் வருவாயைத் தர ஆரம்பிக்கும்.
அந்த வருவாய் எவ்வளவு இருக்கும் என்பது கூட திட்ட வரைவில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வருடத்திற்கு 4,600 கோடிகள் இதன் மூலம் ஆண்டு தோறும் வருவாய் கிடைக்கும். (மின்சாரம்- 2150 கோடி, தண்ணீர் வழிப் போக்குவரத்து 1350, மீன்பிடித்தல், குடிநீர், சுற்றுலா, மூலமாக இந்த வருவாய் கிடைக்கும்.) இப்படி நதிகளை இணைப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்கிறார்கள் சிலர். ஆனால் இந்தத் திட்ட வரைவோ, சுற்றுச்சூழலுக்கு சாதகமான பல விஷ யங்கள் இதன் மூலம் உரு வாகும் என்கிறது.
"ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர்' எனப்படும் நீர்வழி மின்சாரம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஒன்று. அணுமின் நிலையம் போன்றோ, நிலக்கரி சக்தி போன்றோ இது இயற் கையை பாதிக்காது. இந்தப் புதிய தண்ணீர் பாதைகள் புதிய வனப் பகுதிகளை அது செல்லும் வழிகளில் உருவாக்கும். சாலைவழிப் போக்கு வரத்தில் செலவாகும் எரிபொருள் சக்தியில் 10 சதவீதமே இந்தத் தண்ணீர் வழிப் போக்குவரத்தில் செலவாகும். புதிய தண்ணீர் வழிகளில் மீன்வளமும் பெருகும். இப்படி இயற்கைக்கு உகந்த எத்தனையோ நல்ல விஷயங்கள் நதிநீர் இணைப்பில் இருக்கின்றன.
இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும் என்பது அடுத்த கேள்வி. நாட்டின் வளர்ச்சிக்காக உலக வங்கி வழங்கக் கூடிய கடனை இந்தத் திட்டத்திற்காக நாம் பெறலாம் அல்லதுBOOT (BUILD, OPERATE, OWN AND TRANSFER ) முறையிலும் இதற்கான நிதியைத் திரட்ட முடியும். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் நதிநீர் இணைப்புக்கும், தேசிய நீரோட்டங்களை இணைப்பதற்கும் ஒரு முன்கட்ட அமைப்பாக இருக்கும். ஆஹா அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது.
"நிலவில் இருந்து பார்க்கும்போது வெறும் கண்ணா லேயே பூமியில் ஒரு கோடுபோல தெரியக்கூடியது' என்று சீனப்பெருஞ்சுவரைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது மனிதன் செய்து காட்டிய சாதனை.
அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தியமே. அதில் இன்னும் சந்தேகக் கண் கொண்டு "அதெல்லாம் நடக்கிற காரியமா' என்று மலைப்பவர் களுக்கு நான் அய்யன் திருவள்ளுவனின் குறள் ஒன்றையே பதிலாகத் தருகிறேன்.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் “
இதன் பொருள், “ தகுந்த கருவிகளோடு, காலம் அறிந்து செயல்பட்டால் வெற்றியடைவ தற்கு முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.’’
(தொடரும்)
விருதை இளைஞர்களுக்கு கொடு!
-ஸ்டாலின் குணசேகரன்!
மேதகு ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவரை சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்திலுள்ள அவரது அறையில் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற் றேன். அதற்கும் சில நாட்களுக்கு முன்புதான், என்னுடைய இரண்டு பாகங் கள் அடங்கிய "விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலினை என்னுடைய நண்பர் திரைப்பட இயக்குநர் நா.அன்பரசு கலாம் அவர் களிடம் என் சார்பில் நேரில் சந்தித்து வழங்கியிருந்தார்.
எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்தது. கலாம் அவர் களின் உதவியாளர் ""உங்க ளுக்கு இரண்டு நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள் ளது'' என்ற எச்சரிக்கையுடன் என்னை அறைக்குள் அனுப்பி னார். உள்ளே சென்ற எனக்கு என்னுடைய "விடுதலை வேள்வியில் தமிழகம்' நூலின் இரண்டு பாகங்களும் கலாம் அவர்களின் மேசை மீது இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது. இந் நூலைப் பற்றி விரிவாகப் பேசினார். நான் இந்நூலின் உருவாக்கம் குறித்துப் பேசிய போதும் உன் னிப்பாக கவனித்தார். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. உதவியாளர் எனக்கு இரண்டு நிமிடங்கள்தான் என்று சொன்னது எனக்கு நினைவி ருந்தாலும் ஆர்வமாக ஐயா பேசிக் கொண்டிருந்தபோது நான் இடை மறிக்க முன்வரவில்லை.
உதவியாளர் உள்ளே நுழைந் தார். வெளியில் சிலர் காத்துக் கொண்டிருப்பதை நினைவூட்டவே அவர் அறைக்குள் வந்திருப்பார் போலும். அதைப் புரிந்து கொண்ட கலாம் அவர்கள் ""வெளியே இருப்பவர்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே வரச் சொல் லுங்கள்'' என்று உதவி யாளரிடத்தில் சொல்லிவிட்டு என்னை அந்த அறைக் குள்ளேயே அடுத்த நாற்காலியில் அமரச் சொன்னார்.
அடுத்து வந்த ஒருவர் ""நாங்கள் லண்டனில் வாழும் தமிழர்கள். தங்களுக்கு லண்ட னில் ஒரு விருது கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கடிதம் போட்டு தங்களை அழைத் துள்ளோம்.
இப்போது இந்தியா வந்துள்ள நாங்கள் தங்களை நேரில் பார்த்தே அழைத்து விடலாம் என்று வந்தோம்'' என்று சொல்லி முடிப்பதற்குள் ""எனக்கு என்னுடைய திற மைக்கும் தகுதிக்கும் ஏற்ப எல்லா அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. மிகச் சிறந்த சாதனைகளை செய்து வருகிற இளம் விஞ்ஞானி களுக்கு அந்த விருதுகளைக் கொடுத்துப் பாராட்டுங்கள். மன்னிக்க வேண்டும். எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை'' என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கலாம். வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி னார்கள். இப்படி அனைவ ரையும் கட... கடவென அனுப்பிவிட்டு கடைசியாக மீண்டும் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
"இரண்டே நிமிடங்கள்' என்று நிபந்தனை விதிக் கப்பட்ட நான் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கலாம் அவர்களிடம் உரையாடி விட்டு மகிழ்ச்சியுடன் கை கூப்பி விடைபெற்றேன்.
""ஆமாம்... மறந்தே போய்விட்டேன்'' என்று சொல்லியவாறே "விடுதலை வேள்வியில் தமிழகம்' நூலின் அட்டையை தூக்கியவராய் முதல் பக்கத்தில் ""இந்த இடத்தில் உங்கள் டெலிபோன் நெம்பரை எழுதுங்கள்... பெரிய எழுத்தில் எழுத வேண்டும். கூடவே உங்கள் ஊர், கோட் நம்பரையும் எழுதுங்கள். இப் புத்தகத்தைப் படிக்கிறபோது... அது இரவு நேரமாக இருந் தாலும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே போன் செய்து உங்களிடம் பேசுவேன்'' என்று சிரித்துக் கொண்டே சொல்லியவர்தான் கலாம். எவ்வளவு பெரிய மனிதர் அவர்.
Thanks to : nakkeeran megazine (Gopal)
Tuesday, October 20, 2009
துன்பங்கள் ஏன்?
கி.மு.5-ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த யோபு என்ற நீதிமானைப் பற்றி பைபிள் நீண்டதொரு பதிவு செய்துள்ளது. மனித இனம் பூமியில் தடம் பதித்த நாள்தொட்டு இன்றுவரை விடையின் றித் தொடரும் கேள்வியான ""துன்பங்கள் ஏன்?'' என்பதற்கு பதில் தேட முயன்ற பதிவு அது. நம்பிக்கையில் நிலைத்து நின்றால் எத்துன்பத்தையும் வெல்லலாம் என்பதாக செய்தி சொல்லப்பட்டாலும் "துன்பம் ஏன்' என்ற கேள்விக்கு விடை காணாமலேயே யோபு குறித்த நூல் முடியும். ஆனால் அந்நூலில் வேதனை வெளிப்பாடுகள் பதிவு செய்யப்படும் விதம் யார் படித்தாலும் மறக்க முடியாதது.
யோபுவை மாசற்றவர், நேர்மையுள்ளவர், இறைவனுக்கு அஞ்சி தீமையை விலக்கி நடந்தவர், அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும் ஐநூறு ஏர் மாடுகளும் ஐநூறு பெட்டைக் கழுதைகளும் உடைமைகளா யிருந்தன என்றெல்லாம் அந்த ஆகம நூல் அறிமுகம் செய்யும். காலத்தின் கோலத்தில் செல்வங்களை யோபு இழந்து பராரியாகிறார், பத்து பிள்ளைகளையும் மண் வீடு இடிந்து மூடிக் கொள்கிறது. உச்சமாக அவருக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை அருவருப்பான அழி புண் நோய் பற்றிக் கொள்கிறது.
ஆறுதல் சொல்ல நெடுந்தூரத்திலிருந்து வரும் தன் நண்பர்களான ஏலிப்பாஸ், பால்தாத், சோப்பார் மூவரிடமும் யோபு இவ்வாறு புலம்புவார்: ""நான் பிறந்த அந்த, நாள் அழிக! "ஆண் குழந்தையொன்று கருவாகியுள்ளது' என்று சொல்லிய அந்த இரவு தொலைக! பேயிருட்டு அந்த நாளை பீடிக்கட்டும்! ஆண்டுக் கணக்கின் நாட்களுடன் அவ்விரவு எண்ணப் படாதொழிக! அவ்விரவின் விடிகாலை விண்மீன்கள் இருண்டொழிக! பிறக்கும்போதே நான் ஏன் சாகாமற் போனேன்? கருப்பையினின்று வெளிப் பட்ட உடனேயே நான் அழிந்து போயிருக் கக்கூடாதா? உள்ளம் கசந்து போனவனுக்கு உயிர் எதற்கு? என் வேதனைக் குரல் நீராய் ஓடுகிறது. பெருமூச்சுக்களே எனது உண வாயிற்று!''.
ஆம், வன்னிப் பகுதியின் வதை முகாம் களில் எமது மக்களுக்கும் இன்று பெருமூச்சுக் களே அனுதின உணவு. அக்டோபரில் பெருமழை வரும், பேரவலம் அம்மக்களைச் சூழும் என்று கடந்த வாரம் நாம் எழுதி முடிக்கவில்லை- கால் தடுக்கி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஆகஸ்ட் மாதத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை மழை பெய்தது. மூன்று மணி நேர மழையில் கோழி-முயல் கூடுகள்போல் தமிழ் மக்களுக்குத் தரப்பட்ட பாலித்தீன் குடிசைகள் நீரில் மிதந்தன. கூரைகள் காற்றோடு போயின. பல்லாயிரம் மக்கள் ஆடு, மாடுகள் போல் அடையுண்டு கிடக்கும் அத்திறந்த வெளிச் சிறையின் மலக்கிணறுகளும் குடிநீர் கிணறு களும் ஒன்றாய் கலந்தன. இரண்டு நாட்களாய் தீ மூட்டி அடுப்பமைக்க முடியாமல் எம் மக்கள் பெருமூச்சை உணவாக்கினார்கள். பாம்பு, பூரான், புழுக்களின் படையெடுப்பு, நோய்களின் அணிவகுப்பு. மூன்று மணி நேர மழைக்கே இந்நிலையென்றால் அக்டோபர் மாத பெருமழைக் கொடுமை எவ்வாறிருக்குமென எண்ணிப் பாருங்கள்!?
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இது தொடர்பாக அக்கறையுடன் கடந்த திங்கட்கிழமையன்று பிரதம ருக்கு எழுதிய கடிதத்தில், உள்நாட்டு அகதிகளாய் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்திட இந்தியா அரசு அளவிலும் அரசியல்ரீதியாகவும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்' என்று எழுதியுள்ளார். முதல்வரின் கவன ஈர்ப்பு மற்றும் வேண்டுதல் கடிதம் மிகவும் வரவேற்கத்தக்கது. இறையருளை நாம் மன்றாடி யாசிப்பது ஒன்றே: முதல்வரது கடிதத்தின் தொடர்ச்சியாக தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், முக்கிய அமைப்பு களின் தலைவர்கள் ஓரணியாக பிரதமரை சந்தித்து எக்குற்றமும் செய்யாத அப்பாவி மக்களை யுத்தக் குற்றவாளிகள்போல் அடைத்து வைத்திருக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி, உடனடியாக விடுதலை செய்து அவர்கள் தம் வாழ்விடங்களுக்குத் திரும்பிட வழி செய்திடும் அரசியல் அழுத்தம் கொணர வேண்டும். மாண்புமிகு முதல்வரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், ஏனைய முக்கிய தலைவர்களும் இது விஷயத்தில் ஓரணியாக புதுடில்லி சென்றார்களென்றால் அது, ஈழப்பிரச்சனை அனைத்துலகமயமாக்கப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை உலக அளவில் உருவாக்கும்.
வன்னிப் பகுதியெங்கும் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது, ஆதலால்தான் இம்மக்களை உடனடியாக வாழ்விடங்களுக்கு அனுப்ப முடியவில்லை, கண்ணி வெடிகளை முற்றிலுமாய் அகற்ற ஆறு மாதங்கள் ஆகலாம், ஓராண்டு மூன்றாண்டு கள்வரை ஆகலாம் என்ற இலங்கை அரசின் மோசடி நிறைந்த இன அழித்தல் தொடர்திட்டப் பொய்யினை முதலில் உடைத்தெறிந்து அம்பலப் படுத்துகிற அவசரக் கடமை நமக் கிருக்கிறது. இலங்கை அரசின் கேவலமான இப்பொய்க்கு இந்திய அதிகார வர்க்கமும் இணைந்து பக்க வாத்தியம் வாசிக்கிறதென்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பயங்கரவாதப் பூச்சாண்டி அச்சுறுத்தல் களுக்கெல்லாம் அப்பால் அறநெறித் திமிறலும் மீறலும் நடத்த வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் நாம் நிற்கிறோம்.
வன்னி நிலத்தின் 75 சத பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை. கிளிநொச்சியில் வாழ்ந்த மக்கள் புதுக்குடியிருப்பு, முள்ளி வாய்க்கால் நந்திக்கடல் வரை சென்றதெப்படி? மூன்றரை- நான்கு லட்சம் மக்கள் மீண்டும் தப்பித்து வவுனியா வரை வந்ததெப்படி? நிலமெலாம் கண்ணி வெடிகளென்றால் நான்கு லட்சம் மக்கள் எப்படி நீண்ட நெடும்பயணம் செய்திருக்க முடியும்? கண்ணிவெடிப் பொய் பாதித் தமிழர்களை கொன் றழிக்கவும் மீதிபேரை வாழ முடியாதவர்களாகவும் ஆக்கும் கோத்தபய்யா கொலை சேமிப்புத் திட்டம்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உயர் ஆணையமும், அனைத்துலக மன்னிப்பு சபை யும் (Amnesty International) கடந்த வாரம் மிகத் தெளிவாக தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன : Freedom of movement is the first and fundamental right of the internally displaced people. ""உள்நாட்டு அகதிகளைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும் இடத்திற்கு நகர்கின்ற உரிமை முதலானதும், அடிப்படையானதும் ஆகும்.'' ஏனென்றால் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் அப்பாவி மக்கள், யுத்தக் குற்றவாளிகளல்ல. ஏனென்றால், ராஜபக்சே-கோத்தபய்யா கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது இன அழித்தல் திட்டத்தை முழுமை செய்வதற்காக. ஏனென்றால், தமிழர்களை அடைத்து வைத்துக் கொண்டு சிங்களவர்களை வன்னிப்பகுதியில் ராணுவம் குடியமர்த்தத் தொடங்கியுள்ளதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே நண்பர்களே புலிகளின் பாதுகாப்புக் கவசத்தை இழந்து ஏதிலிகளாய் நிற்கும் அம்மக்களுக்கு தமிழர்களாகிய நாம் அரசியல் கவசமாய் எழுவோம்.
1997-ல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வன்னி விளாங்குளம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த எமது வானொலி நேயர் பேதுருப் பிள்ளை எழுதிய மறக்க முடியாத கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன. மனிதருக்கு அப்போதே வயது 70-க்கு அருகில். சர்க்கரை, இதய வியாதிகளெல்லாம் உள்ளவர். அவரைப் பற்றி ஒரு தருணத்தில் விரிவாகச் சொல்ல வேண்டும். அவர் எழுதியிருந்தார், ""பருத்தித்துறை என் சொந்த ஊர். சொந்த மண்ணிலேயே அகதியாகி வன்னி விளாங்குளம் வந்துள்ளோம். காட்டு வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நான் கொடுக்க வேண்டிய விலை அதுவென்றால் நான் காட்டுவாசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.'' -எழுபது வயதில் இந்தத் திமிறலென்றால் உங்களுக்கும் எனக்கும் எப்படி இருக்க வேண்டும்? சுதந்திரத்திற்கு இணையாக உலகில் வேறெந்த விழுமியங்களும் இல்லை.
இந்த வன்னி மக்கள் இறுதிவரை களம்நின்று போராடியது உண்மையில் அமெரிக்கா போல் வளம் கொழித்துப் பெருவாழ்வு வாழ வேண்டுமென்ற கனவுகளோடல்ல. சிங்களவனின் அதிகாரமும் அழிச்சாட்டியமும் இல்லாமல் தங்கள் குடிசையில், வளவில் சுதந்திரமாய் காற்றை சுவாசித்துக்கொண்டு தன்மதிப்புடன் வாழும் விருப்போடு மட்டும்தான். ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த விலை நினைத்துப் பார்க்க முடியாதது. சிவரூபன் இதுவரை சொன்னது கொஞ்சமே. இதோ மேலும் தொடர்கிறார்.
""என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். "கடவுளே' என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.
""தம்பி... உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ'' என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.
தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.
சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே... எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)
Subscribe to:
Posts (Atom)