Tuesday, December 23, 2008

சும்மா அதிருதில்ல‏!

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால்
அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
==================================================
கவிதை:
ஜோதிகா கொஞ்சம் குண்டு
பூவுல இருக்கும் வண்டு
நல்லவங்க செய்யறது தொண்டு
நீயோ மர மண்டு
ஆனாலும்,நீதான் என் உயிர் ஃபிரண்டு!

காலை வணக்கம். ==================================================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். ==================================================
மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும். ==================================================
நம்ம நட்புக்கு நல்ல ரெண்டு உதாரணம்.

தளபதி படத்துல நீ ரஜினின்னா நான் மம்முட்டி
பிதாமகன்ல நீ விக்ரம்னா நான் சூர்யா.
என்ன பாக்கறே?
எப்பவுமே நான்தான்டா முதலில் சாகணும்,

என் நண்பா.No No அழக்கூடாது
Control yourself.
==============================
ஒரு சிறு கவிதை:
மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர்விட்டது தீக்குச்சி.
நினைத்து நினைத்து உருகியதுமெழுகுவர்த்தி.
==============================
நண்பன் 1: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா.
நண்பன் 2: கார் ஓட்டிப் பாரேன்.
==============================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள். ஏன்னா அறிவு......சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
==================================================
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: 'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
=============================================
-
Thanks to : Subram, Vijaya Balan, Doha - Qatar

No comments: