Sunday, December 6, 2009

இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சி காங்கிரஸ் !!!!!! ??????????????


இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸ், தனது 125வது வயதில் இம்மாதம் அடியெடுத்து வைக்கிறது. அதன் தலைவர் சோனியா தனது 64வது பிறந்தநாளையும் வரும் 9ம் தேதி கொண்டாடுகிறார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் காங்கிரஸ். ஏ.ஓ.ஹ்யூம் என்ற வெள்ளையரால் இந்தக் கட்சி துவக்கப்பட்டது.




பாரம்பரியம் கொண்ட இக்கட்சியின் நீண்டகாலத் தலைவர் என்று பெயர் எடுத்தவர், பிரதமர் பதவிக்குத் தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டும் அதை நிராகரித்தவர் என்ற பெருமை சோனியாவுக்கு உண்டு. தனி ஆட்சி என்ற காங்கிரஸ் கொள்கையை கூட்டணித் தத்துவத்திற்கு மாற்றிய முதல் தலைவரும் கூட.காங்கிரசில் அன்னிபெசன்ட் அம்மையார், நெல்லே சென் குப்தா போன்ற வெளிநாட்டுப் பெண்மணிகள் தலைவராக இருந்தது விடுதலைக்கு முன்னர். இத்தாலியில் பிறந்து இந்தியாவில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்மணி, இந்நாட்டின் மிகப் பெரிய கட்சிக்குத் தலைவரானது விடுதலைக்குப் பின்னர் நடந்த வரலாறு.








நேரு குடும்பத்தில் மோதிலால், ஜவகர்லால், இந்திரா, ராஜிவ் இவர்களுக்குப் பிறகு ஐந்தாவது நபராகத் தலைவராகியிருக்கிறார் சோனியா. அவரைத் தொடர்ந்து அவர் மகன் ராகுல், வருங்காலத் தலைவராக அடையாளம் காட்டப்படுகிறார்.சீதாராம் கேசரிக்குப் பிறகு, நிலைகுலைந்து போன கட்சியை தூக்கி நிறுத்திய பெருமை சோனியாவுக்கு உண்டு. ஒரு வெளிநாட்டவர் கட்சித் தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் போன்ற மூத்த தலைவர்களின் அதிருப்தியையும் மீறி கட்சிக்கு தலைமை வகித்து, வலுவூட்டினார். கட்சியின் அனைத்து எம்.பி.,க்களும் தன்னையே பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தபோதும், அப்பதவியை, பொருளாதார மேதை மன்மோகன் சிங்குக்கு விட்டுக் கொடுத்தார்.



அலுவலகம் மாற்றம்: காங்கிரஸ் அலுவலகம் தற்போது அக்பர் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் எண் 24ல் அமைந்த கட்டடம், முன், 1977ல் மூப்பனாருக்கு ஒதுக்கப்பட்ட வீடாகும், அவர் அந்த வீட்டை கட்சிக்கு தந்தார்.மேலும், டில்லியில் பிரிட்டிஷார் கட்டடக்கலையை மாற்றி புதிய பாணி கட்டடம் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதால், தற்போது கட்சி அலுவலகம் தீனதயாள் மார்க் என்ற சாலையில் அமைகிறது. ஜனசங்கத்தின் கொள்கை யை உருவாக்கிய தலைவர் தீனதயாள் உபாத்யாய பெயரில், சாலை அமைந்துள்ளது.ஜனசங்கம், பா.ஜ., சம்பந்தப்பட்ட பெயருடன் கட்சித் தலைமையகம் அமைவதை காங்., விரும்பவில்லை. இதை விரும்பாத அக்கட்சி, விரைவில் தனது அலுவலகத்தின் வாசலை, கொட்லா ரோடு உள்ள பகுதிக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறது.







இந்நிலையில், தற்போதைய அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால், நவீன வசதிகள் மற்றும் பரந்த இடவசதியுடன் கூடிய புதிய அலுவலகத்துக்கு டிச., 28ம் தேதி சோனியா அடிக்கல் நாட்ட இருக்கிறார்.ஓராண்டுக்குள் அமைய உள்ள கட்சித் தலைமையகம் நவீன தகவல் தொடர்பு வசதிகள், நிருபர்கள் சந்திப்பிற்கான அறை என்று எல்லா வசதிகளையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments: